கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

செக்யூலரிசமும் செக்யூலர்மயமாதலும்

மதத்தையும் அரசையும் பிரித்தல் என்று செக்யூலரிசத்தை எளிய முறையில் வரையறுக்கலாம். செக்யூலரிசம் பல்வேறு விதமாக மதச்சார்பற்ற நாடுகளில் வெளிப்படும். இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அது உள்ளடக்கும் (Inclusive) தன்மையில் இருப்பதாகச் சொல்வார்கள். அதுவே பிரான்ஸ் பாணி மதச்சார்பின்மையானது அரசிலிருந்து மதங்களை முற்றிலும் பிரிக்கும் பண்பைக் கொண்டது. அதை ‘லைசிடே’ என்றழைப்பார்கள். துருக்கியின் மதச்சார்பின்மையை ‘லைக்ளிக்’ என்கிறார்கள். அது பிரான்ஸைவிட மதத்தில் நேரடியாகத் தலையிடுகிறது.

இப்படி செக்யூலரிசம் நடைமுறைப்படுத்தப்படுவதில் வித்தியாசங்கள் இருப்பது உண்மையே. அதேசமயம் அவற்றுக்கு மத்தியிலுள்ள பொதுப் பண்பை நாம் கவனிக்கத் தவறக்கூடாது. நவீன தேச அரசு எனும் கட்டமைப்புக்குள் இயங்கும்போது அதன் பண்பை அது எல்லா மதச்சார்பற்ற நாடுகளிலும் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. ஆம், சமயத்தை, சமய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாகச் செல்லரிப்பது அதன் முதன்மையான பொதுப்பண்பு எனலாம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிப்பது ஏன்?

பல ஆண்டுகளாக அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இஸ்ரேல் இருப்பது நமக்குத் தெரியும். அதிலும் காஸா மீது இஸ்ரேல் அரசு இனப்படுகொலையை நிகழ்த்தும்போது அமெரிக்கா அதற்கு பக்கபலமாக நின்று எந்த அளவுக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். 1948ல் இஸ்ரேல் எனும் நாடு உருவான சமயம் தொட்டு (75 ஆண்டுகளாக) இரு நாடுகளுக்கும் மத்தியில் மிக பலமான உறவு இருந்துவருகிறது. இந்த உறவு வலுவாக இருப்பதற்கு 4 முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

86 ஆண்டுகள் தண்டனை: சிறையில் வதைப்படும் Dr.ஆஃபியா

ஆஃபியா சித்தீக் எனும் பெண் டாக்டருக்கு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, உலகின் மிகக் கொடூரமான சிறைகளில் ஒன்றான FMC கார்ஸ்வெல் சிறையில் அவர் வாடிக்கொண்டிருக்கிறார். Prisoner 650, Grey Lady, தேசத்தின் மகள் என அவருக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. ஆஃபியாவுக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும், குடும்பத்தினருக்கும் நேர்ந்த கொடூரத்தை வார்த்தைகளைக் கொண்டு நம்மால் விளக்க முடியாது. Dr.ஆஃபியா யார், அவர் எப்படி சிறை சென்றார், அவரை சிறைவைத்திருப்பது யார், என்ன காரணம் அதற்குச் சொல்லப்படுகிறது என இங்கு பார்ப்போம்.

மேலும் படிக்க
kashmir 370 tamil காணொளிகள் குறும்பதிவுகள் 

சட்டப்பிரிவு 370 நீக்கம்: வரலாறும் அரசியலும்

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மத்திய அரசு ரத்து செய்தது. இந்த முடிவு மக்களையோ, மாநிலங்களவையையோ கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் முறையான விவாதம்கூட இல்லாமல் ஒருதலைபட்சமாக மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் உச்ச நீதிமன்றம் பாஜக அரசின் இந்தச் செயலை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க
babri masjid, gyanvapi masjid காணொளிகள் குறும்பதிவுகள் 

அன்று பாபர் மசூதி, இன்று ஞானவாபி மசூதி, நாளை..?

இன்று உத்தரப் பிரதேசம் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப் ஞானவாபி மசூதியைக் கட்டினார் என்று சொல்லி, அதற்கெதிராக வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அந்த வழக்குக்கு எதிரான ஞானவாபி பள்ளிவாசல் நிர்வாகத்தின் மனுதான் நாளை விசாரணைக்கு வருகிறது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான 450 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 அன்று இந்துத்துவ பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. சரியாக 27 ஆண்டுகள் கழித்து, 2019 நவம்பர் 9ஆம் தேதி மசூதியைத் தகர்த்த அந்த இந்துத்துவ வன்முறை கும்பலிடமே மசூதி அமைந்திருந்த நிலம் முழுவதுமாக ஒப்படைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் பாஜக அரசை அறக்கட்டளை அமைத்து கோவில் கட்டிக்கொள்ளுங்கள் என்று ஒரு அநீதியான தீர்ப்பை வழங்கியது. 5 ஏக்கரில் முஸ்லிம்களுக்கு வேறொரு நிலம் ஒதுக்கப்பட்டது. கொடுமை…

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

சவூதி அறபியா ஃபலஸ்தீனுக்கு முழு ஆதரவு வழங்காதது ஏன்?

1973ல் அறபு-இஸ்ரேல் போர் நடந்தபோது சவூதியை ஆட்சிபுரிந்த மன்னர் ஃபைசல் எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்து அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மிகப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தார். அது அவர்களுக்கு பொருளாதார ரீதியான அடியைக் கொடுத்தது. உலக அரங்கில் இஸ்ரேலைத் தனிமைப்படுத்தியது. இதுபோல் ஒரு சரியான, தாக்ககரமான நடவடிக்கையை MBS எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நடப்பு தேர்தல் முறையின் பிரச்னைகளும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையும்

1952இலிருந்து (அதற்கு முன்பும்கூட) பிரிட்டிஷாரிடமிருந்து பெற்றுக்கொண்ட FPTP (First-past-the-post) எனும் இந்தத் தேர்தல் முறையைக் கொண்டே நாம் தேர்தல்களை நடத்திவருகிறோம். மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பகுதியைப் பெறும் கட்சிகள்கூட அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கு இது வழியேற்படுத்துகிறது. இதுதான் காங்கிரஸை 35% வாக்குகளைக் கொண்டு 60% தொகுதிகளைப் பிடிக்க வாய்ப்பளித்தது. அதுபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 37% வாக்குகளுடன் 56% இடங்களைக் கைப்பற்ற பாஜகவுக்கும் உதவியது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (7)

தாராளவாத கல்வியாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஒரு கருத்தாக்கம் தத்துவவியலாளர் ஜான் ரால்ஸ் முன்வைத்த அறியாமை திரை (Veil of Ignorance). அவரின் கருத்துகள் கல்விப்புலத்தில் பலத்த செல்வாக்கு செலுத்தக்கூடியவை. ஒரு நீதிமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கான சட்டங்களை நாம் எப்படி வகுப்பது எனும் கேள்விக்கு விடையாக அறியாமை திரை என்ற கருத்தாக்கத்தை அவர் பரிந்துரைத்தார். அது ஒரு சிந்தனைப் பரிசோதனையாக அவரால் முன்னெடுக்கப்பட்டது. நவீனத்துவத்துக்கும் மதச்சார்பின்மைமயமாக்கலுக்கும் முன்பு வாழ்ந்தோரிடம் இதே கேள்வியைக் கேட்டால், இறைவனையும் வேதங்களையும் நாங்கள் அணுகுவோம் என்பார்கள்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (6)

இஸ்லாம் பாலின ரீதியாகவும், சமய நம்பிக்கை சார்ந்தும் பாகுபாடு கற்பிப்பதாகக் குற்றம்சாட்டப்படுவதுண்டு. இவை குறித்து முந்தைய பாடங்களில் நாம் விவாதித்துள்ளோம். பொதுவாக, மனிதர்களைப் பாகுபடுத்திப் பார்ப்பதே அதனளவில் பிரச்னைக்குரியதோ எதிர்மறையானதோ அல்ல. அது அநீதியானதாக இருக்கக்கூடாது என்பதுதான் முக்கியம். இஸ்லாம் எல்லா விதமான பாகுபாட்டையும் நிராகரிப்பதில்லை. எவ்விதத்திலும் பாகுபாடு கூடாது என்று தாராளவாதிகள் சவடால் விடலாம். ஆனால், யதார்த்தத்தில் பல விஷயங்களில் நவீனத்துவ சிந்தனைச் சட்டகம் பாகுபாட்டை ஆதரிக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (5)

பல இஸ்லாமியவாத இயக்கங்கள் சுதந்திரத்துக்காக வாதிடுவோராகத் தங்களை அடையாளப்படுத்துவதுண்டு. எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சிக்குக்கூட சுதந்திரம் மற்றும் நீதிக் கட்சி என்றுதான் பெயர். ஈரானியப் புரட்சியின்போது கொமைனீ போன்றோர் ஆஸாதி (சுதந்திரம்) என்பதைத் தம் பிரதான முழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இஸ்லாமியவாதிகள் மதச்சார்பற்றோராகவோ தாராளவாதியாகவோ இல்லையென்றாலும், சுதந்திரம் எனும் சொல்லாடலை அவர்கள் ஒரு மதிப்பீடாக முன்வைத்தார்கள். உண்மையில் அந்தச் சொல்லை நாம் விரும்பியவாறு பொருள் கொள்ள முடியும்.

மேலும் படிக்க