கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சர்வாதிகாரிகளின் மனநிலை: ஜெயாவை முன்வைத்து

பெயரளவிலேனும் திராவிடத்தைக் கொண்டிருந்த ஓரியக்கம் இல்லாமலாகும்போது அந்த வெற்றிடத்தை நிரப்புவது எச்சித்தாந்தம் என்பது கடும் அச்சுறுத்தலை தரும் கேள்வி. மாற்று கட்சியாக திமுக இருந்தபோதிலும் சமூகநீதியையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தும் அமைப்புகள் அல்லது கட்சிகளே தற்போதைய தேவை. ஆயினும் நிலைமை என்னவோ அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அதிமுகவுடைய வீழ்ச்சியின் பலனை பாஜக அனுபவிப்பதென்பது மாற்றுஅரசியலை நாடும் அனைத்து அமைப்புகளின் தற்காலிக தோல்வியென்றே கூறலாம். எனினும் நாம் நம்பிக்கை இழக்கத்தேவையில்லை. தீயவைகள் தங்களை முற்றாக வெளிப்படுத்தியபிறகு நன்மைக்கான காலம் கனியவே செய்யும் என்பதுதான் மனிதச்செயல்பாடுகளுக்கான ஆதார சிந்தனையாக இருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பத்தாண்டுகளின் நிகழ்காலம்

இத்தனை திரளான மக்கள் கூட்டம் கூடிக்கலைந்த பின்னும் நம்முடைய நிகழ்ச்சிநிரல் என்ன மாற்றமடைந்திருக்கிறது? ஒடுக்குமுறைக்கு எதிராக களம்கண்ட இத்தனை லட்சம் இளைஞர்களின் அடிப்படை அறத்தை நாம் என்ன செய்யப் போகிறோம்? நேர்மையான சமூகத்தின்பால், அறத்தின்பாற்பட்ட அரசியலின் பால் அவர்களை செலுத்த நம்மிடமுள்ள திட்டங்களும், செயல்பாடுகளும் என்னென்ன?

மேலும் படிக்க
கட்டுரைகள் 

பினாயக் சென் கைது – இதனால் அறிவிப்பது என்னவென்றால்….

இந்த அரசு தேசத்துரோக வழக்குப்போடும் வேகத்தைப் பார்த்தால் கூடிய விரைவில் நாட்டில் தேசபக்தர்களை விடவும் தேசத்துரோகிகளே அதிகமிருப்பார்கள் போலிருக்கிறது. பெயரில் உள்ளதோ ஜனநாயகம். செயல்கள் அனைத்துமே இரும்புக்கரம். ஜனநாயகத்தினுடைய பண்பாட்டு அடித்தளத்தின் மீது சாமானிய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளை பினாயக் சென்னை கைது செய்ததின் மூலம் இந்த அரசு சிதறச் செய்திருக்கின்றது.

மேலும் படிக்க