தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அருட்கொடைகளும் நன்றிகெட்டத்தனமும் -1

சொல்லுக்கும் செயலுக்கும், கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது தொடர் முயற்சியையும் பயிற்சியையும் அல்லாஹ்வுடனான தொடர்பையும் அவனது உதவியையும் வேண்டி நிற்கிறது. வாழ்வின் சூழல்களும் தேவைகளும் தனிமனிதனை அவன் நம்பும் கொள்கையிலிருந்தும் அழைக்கும் பாதையிலிருந்தும் திசைதிருப்பவே செய்கின்றன. அழியக்கூடிய இந்த மனிதன் என்றும் நிலைத்திருப்பவனுடன் தொடர்பு கொள்ளவில்லையெனில் பலவீனப்பட்டுப் போவான். ஏனெனில் தீமையின், அநியாயத்தின் ஆற்றல்கள் அவனைவிட வலிமையானவை. அவை அவனை எளிதாக வீழ்த்திவிடும். அவனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் நாசமாக்கிவிடும். என்றும் நிலைத்திருக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் மனிதன் பலம்பெற்று விடுகிறான். பலமான அனைத்தையும் மிகைத்துவிடும் அளவுக்கு அவன் பலம்பெற்றுவிடுகிறான். தன் இச்சையை, பலவீனத்தை, தேவைகளை மிகைத்து விடுகிறான். எதுவும் அவனை அடிமையாக்கி விடுவதில்லை.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

யூதர்களும் இஸ்லாமிய அழைப்பும்

இஸ்ராயீலின் மக்களுடைய சம்பவம்தான் திருக்குர்ஆனில் அதிகமாக இடம்பெற்ற சம்பவமாகும். அது எடுத்துரைக்கும் சந்தர்ப்பங்களும் அவற்றிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை முஸ்லிம் சமூகத்தை சீர்படுத்துவதற்கும் பண்படுத்துவதற்கும் பிரதிநிதித்துவ பணிக்காக அதனைத் தயார்படுத்துவதற்குமான அல்லாஹ்வின் நோக்கத்தை உணர்த்தக்கூடியவையாக இருக்கின்றன.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

மனிதன் பூமிக்குத் தலைவன் (திருக்குர்ஆனின் நிழலில்)

ஆதமின் சம்பவம் உணர்த்தும் அடிப்படையான உண்மைகளுள் ஒன்று, மனிதனைக் குறித்து, அவன் இந்த பூமியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள்குறித்து, இந்தப் பிரபஞ்சத்தில் அவனது இடம்குறித்து, அவனது மதிப்பீடுகள்குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம் அவனுக்கு அளிக்கும் உயர்ந்த அந்தஸ்தாகும். பின்னர் அது அல்லாஹ்வின் வாக்குறுதியுடன் அவன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளான் என்பதையும் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்த வாக்குறுதியின் எதார்த்தம் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

முதல் மனிதன் (திருக்குர்ஆனின் நிழலில்)

குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைத்தூதர்களின் சம்பவங்கள் ஈமானியக் கூட்டங்கள் தம் பாதையில் மேற்கொண்ட நீண்ட நெடிய பயணத்தை வெளிப்படுத்துகின்றன. அவை மனித சமூகம் தலைமுறை தலைமுறையாக அல்லாஹ்வின்பால் அழைப்பு விடுக்கப்பட்டதையும், அதற்கு அது பதிலளித்த விதத்தையும் எடுத்துரைக்கின்றன. அதேபோன்று மனித சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மனிதர்களின் உள்ளத்திலிருந்த நம்பிக்கையின் இயல்பையும் அவர்களுக்கும் இந்த பெரும் பாக்கியத்தை அவர்களுக்கு வழங்கிய இறைவனுக்கும் மத்தியிலுள்ள தொடர்பை விளக்கும் அவர்களின் கண்ணோட்டத்தின் இயல்பையும் எடுத்துரைக்கின்றன. கண்ணியமான இந்தக் கூட்டத்தை அதன் பிரகாசமான பாதையில் பின்தொடர்ந்து செல்வது உள்ளத்தில் பிரகாசத்தையும் திருப்தியையும் ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 3)

மனிதர்கள் வாழ்கின்ற பிரபஞ்சத்தைக்குறித்து, அதன் தனித்தன்மைகள் குறித்து, அது படைப்பாளனுடன் கொண்டுள்ள தொடர்பைக்குறித்து, படைப்பாளனின் இருப்பிற்கு அது எவ்வாறு சான்றாக இருக்கின்றது என்பதைக்குறித்து, அல்லாஹ்வின் கட்டளையைக்கொண்டு அது எவ்வாறு அவர்களுக்காக வசப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக்குறித்து இந்தக் கண்ணோட்டம் அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. அது அவர்களின் இயல்பும் அறிவும் புரிந்துகொள்ளும் நடையில் எடுத்துரைக்கிறது. அவர்கள் எதார்த்த வாழ்வில் அவற்றை அப்படியே காண்பார்கள். அதனை அறிந்துகொள்வதற்கு அதன் இரகசியங்களை உணர்ந்துகொள்வதற்கு அதனோடு சரியான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு அது அவர்களை அழைக்கின்றது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 2)

முதலில் இந்தக் கண்ணோட்டம் மனிதர்களுக்கு அவர்களின் இறைவனைக் குறித்து துல்லியமாக, முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. அவனது பண்புகளைக் குறித்து, அவனது தனித்தன்மைகளைக் குறித்து பிரபஞ்சத்திலும் மனிதர்களிலும் இன்னும் படைப்புகள் அனைத்திலும் காணப்படும் அவனது சான்றுகள்குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. திருக்குர்ஆனின் பெரும்பகுதி இவ்வாறு எடுத்துரைப்பதிலேயே நிறைவடைகிறது. அது இறைவனின் இருப்பை மனித மனதில் மிகத் தெளிவாக, துல்லியமாக, ஆழமாக பதிய வைக்கிறது. மனித மனம் அதன் அத்தனை பகுதிகளையும் உள்வாங்கிக் கொள்கிறது. அது அதனோடு வலுவாக இணைக்கப்பட்டு வாழ்கிறது. அதைவிட்டு வெருண்டோடுவதுமில்லை, அலட்சியமாக இருந்துவிடுவதுமில்லை. ஏனெனில் அதிலுள்ள ஆற்றலும் தெளிவும் எப்போதும் மனித மனதை எதிர்கொள்கிறது. அதில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 1)

இருப்பிற்கும் இல்லாமைக்குமான தூரத்தை மனித அறிவால் விளக்க முடியாது. இந்த உலகம் எவ்வாறு வந்தது? இந்த ‘இயற்கை’ எவ்வாறு வந்தது? தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. அவன் ஏதேனும் ஒன்றை படைக்க நாடினால் “ஆகு” என்றுதான் கூறுவான். அது ஆகிவிடும். இந்த உண்மையை நாம் ஒத்துக்கொள்ளவில்லையெனில் நம்மால் எந்த விளக்கத்தையும் கூற முடியாது அல்லது மெய்யியலாளர்களைப்போன்று காரிருளில் தடுமாறித் திரிவோம். இருப்பிற்கும் இல்லாமைக்குமிடையே இருக்கின்ற தூரத்தைப்போன்ற உயிரற்ற சடப்பொருளுக்கும் உயிருள்ள பொருளுக்கும் இடையே தூரம் காணப்படுகின்றது. தான் நாடியதைச் செய்யும் ஆற்றலுடைய இறைவனின்பால் இவற்றை இணைப்பதைத்தவிர மனித அறிவால் வேறு விளக்கம் அளிக்க முடியாது. “அவனே ஒவ்வொன்றையும் படைத்து பின்னர் வழிகாட்டினான்.”

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

பாவிகளின் பண்புகள் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

திருக்குர்ஆன் மனிதர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டிய, ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய எதார்த்தத்தைக் கொண்டு அவர்களை அணுகுகிறது. அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை, அது அடைந்த நிலைகளை முன்வைக்கிறது. அவர்கள் ஒன்றும் இல்லாதவர்களாக, உயிரற்றவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்தான் அவர்களுக்கு உயிரளித்தான். உயிரற்ற நிலையிலிருந்து வாழ்வு என்னும் நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றான். படைப்பாளனின் வல்லமையைக் கொண்டேதவிர இந்த உண்மைக்கு யாராலும் விளக்கமளிக்க முடியாது. அவர்கள் உயிருள்ளவர்களாக ஆனார்கள். அவர்களுக்கு வாழ்வு கிடைத்தது. அவர்களுக்கு இந்த வாழ்வை அளித்தவன் யார்? பூமியிலுள்ள உயிரற்ற பொருள்களில் இந்த புதிய வெளிப்படையான ஒன்றை உருவாக்கியவன் யார்? இந்த வாழ்வின் இயல்பும் ஜடப்பொருள்களைச் சூழ்ந்துள்ள மரணத்தின் இயல்பும் ஒன்றல்ல. இந்த உயிர் எங்கிருந்து வந்தது? மீண்டும் மீண்டும் உள்ளத்தில் தோன்றும் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாமல் வெருண்டோடுவதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. படைப்பாளனின் வல்லமையைக் கொண்டு தவிர நாம் இவற்றிற்கு விடையளிக்க முடியாது. இந்த உயிர் எங்கிருந்து வந்தது? அது வந்தவுடன் உயிரற்ற அனைத்தையும் விட்டு தனித்தன்மை பெற்றதாகிவிட்டதே?! நிச்சயமாக அது அல்லாஹ்விடமிருந்து வந்தது. இதுதான் மிகவும் நெருக்கமான பதில். இதை ஏற்றுக் கொள்ள முடியாதவர் பதில் கூறட்டும், அது எங்கிருந்து வந்தது?

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனின் அழைப்பும் அறைகூவலும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

அல்லாஹ் சோதனைகளை, அவற்றின் பாதையில் கடந்து செல்லுமாறு அப்படியே விட்டுவிடுகிறான். அவனது அடியார்கள் அவற்றை எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் தம் இயல்புக்கேற்ப, தாம் ஏற்றுக்கொண்ட வழிமுறைப்படி அவற்றை எதிர்கொள்கிறார்கள். சோதனை ஒன்றுதான். ஆனால் அது மனித மனங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் வெவ்வேறானவை. பல மனிதர்களுக்கும் துன்பம் வருகிறது. அல்லாஹ்வின்மீது உறுதியான நம்பிக்கைகொண்ட நம்பிக்கையாளனுக்கு வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வின் பக்கம் இன்னும் நெருக்கமாக்கி வைக்கிறது. ஆனால் பாவிக்கோ நயவஞ்சகனுக்கோ வரக்கூடிய துன்பம் அவனை அல்லாஹ்வைவிட்டுத் தூரமாக்கிவிடுகிறது. செல்வம் பலருக்கு வழங்கப்படுகிறது. இறைவனை அஞ்சும் நம்பிக்கையாளனுக்கு வழங்கப்படும் செல்வம் அவனை விழிப்படையச் செய்து நன்றி செலுத்தத் தூண்டுகிறது. ஆனால் நயவஞ்சகனுக்கோ பாவிக்கோ வழங்கப்படும் செல்வம் அவனைக் கர்வத்தில் ஆழ்த்தி வழிகெடுத்துவிடுகிறது. இவ்வாறுதான் அல்லாஹ் மனிதர்களுக்குக் கூறும் உதாரணங்களும். அவன் அவற்றைக் கொண்டு பலரை வழிதவறச் செய்கிறான். அவர்கள் அவற்றைச் சரியான முறையில் அணுகாதவர்கள். பலருக்கு நேர்வழிகாட்டுகிறான். அவர்கள்தாம் அல்லாஹ்வின் நோக்கத்தைப் புரிந்துகொண்டவர்கள். யாருடைய உள்ளங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லையோ அவர்களைத்தான் அல்லாஹ் வழிதவறச் செய்கிறான். அதற்குக் கூலியாக அவர்களை வழிகேட்டில் இன்னும் ஆழ்த்திவிடுகிறான்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நிராகரிப்பாளர்களும் நயவஞ்சகர்களும் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

இதுபோன்ற வசனங்களில் நாம் மிகப் பெரிய உண்மையை, அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு அளிக்கும் பெரும் சிறப்பைக் காண்கிறோம். இந்த உண்மையை திருக்குர்ஆன் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கிறது, நிலைநிறுத்துகிறது. அது அல்லாஹ்வுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையேயுள்ள தொடர்பைக் குறித்த உண்மைநிலையாகும். அவன் அவர்களின் அணியை தன் அணி என்றும் அவர்களின் விவகாரத்தை தன் விவகாரம் என்றும் கூறுகிறான். அவர்களின் ஒவ்வொரு செயலையும் தன்னோடு இணைத்துக் கூறுகிறான். அவர்களைத் தன்னோடு அரவணைத்துக் கொள்கிறான். அவர்களின் எதிரியை தன் எதிரி என்கிறான். அவர்களுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சியை தனக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி என்கிறான். இதுதான் மிக உயர்ந்த கண்ணியம். அவன் நம்பிக்கையாளர்களுக்கு உயர்வையும் பெரும் கண்ணியத்தையும் அளிக்கிறான். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும்விட ஈமானே மிகப் பெரியது, மிகவும் கண்ணியமானது. அது நம்பிக்கையாளனின் உள்ளத்தில் எல்லையில்லா திருப்தியை ஏற்படுத்துகிறது, அல்லாஹ் நம்பிக்கையாளனின் விவகாரத்தை தன் விவகாரமாக, அவனது போராட்டத்தை தன் போராட்டமாக, அவனது எதிரியை தன் எதிரியாகக் காண்கிறான் என்பதை அவன் எண்ணும்போது. இந்த அரவணைப்பிற்கு, பாதுகாப்பிற்கு முன்னால் அடிமைகளின் சூழ்ச்சியும் ஏமாற்றும் என்ன செய்துவிடப் போகிறது!?

மேலும் படிக்க