social media islam tamil நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

சமூக ஊடகம் தொடர்பான இஸ்லாமிய ஒழுங்குகளை நினைவூட்டும் புத்தகம்

எதிர்மறையான விசயங்கள் வேகமாகப் பரவும் இயல்புடையவை என்பதை அவை சமூக ஊடகங்களிலும் வேகமாகப் பரவுகின்றன. ஆனாலும் அவற்றை நேர்மறையான, நல்ல விசயங்களைப் பரப்புவதற்கும் பயன்படுத்த முடியும், நாம் சில ஒழுங்குகளைக் கடைப்பிடித்தால். இந்தச் சிறிய புத்தகம் நாம் கடைப்பிடிக்க வேண்டிய, கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான சில ஒழுங்குகளை நமக்கு நினைவூட்டுகிறது.

மேலும் படிக்க
social media islam tamil நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

சமூக ஊடகங்களை நாம் சரியான முறையில்தான் பயன்படுத்துகிறோமா?

தற்காலத்தில் சமூக ஊடகங்களை நாம் முழுமையாகத் தவிர்க்க முடியாது. ஆனாலும் நம்முடைய பயன்பாட்டை முறைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அவ்வாறு செய்யவில்லையெனில் தேவையற்ற விசயங்களில் நம்முடைய நேரங்களை, ஆற்றல்களை வீணாக்கியதற்காக நாம் வருத்தப்படக்கூடியவர்களாக, நம்மை நாமே நொந்து கொள்ளக்கூடியவர்களாக மாறிவிடுவோம். இழந்த காலத்தை நாம் ஒருபோதும் திரும்பப் பெற முடியாது. நமக்கு வழங்கப்பட்டுள்ள நேரமும் ஆரோக்கியமும் ஆற்றல்களும் மிக முக்கியமானவை. அவை தேவையற்ற விவகாரங்களில் வீணடிக்கப்பட்டுவிடக் கூடாது.

இந்தப் புத்தகத்தை வாசியுங்கள். இது நம்மை நாமே பார்த்துக் கொள்வதற்கான, சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான கண்ணாடி.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

‘திருமுகம்’ ஈரானிய நாவல் (அறிமுகம்)

திருமுகம் என்ற நாவல் மனித மனதின் ஐயம் குறித்து, அது உருவாக்கும் கேள்விகள் குறித்துப் பேசுகிறது. நாவலின் நாயகன் யூனுஸின் மனதில் உருவாகும் மெய்யியல் கேள்விகள் இந்த நாவலை முன்னகர்த்திக் கொண்டு செல்கின்றன.

முனைவர் முஹ்ஸின் பாஷா தற்கொலைக்கான காரணங்களைத் திரட்டி பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதே யூனுஸ் எடுத்துக்கொண்ட முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கரு. யூனுஸின் மனத்தில் உருவாகும் இறைவன் இருக்கிறானா என்ற ஐயமும், முஹ்ஸின் பாஷா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்வியும் யூனுஸின் சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன. யூனுஸின் நண்பர் மஹர்தாத், மஹர்தாத் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜூலியா, யூனுஸூக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான சாயாஹ் எனப் பல்வேறு கதாபாத்திரங்களின் வழி மனித மனதில் ஆதாரமான கேள்விகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் சொல்லப்படுகின்றன.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

தாலிபான்களை மையப்படுத்தி மீண்டும் சூடுபிடிக்கும் இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

தாலிபான்களை மையப்படுத்தி இஸ்லாமிய வெறுப்புத் தொழில் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தாலிபான்களின் முந்தைய செயல்பாடுகள் இஸ்லாமிய வெறுப்புத் தொழிலாளர்களுக்குப் பெரும் தீனி. தாலிபான்கள் தங்களின் முந்தைய கடும்போக்குத்தனத்துடன் இப்போதும் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் உளமாற விரும்புகிறார்கள்போலும். அப்போதுதான் இஸ்லாமிய ஷரீஆ மீது தொடர்ந்து தாக்குதல் தொடுத்துக் கொண்டேயிருக்க முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்போலும். இஸ்லாத்தின் மீது தொடுக்கப்படும் இந்த அளவு மூர்க்கமான தாக்குதல்கள் அவர்கள் அதன் மீது கொண்டிருக்கும் கடுமையான வெறுப்பையே காட்டுகின்றன.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஃகிலாஃபத்தும் மன்னராட்சியும் – நூல் அறிமுகம்

பலரும் பதில் சொல்லத் தயங்கும் ஒரு கேள்வி, ஃகிலாஃபத் எப்படி மன்னராட்சியாக மாற்றப்பட்டது என்பதுதான். அதற்கு அளிக்கப்படும் மழுப்பலான பதில்கள் தெளிவின்மையை, குழப்பத்தை அதிகரிப்பவை. அது தாமாகவே அந்த நிலையை அடைந்துவிட்டது என்பது போன்ற சித்திரத்தை ஏற்படுத்தக்கூடியவை. இங்கு அது தானாக மாறவில்லை. தனிமனிதர்களின் சுயநலத்தால் அது வலுக்கட்டாயமாக மன்னராட்சியாக மாற்றப் பெற்றது என்பதை உடைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை – நூல் அறிமுகம்

திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சிதறல்கள் அல்ல. அதன் வசனங்களுக்கு மத்தியில் வெளிப்படையான, நுண்ணிய தொடர்புகள் இருக்கின்றன. அதன் ஒவ்வொரு அத்தியாயமும் ஆரம்பம் முதல் இறுதிவரை நுண்ணிய இழைகளால் இணைக்கப்பட்டுள்ளன. அதன் அத்தியாயங்களுக்கு மத்தியிலும் தொடர்புகள் இருக்கின்றன. அதன் அத்தியாயங்கள், வசனங்கள் இறைக்கட்டளையின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. அதற்கு ‘இல்முல் முனாஸபாத்’ என்று பெயர். இது திருக்குர்ஆனின் அற்புதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – நூல் அறிமுகம்

சையித் குதுப் எழுதிய புத்தகங்களில் முதன்மையான புத்தகமாக ‘இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ என்ற புத்தகத்தையே கூறுவேன். தமிழில் 260 பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகம்தான். ஆனால் செறிவான உள்ளடக்கத்தைக் கொண்ட மிகச் சிறந்த புத்தகம். ஒவ்வொரு நம்பிக்கையாளனும் ஒரு பாடத்திட்டமாகக் கருதி பயில வேண்டிய புத்தகம் அது. இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் ஊழியர்களுக்கு – குறைந்தபட்சம் பொறுப்பாளர்களுக்கு – இந்தப் புத்தகத்தை வாசிக்கும்படி பரிந்துரைக்க வேண்டும். இஸ்லாம் குறித்து வாசிக்க விரும்புவோருக்கு இந்தப் புத்தகம் மிகச் சிறந்த வழிகாட்டி.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

பாவத்தின் வசீகரம்

பாவத்திற்கு ஒரு வசீகரம் இருக்கிறது. ஆனால் அது மேலோட்டமான வசீகரம். அதனுள்ளே வெறுமையும் நிராசையும் அழிவும் இருக்கிறது. உண்மையில் அது நமக்கு நாமே செய்யும் தீங்கு. அதனுள் செல்லச் செல்ல நாம் நம் சுயத்தை இழந்துவிடுவோம். நம்மை நாமே மறந்து விடுவோம். அடிமைபோன்று செயல்படத் தொடங்கிவிடுவோம்

மேலும் படிக்க
கட்டுரைகள் 

தன்னிறைவு

நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் யார் மாதிரியும் ஆக வேண்டாம். இங்கு ஒவ்வொருவரும் தனித்துவமான படைப்புதான். ஒருவர் இடத்தை இன்னொருவர் நிரப்ப முடியாது. உங்களின் திறமைகளை, செல்வங்களை, நேரங்களை முடிந்த மட்டும் நல்வழியில் பயன்படுத்துங்கள். அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்தரக்கூடியதாக அமையும். இறைவன் உங்களுக்கு எந்தப் பாதையை இலகுபடுத்தித் தருகிறானோ அதுதான் நீங்கள் செல்ல வேண்டிய பாதை. எந்தப் பணியில் நீங்கள் மனதிருப்தி அடைகிறீர்களோ அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய பணி.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தீய இச்சையின் பிடியிலிருந்து விடுபட

மனம் ஏதேனும் ஒரு தீய பழக்கத்துக்கு அடிமையாகும்போது அது தன்னுடைய சுதந்திரத்தை இழக்கிறது. அந்த பழக்கத்தை இயல்பான ஒன்றாக, அது தன் வாழ்க்கையோடு இயைந்த ஒன்றாக மனம் எண்ண ஆரம்பிக்கிறது. இந்த இடத்திலிருந்துதான் சிக்கல் தொடங்குகிறது. அவன் அதற்கான நியாய வாதங்களை முன்வைக்கிறான். கோட்பாட்டளவில் அதனை நியாயப்படுத்தும் கருத்தியல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்கத் தொடங்குகிறான்.

மேலும் படிக்க