கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

மதச்சார்பின்மையை மதச்சார்பற்றதாக்குதல்!

ஃபிரெஞ்சு விவகாரத்தை ஒற்றைக் கலாச்சாரவாதத்துக்கு (Cultural Monism) சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ள முடியும். ‘மதச்சார்பற்ற’ அரசியல் சாசனம் மதச் சுதந்திரத்தை வழங்குவதாக உறுதியளித்தாலும், அது நடைமுறையில் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு பிரதி. ஆதிக்கம் செலுத்தும் கலாச்சார மதிப்பீட்டின் தாக்கத்துக்கு ஆட்பட்டு அதை வாசித்து ஒரு புரிதலுக்கும் நடைமுறைக்கும் அவர்கள் வருகிறார்கள். கிறிஸ்தவத்தின் செல்வாக்குக்கு ஆளாகியுள்ள அவர்களிடம் எது இயல்பு, எது இயல்பல்ல என்ற முன்னுணுர்வு இருக்கிறது. ஒரு பெண் தலை முக்காடு அணிகிறாள் என்றால் அது ஃபிரெஞ்சுப் பொதுப்புத்திக்கு அசாதாரணமாகவும், இயல்பு மீறிய ஒன்றாகவும் படுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிமியைக் குற்றப்படுத்தாதீர்கள்! – பேரா. இர்ஃபான் அஹ்மது

9/11 தாக்குதலைத் தொடர்ந்து உலகெங்குமுள்ள அரசுகள் முஸ்லிம்கள்மீது அடக்குமுறைகளையும் தீவிரக் கண்காணிப்பையும் முடுக்கிவிட்டன. கறுப்புச் சட்டங்களை இயற்ற, இஸ்லாமிய இயக்கங்களைத் தடை செய்ய அச்சந்தர்ப்பத்தை அவை லாவகமாகப் பயன்படுத்திக்கொண்டன. சிமி முதன்முதலாகத் தடை செய்யப்பட்டதும் அப்போதுதான்.

2006ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் மானுடவியல் துறைப் பேராசிரியர் இர்ஃபான் அஹ்மது எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. சிமி குறித்து பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவதற்காக முழு வீச்சுடன் செயல்படும் ஊடகமும் அதிகார வர்க்கமும் சிமியின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்தது எது என்ற அடிப்படையான கேள்வியைக் கண்டுகொள்வதே இல்லை. இக்கட்டுரை அந்த அம்சம் குறித்துதான் கவனப்படுத்த முனைகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

முஸ்லிம் மக்கள் தொகை: பொதுப்புத்தியை அச்சுறுத்தும் கட்டுக்கதையும் நிதர்சனமும்

மக்கள் தொகை உயர்வானது எந்நேரமும் தீங்கு விளைவிப்பதாய் மட்டும் இருப்பதில்லை என்பதையும் மதத்தோடு தொடர்புடையதாகவும் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்த சமயம் முஸ்லிம்கள் 9.8ஆக இருந்தார்கள். 2011 கணக்கெடுப்பின்போது 14.2 சதவீதமானார்கள். அவர்களின் வளர்ச்சி விகிதம் கடந்த சில தசாப்தங்களாக சரிந்து வருகிறது. கூடியவிரைவில் அது நிலையானதாக ஆகிவிடக்கூடும். அரசாங்கம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது பற்றியெல்லாம் கலந்துரையாடவும், அதற்காகத் திட்டம் வகுக்கவும் செய்யலாமே அன்றி, இவ்விஷயத்தை மதம் சார்ந்து அணுகக் கூடாது. வாக்காளர்களைத் துண்டாடி, அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட கட்சியை வளர்ப்பதே முஸ்லிம் மக்கள் தொகை குறித்த வெறுப்புப் பேச்சுகளின் நோக்கமாகும். காலவோட்டத்தில் இதுவே சமூகத்தில் ஆழமாகப் படிந்துவிடுகிறது. எனவே, தர்க்க ரீதியாகவும் உண்மையைக் கொண்டும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை முறியடிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

மேலும் படிக்க
ex muslim tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘முன்னாள் முஸ்லிம்கள்’ உருவாகக் காரணமென்ன?

முன்னாள் முஸ்லிம்கள் (Ex-Muslims) என்ற பெயரில் உலவும் ஒருசிலர், இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தொடர்ச்சியாக எதிர்மறையான கருத்துகளையும் அவதூறுகளையும் பரப்பி வருவதை உங்களில் சிலர் கவனித்திருக்கக்கூடும். கருத்தாழம் ஏதுமின்றி, மிகவும் மேம்போக்கான குற்றச்சாட்டுகளையும், மீம் மாதிரியான கேலி கிண்டல்களையும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து, சாமானிய முஸ்லிம்களைச் சீண்டி மகிழ்வது என்ற அளவில் இவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன.

கல்வியாளர் சைமன் கோட்டீ எழுதிய The Apostates என்ற சமூகவியல் ஆய்வு நூல் இவர்களைப் பற்றிய முழுமையான பார்வையை வழங்குகிறது. 2015ல் வெளியான இந்நூல், பிரிட்டனிலும் கனடாவிலும் வசிக்கும் ‘முர்தது’கள் (முன்னாள் முஸ்லிம்கள்) தொடர்பானது. முர்ததுகள் தங்களைப் பற்றியும், இஸ்லாத்தை விட்டு வெளியேறும்போது அவர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகரமான அனுபவங்கள் பற்றியும் அளிக்கும் வாக்குமூலத்தை இந்நூல் பிரதானமாகப் பதிவுசெய்கிறது. அந்தப் புத்தகம் முன்வைக்கும் கருத்துகளின் அடிப்படையில் எமது பார்வைகளையும் சேர்த்து வழங்க முனைகிறது இந்த ஆக்கம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அறிவியல்வாதத்தின் மொழியியல் சிக்கலும் அதன் விளைவுகளும்!

1920களின் தொடக்கத்தில் பகுப்பாய்வுப் புலனறிவாதம் (Logical Positivism) என்ற ஒரு கருத்தியல் உருவானது. நேரடியாகவோ மறைமுகமாகவோ நம் ஐம்புலன்களால் அறிந்து நிரூபணம் செய்யப்படுபவை தவிர மற்ற அனைத்தும் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்றும், அதைப் பற்றி பேசுவதே பகுத்தறிவற்ற செயல்பாடு என்றும் அது கூறியது. வேகமான அறிவியல் வளர்ச்சி இக்கருத்தியலின் உருவாக்கத்துக்கும் பரவலுக்கும் காரணமாக அமைந்தது. பிறகு, அந்தக் கருத்தியலையே புலனறிவு கொண்டு அறிய முடியாத நிலையில், எப்படி அதை நாம் ஏற்பது என்ற வாதம் எழுந்தது. இந்தப் பின்னணியில், சுமார் 50 ஆண்டுகளில் அது கல்விப்புலங்களில் தன் செல்வாக்கை வெகுவாக இழந்தது. எனினும், அதன் எச்சம் இன்றும் அறிவியல்வாதம் (Scientism) எனும் வேடத்தில் பலரிடையே, குறிப்பாக நாத்திகவாதிகள் மத்தியில் வலம்வருகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உலக குடியாட்சி தினம்: ஜனநாயகத்தில் சிறுபான்மையினர் – அ.மார்க்ஸ்

பெரும்பான்மையின் ஆட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கையில் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்படுவது, கருத்தொருமிப்பின் அடிப்படையில் உருவான அரசியல் சட்டத்தின் ஆளுகை (Constitutional Governance) முதலியவற்றை நாம் ஜனநாயகத்தின் முக்கியக் கூறுகள் என்கிறோம். இவை ஒவ்வொன்றுமே ஆழமான பல தத்துவார்த்தப் பிரச்னைகளை உள்ளடக்கியுள்ளன.

”பெரும்பான்மை” எனும்போது அதன் மறுதலையாக ”சிறுபான்மை” ஒன்று இருந்தாக வேண்டும். ஜனநாயகத்தில் அந்தச் சிறுபான்மையின் பங்கு என்ன? பெரும்பான்மையின் ஆட்சி என்கிறபோது ”பெரும்பான்மை எல்லாவற்றையும் எடுத்துக்கொள்வது” (Majority Takes All) என்ற பொருள் வந்துவிடுகிறது. அப்படி ஆகும்போது அது ஜனநாயகம் என்பதாகவன்றி ஜெஃபர்சன் சொல்வதுபோல ”கும்பலாட்சி” (Mob Rule) ஆகிவிடுகிறது. பெரும்பான்மையின் ஆட்சி என்றால் 51 பேர் 49 பேர்களை ஒடுக்குவதுதானே என்றார் அவர். ஆக, ஜனநாயகம் என்பது வெறும் பெரும்பான்மையின் ஆட்சி மட்டுமல்ல. சிறுபான்மையினரும் சேர்ந்ததுதான் ஜனநாயகம். சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரமும் அவர்களின் கருத்துகளைப் பேசுவதற்கும், பரப்புவதற்கும், அதைப் பெரும்பான்மையாக ஆக்குவதற்குமான முழு வாய்ப்பும் அளிக்கப்படுவதுதான் ஜனநாயகம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழகத்தில் முஸ்லிம் இடஒதுக்கீடு: தேவைகள், சிக்கல்கள், தீர்வுகள் – அ.மார்க்ஸ்

முஸ்லிம்களின் பிரச்னைகள் இன்றும் பல தளங்களில் உள்ளன. அரசு நலத்திட்டங்களின் பங்கு, கடன் வசதி பெறுதல், தனியார் துறைகளில் ஒதுக்கீடு, மதரசாக் கல்விக்கு உரிய ஏற்பு, வக்ஃப் சொத்துகளை மீட்டு முஸ்லிம்களுக்குப் பயனுடையதாக ஆக்குதல், தொகுதிச் சீரமைப்பு, முனிசிபாலிடி மற்றும் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றில் இடஒதுக்கீடு என எத்தனையோ விவகாரங்கள் இருக்கின்றன. 3.5% இடஒதுக்கீடு ஆணை பெற்றதோடு முஸ்லிம் இயக்கங்களின் பணி ஓய்ந்துவிடவில்லை என்பதையும், சிறுபான்மை மக்களின் உரிமை கோரலை வெறும் இடஒதுக்கீடு என்பதோடு நிறுத்திக்கொண்டால் அதில் பெரியளவுக்குப் பயனிருக்காது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இலங்கைக்கு நாடுகடத்தப்படும் அபாயத்தில் ஓர் தமிழ் அகதி!

ஒன்று இந்தியாவில் அவருக்குத் தஞ்சம் அளிக்க வேண்டும். இந்தியாவில் இருக்க அவருக்கு அனுமதி இல்லை என்றால், எந்த நாடு அவருக்குத் தஞ்சம் அளிக்கிறதோ அங்கு செல்ல அவரை அனுமதிக்க வேண்டும். இதுதான் அவரது நிலைக்கு எடுக்கப்படும் சரியான முடிவாக இருக்க முடியும். அதை விடுத்து, அவரை இலங்கைக்கு நாடுகடத்துதல் எந்தச் சட்ட அடிப்படையில் நியாயமாக இருக்கும்?

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாட்டில் ஒரு முள்வேலி முகாம்

“என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”, “என் பிள்ளைகள் சாகக் கிடக்குறாங்கள்!”   தனது வயிற்றைக் கிழித்துக்கொண்டு
இரத்தம்  வழியவழியக் கத்தும் குரல் வீடியோவில் தனித்து ஒலித்து உருக்கி எடுக்கிறது. ஆஃப்கனிஸ்தானில் ஓடும் விமானத்திலிருந்து விழுந்த மனித உயிர்களுக்கு உலகமே இரங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், கொடூரத்தில் அதற்கு எவ்விதத்திலும் குறைவில்லாத இந்த வீடியோ அதிகக் கவனம் பெறாமல் சிலரால் மட்டுமே பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் நடப்பது ஆஃப்கானிஸ்தானிலோ ஆஃப்பிரிக்காவிலோ அல்ல, தமிழ்நாட்டில்தான். கதறும் குரல்களும் தமிழில்தான் ஒலிக்கின்றன. கதறிக்கொண்டிருப்பது ஒரு குரல் மட்டும் அல்ல. கிட்டத்தட்ட 80 பேர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அஹ்லுஸ் சுன்னாஹ்வின் பார்வையில் கர்பலா

முஹர்றம் 10ம் தேதி ஹிஜ்ரி 61ம் ஆண்டு (வெள்ளிக்கிழமை) இஸ்லாமிய வரலாற்றில் உச்சகட்ட கொடூரங்கள், சோகங்கள் நடந்தேறியதை வரலாற்றுப் பக்கங்கள் படம்பிடித்திருக்கின்றன. அந்தப் பக்கங்களைக் கடந்து செல்லுகையில் எப்படிப்பட்ட இரும்பு மனிதராக இருந்தாலும் அவரின் கண்கள் குளமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஹிஜ்ரி 61ம் ஆண்டு கர்பலாவில் நடந்த படுகொலைகள் காஃபிர்களால் நடத்தப்பட்டதன்று; மாறாக, கலிமா மொழிந்த முஸ்லிம்களால் என்பது குறிப்பிடத்தக்கது. அதைவிட முக்கியமானது, அல்லாஹ்வின் தூதருடைய (ﷺ) ஈரக்குலையான அன்னை ஃபாத்திமாவின் ஈரக்குலை இமாம் ஹுசைன் (றலி) மீதும், நபியின் குடும்பத்தார் (அஹ்லுல் பைத்) மீதும் நடந்தேறிய மாபெரும் அநீதம் அது.

மேலும் படிக்க