கவிதைகள் முக்கியப் பதிவுகள் 

போராடும் ஃபலஸ்தீன மக்களுக்காக ஐந்து கவிதைகள் — பீட்டர்

1. “யுத்தம் நிறுத்து!” என்றபாப் மார்லியின் ‘ஒருநாள்’ பாடல்உலகமுழுதும் பரவுகிறது இப்போது;அதில் உண்மையின் கூறு உண்டு.ஆனால், இந்த நாட்டில் யார் தொடங்கியது போரை?எத்தனை ஆண்டுகள், எதற்காக?யார் நிறுத்துவது?வெறிகொண்ட சண்டைகளை போர் என்றுபெயர் இட்டு ஊதிவிட்டது யார் ?அமெரிக்காவின் இசுரேலைத்தான் கேட்க வேண்டும்.இதோ, ஏவுகணை வீச்சில்ஆஸ்பத்திரியை அழித்துஐந்நூறு பேரைக் கொல்லுதுஇனவெறி இசுரேல்.எரிந்துபோன பெண்கள்பீதியூட்டும் யுத்தக் காட்சி ;மண்ணை முத்தமிட்டு மரிக்கும் குழந்தைகள்பாசிசத்தின் யுத்த சாட்சி! 2. மண் எரிந்தாலும்நாட்டைவிட்டு ஓடமாட்டார் காஸா மக்கள்.இத்தனைக் காலமும் ஆதரவாய்அரபு மக்கள் நிற்பது எத்தனை உண்மையோஅரபு ஆட்சி அதிகாரம் கேட்காது என்பதும்பச்சை உண்மை.இனிமேலும் இது கையறுந்த திகைப்பல்ல,“எங்களைக் கொல்லஉங்களால் முடியாது!” என்றஎன் தாயின் கைதிறந்த சாபம்! 3. ”இனி இது தொடரக்கூடாது”சிறுவர்களின் எதிர்காலம் கேட்கிறது.2000-ல் சிறுவன் முஹம்மது அத்துரானி கொலை தொடங்கி“ஏவுகணையில் நாங்கள் சிக்குவது நிச்சயம்.எனது பொருளெல்லாம் நண்பர்களுக்கு” என்று தீட்டிவைத்தநேர்மை என்ற…

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஆணவத்திலிருந்து அவமானம் வரை: இஸ்ரேலை உலுக்கிய அந்த பத்து மணிநேரம்

இஸ்ரேலுக்கு ஏற்பட்ட சேதம் அதன் உளவு மற்றும் இராணுவத் துறைகளின் தோல்விக்கும் அப்பாற்பட்டது; இஸ்ரேலுக்கு இதுவோர் அரசியல், உளவியல் பேரழிவு ஆகும். வெல்ல முடியாத அரசு என்று மார்தட்டிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு, இத்தாக்குதல் அதன் பலவீனத்தையும் படுமோசமான இயலாமையையும் காட்டியுள்ளது. ஃபலஸ்தீனை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டு, மத்தியக் கிழக்கு பகுதிக்கு தன்னை புதிய தலைமையாக ஆக்கிக்கொள்வதற்கான அதன் திட்டங்களுக்கும் இது பேரிடியாய் அமைந்துள்ளது.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிறை சீர்திருத்தங்களும் சில அபத்தங்களும்

வெறும் நெருக்கடியைக் குறைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரை சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நிலை, அவர்களின் உரிமைகுறித்து கிஞ்சிற்றும் அக்கறை கொள்ளவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

செக்யுலரிசம்: அரசியல் நவீனத்துவத்தின் புனிதப் பசு

இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய நாடுகளைப் போல் அனைத்து மதங்களையும் விலக்குவது அல்ல; மாறாக அவ்வனைத்தையும் சமமாக நடத்துவது எனக் கூறப்பட்டு வந்தாலும் இங்கு ஏன் பெரும்பான்மையினரின் அடையாளங்கள் இயல்பாகவும் சிறுபான்மையினரின் அடையாளங்கள் சந்தேகக் கண்கொண்டும் பார்க்கப்படுகின்றன? இந்திய தேசியம் ‘உள்ளடக்கும் தேசியம் (Inclusive Nationalism)’ என்றால் சகிப்புத்தன்மை, மதச் சுதந்திரம் போன்ற வார்த்தைகள் சிறுபான்மையினரை மையப்படுத்தி இருப்பதன் தேவை என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகாண, இருவேறு துருவங்களான தேசியம், அரசு ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட நவீன தேச அரசு எனும் கருத்தாக்கத்தின் வரலாற்றுப் பின்னணியையும் அதன் அடிப்படைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். இக்கட்டுரை அதைக்குறித்தான புதிய கண்திறப்பை நமக்கு கொடுக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

பஸ்மந்தா முஸ்லிம்களுக்கு வலை விரிக்கும் பாஜக
“நீங்கள் நினைக்கும் அளவுக்கு பிளவுபட்டதில்லை முஸ்லிம் சமூகம்” - கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலோ, அ.கலையரசன்

வட இந்தியாவில் சாதி அமைப்பானது இந்து, முஸ்லிம் சமூகத்தின் உட்பிரிவுகளுள் ஏற்படுத்தியுள்ள வர்க்க முரண்பாட்டை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டு முஸ்லிம் சமூகத்தின் மீதான சாதி அமைப்பின் குறைவான தாக்கத்தை இக்கட்டுரை நிறுவுகிறது. மேலும், முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவும் பாகுபாட்டைப் பயன்படுத்தி தனது வாக்குவங்கியை நிறுவ முயலும் பாஜகவின் தந்திரத்தை புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

மேலும் படிக்க
உரைகள் கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

முஃதஸிலா சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்

இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் பகுத்தறிவு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்திய முஃதஸிலாகள் குறித்தான நேர்மறையான அணுகுமுறையை இக்கட்டுரை வழங்குகிறது. மேலும், குர்ஆன் படைக்கப்பட்டதா?, அல்லாஹ்வின் தன்மை போன்றவற்றில் அவர்கள் கொண்டிருந்த கருத்துகளின் நியாயங்களையும் தெளிவுபடுத்துகிறது. ஒட்டுமொத்தமாக இக்கட்டுரை நமது வரலாற்றை முன்முடிவுகளுடன் கருப்பு-வெள்ளையாக அணுகாமல் அதன் நியாயங்களை புரிந்துகொள்வதனுடாக முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையை வேண்டிநிற்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

விழித்தெழுமா மக்கள் மனசாட்சி?

இந்நாட்டில் சிறுபான்மையினர் — குறிப்பாக முஸ்லிம்கள் — மீதான வன்முறையும் அவர்கள் கொல்லப்படுவதும் தினசரி செய்திகள். ஆம், அவை எவரும் கேட்டுவிட்டு கடந்துவிடும் செய்திகள், அவ்வளவுதான். இப்போது, இங்கு அரசு இயந்திரமும் அதில் கூட்டு சேர்ந்து கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியவனுக்கும் இடையில் மௌனமாக நாம் இருந்தோமெனில், அவனைத் தாக்கியது குச்சியோ துப்பாக்கியோ அல்ல; அது நாம்தான். ஏனென்றால், முதல் தாக்குதலிலேயே நாம் அதை தடுத்திருந்தால் இரண்டாவது தாக்குதல் நிகழ்ந்திருக்காது அல்லவா? இந்திய வரலாற்றில் மரங்களைக் காப்பதற்குத் தோன்றிய மக்கள் இயக்கமான சிப்கோ (Chipko) போல, முஸ்லிம்களைக் காப்பதற்கு தன்னெழுச்சியான ஒரு மக்கள் இயக்கம் தோற்றம் பெறுமா எனும் எதிர்பார்ப்பை முன்வைக்கிறது இக்கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஏன் இந்த கள்ள மௌனம்?

நாட்டில் கணிசமாக உள்ள ஒரு சமூக மக்களை ஒதுக்கிவிட்டு வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை இந்த தலைவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். இருந்தும் முஸ்லிம்களிடம் கைகோர்க்கும் சிந்தனை அவர்களிடம் ஏன் இல்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் சில கட்சிகளிடம் கூட ஒரு வித அனுதாபப் பார்வை மட்டுமே இருக்கிறது. ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் மீது அனுதாபம் கொள்வதையும் தாண்டி அவர்களுடன் இணைந்து பயணிப்பதே, அதைவிட அவசியமாகும்.

மேலும் படிக்க
உரைகள் கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஜப்ரிய்யா, கதரிய்யா, முர்ஜிஆ சிந்தனைப் பள்ளிகள்
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்

முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய கோட்பாட்டளவிலான வித்தியாசங்களைப் பார்க்கையில், அவையனைத்தும் முஸ்லிம்களின் சாராம்சத்தோடு, அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் போன்ற கேள்விகளோடு தொடர்புடையவை அல்ல என்று பார்க்கிறோம். மாறாக, அவை ‘இஸ்லாத்தில் போதுமானளவு விவரிக்கப்படாத விவகாரங்கள்’ என்று சிலர் நினைத்த விஷயங்களை விவரிக்க முற்படுவதோடு தொடர்புடையது என்று பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இ.ந்.தி.யா Vs. பா.ஜ.க.

தேர்தல் நெருங்கநெருங்க பா.ஜ.க. கொடுக்கும் நெருக்கடிகள் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்க்கட்சிகளும் ஃபாசிசத்திற்கு எதிரான சித்தாந்தம் கொண்டவர்களும் உணர வேண்டும். மூன்று மாதங்களாக மணிப்பூர் பற்றியெரிந்தாலும் நாளை யார் வீட்டிற்கு அமலாக்கத்துறையை அனுப்பலாம் என்றுதான் ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் யோசித்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. இனி வரும் நாள்களில் அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ.வின் கொடுங்கரங்கள் இன்னும் அதிகமானோரை நோக்கி நீளலாம். அரசியல் கட்சிகளுக்கு அமலாக்கத்துறை, செயல்பாட்டாளர்களுக்கு என்.ஐ.ஏ., சிலருக்கு இரண்டும் என்ற மிரட்டல்-அரசியலை பா.ஜ.க. மேலும் உக்கிரப்படுத்தவே செய்யும்.

மேலும் படிக்க