கட்டுரைகள் 

மௌதூதியின் சிந்தனைகளும் தமிழ் அறிவுலகமும்: உரையாடல்களுக்கான முன்னுரை

மௌதூதியின் சிந்தனைகளை நாம் மீள்வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் மேற்கில் வளர்ச்சியுற்ற தேசியம், ஜனநாயகம், செக்குலரிசம் பற்றிய மௌதூதியின் விமர்சனங்கள் இன்று நாம் உரையாடும் பின்நவீன, பின்காலனிய கருத்துநிலைகளோடு பொருந்திபோககூடியது. மேலும் மேற்கின் கடுமையான எதிரியாக அறியப்பட்ட அவர்தான் மேற்கின் அறிவுவளர்ச்சியை அது மேற்குக்கு மட்டும் உரியதல்ல, மாறாக முழுமனித குலத்தின் பாரம்பரிய சொத்து என்பார். இவ்வாறு பலகோணங்களில் அவரின் சிந்தனைகளை முழுமையாக பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு முன்னால் அவற்றை எலலாம் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியுள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 4) – மரியம் ஜமீலா

“எமது ‘பெருங்குற்றம்’ என்னவெனில், இஸ்லாமிய நம்பிக்கை விஷயத்தில் நாம் நயவஞ்சகர்களாக இல்லாதிருப்பதும் நம் சமூக அலுவல்களை இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கும் முயற்சிகளில் நாம் பேரார்வத்துடன் இருப்பதுமே ஆகும். இஸ்லாம்தான் எங்கள் மார்க்கம் என நாம் பிரகடனப்படுத்தும் பொழுது, இயல்பாகவே இஸ்லாம் தான், இஸ்லாம் மட்டுமே, எங்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் –அது நன்னடத்தை சம்பந்தமான, நம்பிக்கை அல்லது கொள்கை, கல்வி அல்லது ஒழுக்கம் சம்பந்தமான, சமூக கலாச்சார முயற்சிகள், அரசியல், பொருளாதார அமைப்பு, சட்டம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகள் என எல்லாவற்றையும்- வழி நடத்துவதாக அமையும். அணு அளவேனும் நம்மை மாசுபடுத்தும் எந்தவொரு அந்நிய செல்வாக்கையும் நம் தனி மற்றும் தேசிய வாழ்விலிருந்து துடைத்தெறிய வேண்டும். இவ்விஷயத்தில் எத்தகைய சமரசத்தையும் பொருட்படுத்த மாட்டோம்; எதைப் பிரகடனம் செய்தோமோ அதையே நடைமுறைப்படுத்துவோம்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 3) – மரியம் ஜமீலா

“எவரேனும் இஸ்லாத்தை மீள்கட்டமைப்பு அல்லது மறுதிசையமைப்பு செய்ய விரும்பினால், தாராளமாகச் செய்யட்டும். இஸ்லாத்தின் எந்தெந்தப் பகுதிகள் உயிரற்று உள்ளன, அவை ஏன் அவ்வாறு உள்ளன, எந்த அடிப்படையில் அவற்றை மாற்றலாம், அதன் அதிமுக்கிய உயிருள்ள பகுதிகள் எவை, அவற்றை எந்நிலையில் அவர் தக்கவைத்துக் கொள்வார் போன்ற கேள்விகளுக்கு தெளிவான வாதங்களின் அடிப்படையில் பதிலளித்தால், அவரது முயற்சிகள் வரவேற்கப்படும்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

வஹீதுத்தீன் கான் சொல்வது சமாதானமா, சரணாகதியா?

உண்மையில், அமைதியும் நீதியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். நீதி இல்லாத இடத்தில் உண்மையான அமைதி இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் அது மயான அமைதியாக, திணிக்கப்பட்ட அமைதியாகத்தான் இருக்கும். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு போராடச் சொல்கிறது இஸ்லாம். ஆனால், மௌலானா அவர்கள் இதை மறுக்கிறார். அவரது பிரதிகளை வாசிக்கும்போது, போராட்டம் என்பதையே ஒரு வன்முறை என்கிற ரீதியில்தான் அவர் பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 2) – மரியம் ஜமீலா

“எனவே, என் முன் மூன்று பிரச்னைகள் இருந்தன; நாடு பிரிக்கப்படாவிட்டால் முஸ்லிம்களை பாதுகாக்க என்ன செய்வது; நாடு பிரிக்கப்பட்டால் இந்தியாவில் தங்கிவிடும் முஸ்லிம்களுக்காக என்ன செய்வது; பிந்திய நிகழ்வில், புதிய முஸ்லிம் நாடு இஸ்லாம் அல்லாத அரசாக உருவாகிவிடாமல் தடுத்து, அசல் இஸ்லாமிய அரசாக உருவாக வழி செய்வது எவ்வாறு?”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 1) – மரியம் ஜமீலா

மரியம் ஜமீலா Islam in Theory and Practice என்ற தனது நூலில் அபுல் அஃலா மௌதூதி பற்றி எழுதியுள்ள அத்தியாயத்தை இங்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். நீண்ட ஆக்கம் என்பதால் பகுதி பகுதியாக வெளியிடுகிறோம். அதில் முதற் பகுதி கீழே.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

‘சவூதி’ அறேபியா: மாயத்திரை விலகட்டும்!

சவூதியை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ளும் இந்த பாமர உளவியலுக்குப் பின்னாலிருக்கும் காரணிகளை விளங்கிக் கொள்ளும்போதே நாம் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமாகும். அதே போல், அது தனது தோற்றம் முதல் இன்று வரை செய்து கொண்டிருப்பதென்ன என்பது பற்றியும் புரிந்து கொள்வது முக்கியம். சுருக்கமான இக்கட்டுரையின் வரம்புகளுக்குள் நின்று இவை பற்றி இயன்றவரை பார்க்கலாம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இமாம் ஹுசைன் உயிரைக் கொடுத்தது எதற்காக? – மௌலானா மௌதூதி

இஸ்லாமிய அரசின் தனித்தன்மையே இறைநம்பிக்கைதான். அப்பழுக்கில்லாத, எந்தவித குறையும் இல்லாத, உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், குடிமக்கள் மீது அரசுக்கு வரம்பற்ற அதிகாரம் கிடையாது என்பதையும், குடிமக்கள் அரசாங்கத்தின் அடிமைகள் அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் கூட முதலில் தாம் இறைவனின் அடிமைகள் என்கிற உணர்வுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அடுத்து தமது நாட்டு குடிமகன் மீது இறைச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க