தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: என்றும் மாறாதது (பகுதி 1)

மனிதன் இந்தப் பூமியில் பிரதிநிதியாக ஆக்கப்பட்டுள்ளான் என்பது என்றும் மாறாத உண்மை. அதில் அவன் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறான். பூமியை உழுது விவசாயம் செய்யக்கூடியவனாக வெளிப்படுகிறான். அவன் வாழ்க்கையின் சூழலும் அனுபவமும் அந்தக் கட்டத்தில் அவனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக விவசாயத்தையே ஆக்கியது. அதேபோல் அவன் அணுவைப் பிளப்பவனாக, பிரபஞ்சத்தின் இரகசியத்தை கண்டறிவதவதற்காக செயற்கைக்கோளை அனுப்புபவனாக வெளிப்படுகிறான். இதுவும் அதுவும் இவற்றிற்கு இடையிலுள்ளவையும் இவற்றிற்கு பின்னால் வரக்கூடியவையும் பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவத்தின் வெவ்வேறு வடிவங்கள். அவை எப்போதும் கூடுதலுக்கும் விசாலத்திற்கும் உட்பட்டவை. ஆனால் பூமியில் அவனுக்கு வழங்கப்பட்ட கிலாஃபா – பிரதிநிதித்துவம் எந்நிலையிலும் மாறாதது. அதன் மாறாத தேட்டம், மனிதனுக்கும் இறைவன் வகுத்த வழிமுறைப்படி அவனுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவத்திற்குமிடையே எதுவும் தடையாக அமைந்து விடக்கூடாது என்பதையும் இந்தப் பூமியில் மனிதனின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வண்ணம் அவனைவிட எதுவும் உயர்த்தப்பட்டு விடக்கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. இந்த உலகிலுள்ள எல்லா பொருள்களையும்விட மனிதனே உயர்ந்தவனாவான். அவனே அவற்றிற்குத் தலைவனாவான்.

மேலும் படிக்க
தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அல்பாத்திஹா: ஆரம்பம் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

அல்லாஹ்வைக்குறித்து, அவனது பண்புகள் குறித்து, அவன் படைப்புகளுடன் கொண்டுள்ள தொடர்புகள் குறித்து சரியான கண்ணோட்டத்தை நிலைநிறுத்துவதற்கு இஸ்லாம் மேற்கொண்ட நீண்ட நெடிய முயற்சியை திரும்பிப் பார்ப்பவர் – குர்ஆனின் வசனங்கள் இந்த முயற்சியை படம்பிடித்துக் காட்டுகின்றன – மனித சமூகத்தில் மண்டிக்கிடந்த தவறான கொள்கைகள், தீய கண்ணோட்டங்கள் ஆகியவற்றின் குவியல்களை அறியாமல் இஸ்லாம் மேற்கொண்ட இந்த நீண்ட நெடிய முயற்சியின் அவசியத்தை உணர்ந்துகொள்ள முடியாது. அந்தக் குவியல்களை ஆராய்ந்து பார்ப்பது இந்த முயற்சியின் அவசியத்தைத் தெளிவுபடுத்தும். மனிதனின் மனதை இத்தகைய பல்வேறு வகையான கடவுள்கள், கண்ணோட்டங்கள், யூகங்கள், புராணங்கள் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு இஸ்லாம் ஆற்றிய பங்களிப்பு என்ன என்பதும் தெளிவாகும்.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

திருக்குர்ஆனின் நிழலில் – முன்னுரை

திருக்குர்ஆன் ஓர் நித்தியத்துவப் பிரதி. அருளப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை எண்ணிலடங்கா விரிவுரைகள் அதற்கு. உலகம் சுழன்று கொண்டிருக்கும் வரை அவை தொடர்ந்த படியேதான் இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில். அற்புதமான தரிசனங்களை தந்தபடியே இருக்கும். மனிதன் தனது சிந்தனை என்ற பிஞ்சுக் கைகளால் இறைஞானப் பெருங்கடலை அள்ளிப்பருகி விடுவதற்கான அசாத்திய முயற்சி. இலக்குகளை அடையுந்தோறும் நீண்டுகொண்டே செல்லும் முடிவுறாப் பயணம். அத்தகைய திருக்குர்ஆன் வியாக்கியான மரபில் சையித் குதுபின் ‘திருக்குர்ஆனின் நிழலில்’-க்கு மறுக்கமுடியாத ஓர் இடம் எப்போதும் உண்டு. முன்முடிவுகளின்றி காலியான திறந்த மனத்தோடு திருக்குர்ஆனுடன் உரையாடி, உறவாடி அவர் தன் நெஞ்சத்தில் நிரப்பிக் கொண்ட ஒளியை ஏனைய மனிதர்களோடு பகிர்ந்துகொள்ள எடுக்கப்பட்ட பிரயத்தனத்தில் உதித்த இந்த தஃப்சீரை அழகுற தமிழுக்கு பெயர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம், வல்ல இறைவனின் உதவியை மட்டுமே நம்பி….

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 2) – சையித் குதுப்

மனிதச் சிந்தனை இந்தக் கண்ணோட்டத்தை உருவாக்காவிட்டாலும் அது மனிதனின் செயல்படும் தளத்திற்கு எதிரானதல்ல. அதனைப் பெற்று அதனடிப்படையில் தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே மனிதனின் பணி. நாம் ஏற்கனவே முன்னுரையில் குறிப்பிட்டவாறு இதனை தீர்மானிக்கப்பட்ட வேறு வகையான மதிப்பீடுகளைக்கொண்டு மதிப்பிடவோ வேறொரு கண்ணோட்டத்தைக்கொண்டு அணுகவோ முடியாது. மனிதன் தனக்குத் தேவையான மதிப்பீடுகளையும் அளவுகோல்களையும் இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டே அவன் தன்னைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையான விசயங்களை அவன் இறைவேதத்திலிருந்தே பெற வேண்டும். வேறு எந்த ஒன்றிலிருந்தும் அவற்றைப் பெறக்கூடாது. இது ஒன்றே அவனது நிகழ்கால வாழ்க்கையில் அவன் காணும் சிந்தனைகள், கண்ணோட்டங்கள் ஆகியவற்றை அளவிடுவதற்கான அளவுகோல். இதன்மூலம் அவன் சரியானதையும் தவறானதையும் அறிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 1) – சையித் குதுப்

அது அனைத்தையும் உள்ளடக்கிய சமநிலையான கண்ணோட்டம். அது முதலில் மனிதனின் எல்லாப் பகுதிகளையும் கவனத்தில் கொள்கிறது. பின்னர் அவற்றுக்கிடையே சமநிலையையும் ஒத்திசைவையும் ஏற்படுத்துகிறது. அது மனித சமூகத்தின் எல்லா காலகட்டங்களையும் கவனத்தில்கொண்டு அவையனைத்திற்குமிடையே சமநிலையை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அதனை உருவாக்கியவன்தான் மனிதனையும் உருவாக்கியவன். தான் உருவாக்கியதைப்பற்றி அவன் நன்கறிவான். இந்த மனித சமூகத்தைக்குறித்து, இதனைச் சூழவுள்ள சூழல்களைக்குறித்து அவனுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. அப்படிப்பட்டவன்தான் அதன் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய, அதன் எல்லா காலகட்டங்களுக்கும் பொருந்தக்கூடிய, சமநிலையான சரியானதொரு கண்ணோட்டத்தை மனித சமூகத்திற்காக உருவாக்கித் தந்துள்ளான்.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

காரிருள் (பகுதி 3) – சையித் குதுப்

ஜாஹிலிய்யாவை அறிந்தவரால்தான் இஸ்லாத்தின் அவசியத்தை, சிறப்பை உணர்ந்துகொள்ள முடியும். இந்த மார்க்கத்தின் பரிபூரணத் தன்மையையும் ஒத்திசைவையும் அது வெளிப்படுத்தும் உண்மையின் எளிமையையும், அதனைத்தவிர மற்ற கொள்கைகளையும் அவை ஏற்படுத்திய பாதிப்புகளையும் அறிந்தவரால்தான் மிகத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும். அச்சமயத்தில்தான் இந்த மார்க்கம் உண்மையான அருட்கொடையாகத் தென்படும். அதன் அழகியலும் எளிமையும் தெளிவும் ஒத்திசைவும் நெருக்கமும் மனித அறிவுக்கும் உள்ளத்திற்கும் ஒட்டுமொத்த மனித வாழ்வுக்கும் மிகப் பெரிய அருட்கொடையாகும். அது மனித இயல்போடு முழுவதுமாக ஒன்றிப் போகக்கூடியது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

காரிருள் (பகுதி 2) – சையித் குதுப்

“கிருஸ்தவர்கள் ரோம அரசாட்சியை வென்றபோதிலும் அவர்களால் சிலைவணக்கத்தை அடியோடு அழிக்க முடிவில்லை. மாறாக சிலைவழிபாடு அவர்களின் மார்க்கத்தோடு ஒன்றுகலந்தது. கிருஸ்தவமும் சிலைவழிபாடும் ஒன்றிணைந்து புதிய மார்க்கமாக தோற்றம் பெற்றது. இந்த இடத்தில்தான் இஸ்லாம் கிருஸ்தவத்தைவிட்டு வேறுபடுகிறது. அது சிலைவழிபாட்டை அடியோடு வீழ்த்தி தன் தூய கொள்கைகளை மக்களிடையே பரப்பியது.”

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் (பகுதி 3) – சையித் குதுப்

மனித சமூகத்தை அப்பியிருந்த காரிருளிலிருந்து அதனை விடுவிக்கவே இஸ்லாம் வந்தது. அந்தக் காரிருளில் அகப்பட்டு மனித சமூகம் வழிதெரியாமல் தடுமாறித் திரிந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட சமூகத்திற்கு தனித்துவமிக்க ஒரு கண்ணோட்டத்தையும் இறைச்சட்டங்களின் ஒளியில் சீரான ஒரு வாழ்க்கையையும் அளிக்கவே இஸ்லாம் வந்தது. அன்று மனித சமூகத்தை அப்பியிருந்த காரிருள் இன்றும் மனித சமூகத்தை அப்பியிருக்கிறது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் (பகுதி 2) – சையித் குதுப்

“நாம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகளை தேடிச் செல்வதன் நோக்கம் வெறுமனே பண்பாட்டை அறிவதோ இஸ்லாமிய நூல்களில் ஒன்றை அதிகப்படுத்துவதோ அல்ல. நிச்சயமாக மூளைவிளையாட்டுக்குப் பயன்படும் இதுபோன்ற வெற்று அறிவை நாம் நோக்கமாகக் கொள்ளவில்லை. இதுபோன்ற அற்ப நோக்கத்திற்காக நாம் பெருமுயற்சி செய்ய மாட்டோம்.”

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் (பகுதி 1) – சையித் குதுப்

இஸ்லாத்திற்கென்று தனித்த, அனைத்தையும் தழுவிய ஒரு உலகக் கண்ணோட்டம் இருக்கின்றது. இஸ்லாம் முன்வைக்கும் இறைக் கோட்பாடு தொடங்கி, அது கொண்டுவர விரும்பும் சமூக மாற்றம் வரை அனைத்தும் அதிலிருந்தே பிறக்கின்றன. அதனை இரத்தின சுருக்கமாக, திட்டவட்டமான முறையில் வரைவிலக்கணம் செய்யும் முயற்சியில் சையித் குதுப் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். ‘இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்’ (கசாயிஸ் அத்-தசவ்வுர் அல்-இஸ்லாமி) என்பது புத்தகத்தின் தலைப்பு. இஸ்லாத்தை வாழ்க்கைத் திட்டமாக நிலைநிறுத்த உழைக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய சாராம்சமான விசயங்களை அதில் முன்வைத்துள்ளார். இஸ்லாமிய உலகக் கண்ணோட்டம் என்பதென்ன என்று விளங்க முயலும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் நல்லதொரு அறிமுகப் பிரதியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் படிக்க