கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மெளதூதியைக் குறிவைக்கும் இந்துத்துவர்கள்

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மெளதூதி, சையித் குதுப் புத்தகங்களுக்குத் தடை விதிக்கும் முடிவை எடுத்திருப்பது பதற்றத்தால் அல்லது கோழைத்தனத்தால்தான்.

முதலில், பாடத்திட்டம் தொடர்பான ஒரு கடிதம் யாருக்கு எழுதப்பட வேண்டும்? பிரதமருக்கா அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவுக்கா (யூஜிசி)? யூஜிசி ஏதாவது சொல்லியிருந்தால் அந்தக் கல்வி நிறுவனம் அதுகுறித்து ஒரு நடவடிக்கை எடுக்கலாம். மாறாக, கல்விப்புலத்துக்கு சம்பந்தமில்லாத, அரசியல் உள்நோக்கு கொண்ட சிலர் ஆற்றிய வினைக்கு AMU போன்ற ஒரு மதிப்புக்குரிய கல்வி நிறுவனம் இப்படி எதிர்வினையாற்றியிருக்கக் கூடாது. இதற்குப் பதிலாக, பல்கலைக்கழகத் தன்னாட்சி, அறிவுசார் சுதந்திரம், எதுவெல்லாம் “Indic” ஆகியவற்றை விவாதத்துக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் AMU ஒரு நியாயமற்ற, பிளவுவாதக் கோரிக்கைக்குப் பணிந்துவிட்டது!

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஃகிலாஃபத்தும் மன்னராட்சியும் – நூல் அறிமுகம்

பலரும் பதில் சொல்லத் தயங்கும் ஒரு கேள்வி, ஃகிலாஃபத் எப்படி மன்னராட்சியாக மாற்றப்பட்டது என்பதுதான். அதற்கு அளிக்கப்படும் மழுப்பலான பதில்கள் தெளிவின்மையை, குழப்பத்தை அதிகரிப்பவை. அது தாமாகவே அந்த நிலையை அடைந்துவிட்டது என்பது போன்ற சித்திரத்தை ஏற்படுத்தக்கூடியவை. இங்கு அது தானாக மாறவில்லை. தனிமனிதர்களின் சுயநலத்தால் அது வலுக்கட்டாயமாக மன்னராட்சியாக மாற்றப் பெற்றது என்பதை உடைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் 

மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய மாபெரும் இஸ்லாமிய ஆளுமை மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). 20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகக் களம் கண்ட புரட்சிகர சிந்தனையாளரான அவர், இஸ்லாத்தை இம்மண்ணில் மேலோங்கிடச் செய்யும் உயரிய லட்சியத்துக்காக அல்லும் பகலும் உழைத்தவர். பல இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆதர்ச நாயகராக விளங்கிய மௌதூதியைக் கற்பதற்கான ஆர்வமும் தேடலும் உலகம் முழுக்க இன்றும் உயிர்ப்புடன் இருந்துவருகிறது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் இஸ்லாமிசமும் ஜனநாயகமும்

குஃப்ர், ஜாஹிலிய்யத், ஈமான் போன்ற இஸ்லாமிய வழக்குகளை நடப்பிலிருந்த அரசியல் அதிகாரத்திற்கும் பொருத்திய மௌதூதி, மதச்சார்பற்ற அமைப்புகளிலும் அரசாங்கத்துறைகளிலும் பங்கேற்பதைத் தடைசெய்தார். தேர்தலில் பங்கேற்பதையும் வாக்களிப்பதையும் தடை செய்தார். இதுபோன்ற தீவிரத்தன்மை கொண்ட அறிவுறுத்தல்களை ஏற்கமறுத்த முஸ்லிம் சமூகம், தங்களது வாழ்க்கை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் யதார்த்தபூர்வமான வழிகளை நோக்கிப் பயணிக்கும்படி ஜமாத்தை உந்தித்தள்ளியது. ஜமாத்தும் தனது தீவிரத்தன்மைகளோடான புறக்கணிப்புவாத கருத்தியலைக் கைவிட்டு, பங்கேற்புவாதப் பாதைக்கு நகர்ந்தது. 

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 10) – மரியம் ஜமீலா

“இஸ்லாத்தை உண்மையாக நேசிப்பவர்கள், அதுதான் சத்தியம் என்பதில் உள்ளத்தால் திருப்தியடைந்தவர்கள் மேலும் அதில் உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டவர்கள், தற்போதைய நிலைமைக்காக ஒருபோதும் பேரச்சம் கொள்ளவோ, அவநம்பிக்கைக்கு சரணடையவோ மாட்டார்கள். அத்தகையவர்கள், இஸ்லாத்தின் உயர்நிலைக்காக தங்கள் கடைசி மூச்சு வரை போராடுவது –அது இவ்வுலகில் வெற்றியாயினும் தோல்வியாயினும்- தங்கள் கடமை என்று கருதுகின்றனர். அவர்களது முயற்சிகள் இங்கு தோல்வியடைவது போல் தோன்றினும் உண்மை வெற்றி என்பது மறுமையில் பெறும் பாவமீட்சியே என்று நம்புகின்றனர். மேலும் அதுவே அவர்களது குறிக்கோள். இந்தக் கண்ணோட்டத்தில், உண்மையான கடமையுணர்ச்சி கொண்ட முஜாஹிதுகள் தோல்வியடைவதில்லை. மாறாக தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறிகொண்டே, இஸ்லாமிய ஒழுங்கிற்காக பாடுபடுபவர்களை வீழ்த்தவும் தடுக்கவும் தங்களால் இயன்றளவு முயற்சி செய்பவர்களே அசலில் தோல்வியும் வீழ்ச்சியும் அடைகின்றனர். அவர்களே இவ்வுலகிலும் மறு உலகிலும் இறைவனின் தண்டனைக்கு தகுதியானவர்கள். அத்தண்டனை தாமதமாகலாம், எனினும் அல்லாஹ்வின் சீற்றம் வரும்போது அது முழு உலகிற்கும் ஒரு எச்சரிகையாகவும் கடிந்துரையாகவும் அமையும். எனினும் நாளை காலை சூரியன் உதிக்கும் என்பதை எந்தளவு உறுதியாக நான் நம்புகிறேனோ, அதேபோல் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியப் படை முடிவாக வெற்றி பெறும் என்பதையும் நான் நம்புகிறேன்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 9) – மரியம் ஜமீலா

“கிழக்குப் பாகிஸ்தானில் இஸ்லாத்திற்கும் ஐக்கிய பாகிஸ்தானிற்கும் விசுவாசமான பல இலட்சக்கணக்கான முஸ்லிம் வங்காளிகளும் வங்காளியல்லாதோரும் இந்திய இராணுவம் மற்றும் முக்தி பாஹினியின் கூட்டுக் கொலைகள், கூட்டுக் கைதுகள் மற்றும் பரவலான இரையாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு கொடூர ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர். ராக்கெட் மற்றும் குண்டுகளால் தாக்கப்படும் வங்காளியல்லாத முஸ்லிம்களின் குடியிருப்புப் பகுதிகள் நிர்மூலமாக்கப்படும் அபாயத்தில் உள்ளன. டாக்காவில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வங்காளியல்லாத முஸ்லிம்கள் துடைத்தழிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர். மத மற்றும் கல்வி நிறுவனங்கள் அழிக்கப்பட்டு மூடப்படுகின்றன. வங்காள முஸ்லிம் உலமாக்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது கைது செய்யப்படுகிறார்கள். பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகள் நடைபெறுவது சிரமமாகிவிட்டது. பாகிஸ்தான் இராணுவத்தின் ஒடுக்குமுறை என்ற கட்டுக்கதைகளை ஒலித்துக் கொண்டிருந்த வல்லரசுகளும் பிற நாடுகளும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் என்று கூறப்படுவதன் ஆக்கிரமிப்புப் படைகள் செய்யும் அடக்குமுறைகள் மட்டும் அடக்குமுறைகளே இல்லை என்பது போலும் அவை நன்மையானவை என்பது போலும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. தயவு செய்து இந்த இரத்தக் களரியையும் ஒடுக்குமுறையையும் நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுங்கள்!”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 8) – மரியம் ஜமீலா

“ஜமாத்தும் அதன் எழுத்துப் பணிகளும், தேசிய வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் நுழைந்து இஸ்லாத்தின்படி நம் வாழ்க்கையை எப்படி மறுகட்டமைப்பு செய்வது என்றும், நவீன காலத்தில் இஸ்லாத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்றும், உலகளாவிய அளவில் இஸ்லாம் எப்படி வழிகாட்டியாகத் திகழ முடியும் என்பதையும் மனமேற்கும்படியான வாதங்களுடன் எடுத்துரைத்தன. ஜமாத்தும் அதன் எழுத்துக்களும், மேற்கத்தியக் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் அதன் வாழ்க்கைத் தத்துவத்தையும், பொருள்முதல்வாதம் மற்றும் கம்யுனிசத்தையும் நுணுக்கமான பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, கற்றறிந்த வர்க்கத்தின் நலனுக்காக, அவற்றின் பலவீனங்களையும் பிழைகளையும், அவைகளை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் துயரமான விளைவுகளையும் மிக விரிவாக வெளிப்படுத்தின.”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 7) – மரியம் ஜமீலா

“இஸ்லாத்தின் போதனைகளின்படி, நீதமான வழியில் ஒருவன் சம்பாதித்த அனைத்தும் அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அல்லாஹ்வின் அருட்கொடைக்கு வரம்பு ஏதும் இல்லை. முறைகேடான சொத்து எவ்வளவு சிறியதாக இருப்பினும் அது முறைகேடானதே. முறையாக சம்பாதித்த சொத்து எவ்வளவு பெரியதாக இருப்பினும் அது முறையானதே. தனிச் சொத்துக்களை பலப்பிரயோகம் செய்து அரசாங்கம் கைப்பற்றுவதைவிட –சிறிய நோய்க்கு பெரிய நோய் கொண்டு சிசிச்சை அளிப்பதை விட- அநீதமாக செல்வம் குவிவதற்கு வழிவகுக்கும் முறைகேடான வழிகளனைத்தையும் தடுக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவ தேவைகள் ஆகியவை அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 6) – மரியம் ஜமீலா

“இன்று முஸ்லிம் உலகை குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்லாமிய மாநாட்டிற்கான இவ்வழைப்பு புதிய நம்பிகைகளை ஊட்டுகிறது. எனவே நட்பு மற்றும் கூட்டுறவுக்கான அழைப்பு எந்த நாட்டிலிருந்து வந்தாலும், முஸ்லிம்கள் அதை வரவேற்க வேண்டும்; அதே சமயம் நமது பின்தங்கிய நிலையையும் ஒற்றுமையின்மையையும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்றென்றும் கண்காணித்துக் கொண்டிருக்கும் உலக சக்திகள் குறித்து எச்சரிகையாக இருக்க வேண்டும். உண்மையில், எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமையை வேண்டி நிற்கிறது. இதன் காரணமாக ஒவ்வொருவரின் தனித்தனிச் சக்தியும் ஒரே கூட்டுச் சக்தியாக மாறிவிடும். இது மட்டுமே, முஸ்லிம்கள் தங்கள் சுதந்திரத்தைத் தக்கவைத்து, உலக விவகாரங்களில் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான பங்காற்றி, தாங்கள் பெரிதும் விரும்பும் புத்துயிர்ப்பைக் கொண்டுவருவதற்கான பாதையாகும்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 5) – மரியம் ஜமீலா

“இஸ்லாம் தனது மனித சமத்துவம் என்ற கருத்துருவாக்கத்தை ஒரு விளைவற்ற தத்துவமாக வழங்கவில்லை. இக் கருதுகோளின் அடிப்படையில் ஒரு சமூகத்தை நிறுவியது. அச் சமூகத்தில் பல்வேறு இனங்களையும் தேசங்களையும் முழுமையான சமத்துவத்தின் அடிப்படையில் ஒன்று சேர்த்தது. அனைத்து இன, நிற, மொழி அல்லது தேசிய வேறுபாடுகளும் அழிக்கப்பட்டன. அது மட்டுமல்ல. இதே கொள்கையின் அடிப்படையில் ஒரு உலகளாவிய தேசத்தை நிறுவி அதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் காட்டியது. முழு முஸ்லிம் உலகமும் ஒரே சட்டத்தைக் கொண்டு ஆட்சி செய்யப்பட்டது. முஸ்லிம்கள் அனைவரும் ஒரே குடும்பமாகத் திகழ்ந்தனர். ஒருவர் –அவர் கிழக்கிலிருந்து வந்திருப்பினும் மேற்கிலிருந்து வந்திருப்பினும்- இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் உடனே அவர் இஸ்லாமியச் சமூகத்தின் உறுப்பினராக மாறிவிடுவார்; மேலும் பிற முஸ்லிம்களைப் போன்றே சம உரிமைகளையும் தனிச் சலுகைகளையும் அனுபவிப்பார்.”

மேலும் படிக்க