தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இறைவனிடமிருந்து வந்த கண்ணோட்டம் (பகுதி 4) – சையித் குதுப்

மனிதன் இறைவனிடமிருந்து பெற்ற இஸ்லாமியக் கண்ணோட்டம் தூய அருட்கொடையாகும். அது அறியாமைமிகுந்த, பலவீனமான மனிதனை பலனில்லாமல் வீணாகக் களைப்படைவதிலிருந்து காப்பாற்றி அவனது ஆற்றல்களை அவனுக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான பணிகளில் பயன்படச் செய்தது. அந்த அருட்கொடையை மனிதனுக்கு வழங்கிய இறைவன் அதையே அவனுக்கு ஆதாரமாக, அளவுகோலாக ஆக்கியுள்ளான். அது, மனிதன் அதனைப்பெற்று அதனடிப்படையில் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தன் வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் அதனையே அளவுகோலாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும்தான். ஆனால் மனிதர்கள் இந்த அருட்கொடையை விட்டுவிட்டதனால் வழிகெட்டுத் தடுமாறித் திரிந்தார்கள். சிரிப்பூட்டக்கூடிய, அழுகையை உண்டாக்கக்கூடிய கண்ணோட்டங்களையும் வழிமுறைகளையும் உருவாக்கினார்கள். அவை அவர்களின் வாழ்வை சீர்குலைத்ததோடு பெரும் குழப்பத்திலும் காரிருளிலும் அவர்களைத் தள்ளிவிட்டன.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

மௌதூதியின் சிந்தனைகளும் தமிழ் அறிவுலகமும்: உரையாடல்களுக்கான முன்னுரை

மௌதூதியின் சிந்தனைகளை நாம் மீள்வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் மேற்கில் வளர்ச்சியுற்ற தேசியம், ஜனநாயகம், செக்குலரிசம் பற்றிய மௌதூதியின் விமர்சனங்கள் இன்று நாம் உரையாடும் பின்நவீன, பின்காலனிய கருத்துநிலைகளோடு பொருந்திபோககூடியது. மேலும் மேற்கின் கடுமையான எதிரியாக அறியப்பட்ட அவர்தான் மேற்கின் அறிவுவளர்ச்சியை அது மேற்குக்கு மட்டும் உரியதல்ல, மாறாக முழுமனித குலத்தின் பாரம்பரிய சொத்து என்பார். இவ்வாறு பலகோணங்களில் அவரின் சிந்தனைகளை முழுமையாக பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு முன்னால் அவற்றை எலலாம் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியுள்ளது.

மேலும் படிக்க