கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிமியைக் குற்றப்படுத்தாதீர்கள்! – பேரா. இர்ஃபான் அஹ்மது

9/11 தாக்குதலைத் தொடர்ந்து உலகெங்குமுள்ள அரசுகள் முஸ்லிம்கள்மீது அடக்குமுறைகளையும் தீவிரக் கண்காணிப்பையும் முடுக்கிவிட்டன. கறுப்புச் சட்டங்களை இயற்ற, இஸ்லாமிய இயக்கங்களைத் தடை செய்ய அச்சந்தர்ப்பத்தை அவை லாவகமாகப் பயன்படுத்திக்கொண்டன. சிமி முதன்முதலாகத் தடை செய்யப்பட்டதும் அப்போதுதான்.

2006ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் மானுடவியல் துறைப் பேராசிரியர் இர்ஃபான் அஹ்மது எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. சிமி குறித்து பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்துவதற்காக முழு வீச்சுடன் செயல்படும் ஊடகமும் அதிகார வர்க்கமும் சிமியின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்தது எது என்ற அடிப்படையான கேள்வியைக் கண்டுகொள்வதே இல்லை. இக்கட்டுரை அந்த அம்சம் குறித்துதான் கவனப்படுத்த முனைகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்து ஓரியண்டலிசத்தின் பன்முகங்கள் – பேரா. இர்ஃபான் அஹ்மது உரைத் தொகுப்பு

கடந்த பிப்ரவரி மாதம் 25 அன்று ஆஸ்திரேலியா இந்தியா முஸ்லிம் மன்றம் (AIMF) நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் பேரா. இர்ஃபான் அஹ்மது, ‘இந்து ஓரியண்டலிசத்தின் முகங்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். 2014ல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் போக்கும் நகர்வும் புதிய பரிமாணத்தை எட்டியிருப்பதை அறிவோம். அதை வெறுமனே அரசியல் ரீதியில் அணுகாமல், அதன் அறிவுசார் அடித்தளத்தை நாம் இனங்காண வேண்டும் என்கிறார் இர்ஃபான் அஹ்மது. அதைக் குறிக்கவே ‘இந்து ஓரியண்டலிசம்’ எனும் புதிய பதத்தைப் பயன்படுத்துகிறார்.

இங்கு முதன்மையானது அறிவமைப்புதான் (Knowledge System) என்று சுட்டிக்காட்டும் அவர், சமகால அரசியல் போக்கானது கடந்த காலத்திலிருந்து (குறிப்பாக நேரு, காந்தி, பட்டேல் போன்றோர் பாதையிலிருந்து) தடம் புரண்டதால், திசை மாறியதால் உருவாகியிருப்பதாக நிலவும் பொதுக் கருத்தைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, கடந்த காலத்தின் நீட்சியாக தற்போதைய சூழலைக் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்திய முஸ்லிம்கள் சிறுபான்மையினரா?

சிறுபான்மை என்று வரையறுக்கப்படுவதில் எண்ணிக்கை மட்டுமே மையமான அம்சம் அல்ல. ஒரு அரசியல் அமைப்பில் பெரும்பான்மைச் சமூகத்தை ஒப்பிடுகையில் சிறுபான்மைச் சமூகம் எவ்வாறு அதிகாரம் குன்றிய நிலையில் இருக்கிறது என்பதே அதில் மையமானது.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கும்பல் கொலைகளை ஏன் பயங்கரவாதம் என்கிறோம்?

கும்பல் கொலைகளில் ஈடுபடுபவர்களை நூறு கோடி இந்துக்களின் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் பார்க்கவில்லை. ஜனநாயக அமைப்பின் மீது முஸ்லிம்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவ்விசயத்தில் முஸ்லிம்கள் மகத்தான நன்னடத்தையை -அசலான ஜனநாயகவாதிகளின் நடத்தையை- வெளிப்படுத்துகிறார்கள். வெறும் தேர்தல் ஜனநாயகத்தின் விழுமியத்தை அல்ல, ஜனநாயகம் எனும் பண்பாட்டு விழுமியத்தை அவர்கள் இவ்விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். முஸ்லிம்களின் மொழியில் ‘சப்ரு’ என்று சொல்லப்படும் நிலைகுலையாமையையும் அழகிய பொறுமையையும் பேணி வருகிறார்கள்.

மேலும் படிக்க