தொடர்கள் மொழிபெயர்ப்பு 

காரிருள் (பகுதி 1) – சையித் குதுப்

மனிதனின் கண்ணோட்டத்திற்கும் சமூக அமைப்பிற்குமிடையே என்றும் அறுபடாத உறுதியான தொடர்பு உண்டு. அவனது சமூக அமைப்பு, இந்தப் பிரபஞ்சத்தைக் குறித்தும் அதில் மனிதனின் நிலை மற்றும் அவன் படைக்கப்பட்ட நோக்கம் குறித்தும் தெளிவுபடுத்தக்கூடிய அந்த விளக்கத்திலிருந்தே வெளிப்படும் ஒன்றாகும். இந்த விளக்கத்தின் அடிப்படையில் அல்லாமல் கட்டமைக்கப்படும் சமூக அமைப்பு வாழத் தகுதியற்ற செயற்கையான சமூக அமைப்பாக இருக்கும். அது நிலைத்திருக்கும் காலகட்டம் மனிதனுக்குத் துன்பம் மிகுந்த, அதற்கும் அவனது இயல்புக்குமிடையே மோதல் நிகழும் காலகட்டமாகத்தான் இருக்கும். அது இயல்பான தேவை மட்டுமல்லாமல் அமைப்பியல் ரீதியான தேவையும்கூட.

மேலும் படிக்க