காணொளிகள் குறும்பதிவுகள் 

சூஃபி இனாயத் நிறுவிய கம்யூன்

சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமென்ற இஸ்லாத்தின் குறிக்கோளை அடைவதற்கு வெறுமனே ‘செல்வம் பகிர்ந்தளிக்கப்படுவது’ மட்டும் போதாது; செல்வம் ஈட்டுவதற்கான ‘உற்பத்தி முறையையே’ புரட்சிகரமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்து கொண்ட சூஃபி ஷாஹ் இனாயத் (1655-1718), கல்வி மற்றும் ஆன்மிகப் பணிகளுக்காக அரசு வழங்கிய விளைநிலத்தில், கூட்டு முறையில் விவசாயம் செய்து, கிடைக்கும் விளைச்சலை எல்லோரும் அவரவரின் தேவைக்கேற்ப பகிர்ந்துகொள்ளும் பரிசோதனை முயற்சியை சிந்துப் பகுதியில் வெற்றிகரமாக செய்து காட்டினார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

வஹீதுத்தீன் கான் சொல்வது சமாதானமா, சரணாகதியா?

உண்மையில், அமைதியும் நீதியும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். நீதி இல்லாத இடத்தில் உண்மையான அமைதி இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால் அது மயான அமைதியாக, திணிக்கப்பட்ட அமைதியாகத்தான் இருக்கும். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு போராடச் சொல்கிறது இஸ்லாம். ஆனால், மௌலானா அவர்கள் இதை மறுக்கிறார். அவரது பிரதிகளை வாசிக்கும்போது, போராட்டம் என்பதையே ஒரு வன்முறை என்கிற ரீதியில்தான் அவர் பார்க்கிறார் என்பதை அவதானிக்க முடியும்.

மேலும் படிக்க