கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்து ஓரியண்டலிசத்தின் பன்முகங்கள் – பேரா. இர்ஃபான் அஹ்மது உரைத் தொகுப்பு

கடந்த பிப்ரவரி மாதம் 25 அன்று ஆஸ்திரேலியா இந்தியா முஸ்லிம் மன்றம் (AIMF) நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் பேரா. இர்ஃபான் அஹ்மது, ‘இந்து ஓரியண்டலிசத்தின் முகங்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். 2014ல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் போக்கும் நகர்வும் புதிய பரிமாணத்தை எட்டியிருப்பதை அறிவோம். அதை வெறுமனே அரசியல் ரீதியில் அணுகாமல், அதன் அறிவுசார் அடித்தளத்தை நாம் இனங்காண வேண்டும் என்கிறார் இர்ஃபான் அஹ்மது. அதைக் குறிக்கவே ‘இந்து ஓரியண்டலிசம்’ எனும் புதிய பதத்தைப் பயன்படுத்துகிறார்.

இங்கு முதன்மையானது அறிவமைப்புதான் (Knowledge System) என்று சுட்டிக்காட்டும் அவர், சமகால அரசியல் போக்கானது கடந்த காலத்திலிருந்து (குறிப்பாக நேரு, காந்தி, பட்டேல் போன்றோர் பாதையிலிருந்து) தடம் புரண்டதால், திசை மாறியதால் உருவாகியிருப்பதாக நிலவும் பொதுக் கருத்தைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, கடந்த காலத்தின் நீட்சியாக தற்போதைய சூழலைக் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

உண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்?

உண்மையிலேயே முற்றிலும் பாதகமான சூழலை எதிர்கொண்டு, பொதுப்போக்கிற்கு எதிர்த்திசையில் பயணித்து சத்தியத்தைத் தேடமுனைவது இதில் யார்?

மேலும் படிக்க