கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

செக்யுலரிசம்: அரசியல் நவீனத்துவத்தின் புனிதப் பசு

இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய நாடுகளைப் போல் அனைத்து மதங்களையும் விலக்குவது அல்ல; மாறாக அவ்வனைத்தையும் சமமாக நடத்துவது எனக் கூறப்பட்டு வந்தாலும் இங்கு ஏன் பெரும்பான்மையினரின் அடையாளங்கள் இயல்பாகவும் சிறுபான்மையினரின் அடையாளங்கள் சந்தேகக் கண்கொண்டும் பார்க்கப்படுகின்றன? இந்திய தேசியம் ‘உள்ளடக்கும் தேசியம் (Inclusive Nationalism)’ என்றால் சகிப்புத்தன்மை, மதச் சுதந்திரம் போன்ற வார்த்தைகள் சிறுபான்மையினரை மையப்படுத்தி இருப்பதன் தேவை என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகாண, இருவேறு துருவங்களான தேசியம், அரசு ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட நவீன தேச அரசு எனும் கருத்தாக்கத்தின் வரலாற்றுப் பின்னணியையும் அதன் அடிப்படைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். இக்கட்டுரை அதைக்குறித்தான புதிய கண்திறப்பை நமக்கு கொடுக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிவில் சமூகம்: இஸ்லாமிய வரலாற்றில் அதன் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும்

நபியவர்களின் (ஸல்) காலத்தில் சிறந்தொரு சிவில் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை விழுமியங்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன், உமையாக்களின் காலப்பகுதியில் அதிகாரச் சக்திகளுக்கு எதிரான சிவில் சமூகத்தின் எதிர்ப்பரசியல் செயற்பாடுகள் துளிர்விட ஆரம்பித்தன. தொடர்ந்து, அப்பாஸிய காலப்பிரிவில் சிவில் சமூகத்தின் ஏனைய கூறுகளான தொழிற்சங்கங்களின் எழுச்சி, அறிஞர்களின் செல்வாக்கு, சமூகநலச் செயற்திட்டங்களின் மேம்பாடு போன்றவை வளர்ச்சிகண்டன. ஆனால், உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசிக் காலப்பிரிவிலும், புதிய தேசிய அரசுகளது தோற்றத்தின் பின்புலத்தில் இயங்கிய சர்வதிகார அரசியல் சக்திகளாலும் சிவில் சமூகக் கட்டமைப்புகள் காவுகொள்ளப்பட்டன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சாத்தியம் இல்லாத தேசியம்

தேசியவாதம் போதையைக் கொடுக்கிறது. சுயநலம்தான் அதன் ஆதாரமாக இருக்கிறது. தேசியவாதத்தை எத்தகைய நியாயமும் இல்லாத ஒன்றாக தாகூர் பார்த்தார் என்றால் அதற்குக் காரணம், எந்தவொரு தேசியவாதத் திட்டத்திலும் எப்போதும் அதன் மையமாக அதிகாரத்திற்கான முனைப்புதான் இருந்துவந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது என்பதனால்தான். அவரைப் பொறுத்தமட்டில், ‘தேசியம் மிகக் கச்சிதமாக உருவாக்கியிருப்பது அதிகார அமைப்பைத்தானே தவிர, ஆன்மிக லட்சியவாதத்தை அல்ல. இது, அதன் இரையை வேட்டையாடக் காத்திருக்கும் மிருகம்போல் இருக்கிறது…’.

மேலும் படிக்க