The Evolution of Atheism: The Politics of Modern Movement tamil தமிழ் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

நாத்திகவாதத்தின் பரிணாமம் (நூல் அறிமுகம்)

சமகாலத்தில் தீவிரமாக அலசப்படும் ஒரு தோற்றப்பாடாக நவநாத்திகம் (New-Atheism) மாறியிருக்கிறது. அந்த வகையில், நவநாத்திகவாதத்தை அதன் அறிவுத் தத்துவம், பண்பாட்டு நோக்கு மற்றும் சமூக-அரசியல் பரிமாணம் எனப் பல்வேறு கோணங்களில் ஆராயும் மிக முக்கியமான புத்தகமாக சமூகவியல் ஆய்வாளர் ஸ்டிபன் லெட்ரூவின் The Evolution of Atheism: The Politics of Modern Movement உள்ளது. யோர்க் பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டத்திற்காகச் சமர்பிக்கப்பட்ட ஆய்வை ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பொதுவாக, சமூகவியல் பரப்பில் மத நம்பிக்கையாளர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள், சமூக-அரசியல் விவகாரங்களை அணுகுவதில் அவர்களது மதம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது போன்ற கேள்விகளை ஆய்வு செய்வதிலேயே ஆய்வாளர்கள் அதிகம் கரிசனம் கொள்கிறார்கள். ஆனால், மதத்தைத் துறந்தவர்கள் அல்லது நாத்திகர்களின் சமூக நடத்தை எப்படியிருக்கிறது என்பது குறித்த ஆய்வுகள் சமூகவியல் துறையில் மிக அரிது. அந்த இடைவெளியை இப்புத்தகம் பூர்த்தி செய்ய முயல்வதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நாத்திகமும் மனித வாழ்வும் – ஒரு தத்துவார்த்த பார்வை

நாத்திகம் என்றால் என்ன? கடவுள் இல்லை என்ற ‘நம்பிக்கை’யைத்தான் நாம் நாத்திகம் என்கிறோம். கடவுள் இல்லை என்பது ஒரு நம்பிக்கையா? ஆதாரமின்றி அல்லது தர்க்க ரீதியான சரியான காரணமின்றி முன்வைக்கப்படும் கூற்றுகள் அனைத்துமே நம்பிக்கைகள்தானே!

கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் உண்டா என்று நாத்திகர்களிடம் கேட்டால், இருப்பதற்குத்தான் ஆதாரம் கொடுக்க முடியும்; இல்லாததற்கு ஆதாரம் கொடுக்கத் தேவையில்லை என்று அவர்கள் சொல்லக்கூடும். இவ்வாதம் ஏற்புடையதன்று. கடவுள் இல்லை என்று அவர்களுக்கு எப்படி தெரியும், அதைத் தக்க ஆதாரத்துடன் அவர்கள் முன்வைத்தால் நாமும் தெரிந்துகொள்ளலாம் அல்லவா!

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நாத்திகம் என்னும் சீர்குலைவு

இறைவனை மறுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அவனை ஏற்றுக்கொள்வதற்குக் காரணம் எதுவும் தேவையில்லை. மனிதன் தன் இயல்பு நிலையில் நிலைத்திருத்தலே போதுமானது. மேலோட்டமான அறிவு இறைவனை மறுக்கத் தூண்டலாம். ஆனால் ஆழமான அறிவு நிச்சயம் மனிதனை இறைவனின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

உண்மையான ‘சுதந்திரச் சிந்தனையாளர்’ யார்?

உண்மையிலேயே முற்றிலும் பாதகமான சூழலை எதிர்கொண்டு, பொதுப்போக்கிற்கு எதிர்த்திசையில் பயணித்து சத்தியத்தைத் தேடமுனைவது இதில் யார்?

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்

காலம் என்று ஒன்று இருக்கிறதா? நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப்படி நிரூபிப்போம்? இன்னும் சொல்வதென்றால், காலம் என்றால் என்ன என்பதை எப்படி வரையறுப்போம்?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நாத்திகம் – ஒரு குறுக்கு விசாரணை

மதநம்பிக்கையாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும் வேறு வழியில்லாமலும் அவர்கள் படைப்பாளனின் இடத்தில் இயற்கையை வைக்கிறார்கள். மதநம்பிக்கையாளர்கள் படைப்பாளனுக்கு வழங்கும் அத்தனை பண்புகளையும் அவர்கள் இயற்கைக்கு வழங்குகிறார்கள். வெறும் பெயரைத்தான் மாற்ற முடிந்ததே தவிர அது உருவாக்கும் எந்தக் கேள்விகளுக்கும் அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

“மரணத்திற்குப் பிறகான வாழ்வு என்பது மதம் உருவாக்கிய கட்டுக்கதை!”

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நிலைத்த பின்விளைவுகள் முடிவற்ற காலம் வரை நீடித்திருக்கும் என்கிற கருத்துதான் உண்மையில் அச்சம் தருவது. அது ‘நம் வாழ்வின் அர்த்தம் என்ன?’, ‘அதன் நோக்கம் என்ன?’ போன்ற கேள்விகளின்பால் கவனத்தைக் குவிக்கும்படி நம்மை வற்புறுத்துவதுடன், நாம் செய்யும் செயல்கள் யாவற்றைக் குறித்தும் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதால் நாம் நம்முடைய செயல்களை மிகக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அது நம்மை வற்புறுத்துகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 6) – மரியம் ஜமீலா

“இன்று முஸ்லிம் உலகை குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்லாமிய மாநாட்டிற்கான இவ்வழைப்பு புதிய நம்பிகைகளை ஊட்டுகிறது. எனவே நட்பு மற்றும் கூட்டுறவுக்கான அழைப்பு எந்த நாட்டிலிருந்து வந்தாலும், முஸ்லிம்கள் அதை வரவேற்க வேண்டும்; அதே சமயம் நமது பின்தங்கிய நிலையையும் ஒற்றுமையின்மையையும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்றென்றும் கண்காணித்துக் கொண்டிருக்கும் உலக சக்திகள் குறித்து எச்சரிகையாக இருக்க வேண்டும். உண்மையில், எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமையை வேண்டி நிற்கிறது. இதன் காரணமாக ஒவ்வொருவரின் தனித்தனிச் சக்தியும் ஒரே கூட்டுச் சக்தியாக மாறிவிடும். இது மட்டுமே, முஸ்லிம்கள் தங்கள் சுதந்திரத்தைத் தக்கவைத்து, உலக விவகாரங்களில் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான பங்காற்றி, தாங்கள் பெரிதும் விரும்பும் புத்துயிர்ப்பைக் கொண்டுவருவதற்கான பாதையாகும்.”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

ஒரு முஸ்லிம் ஐயவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் – டேனியல் ஹகீகத்ஜூ

முஸ்லிம் அறிவுத்துறை வரலாறு நெடுகிலும் இத்தகைய முஸ்லிம் ஐயவாதிகள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றனர். அவர்கள் எந்தெந்த தத்துவங்களை எல்லாம் அபாயகரமானவையாகவும் நாசகரமானவையாகவும் கண்டார்களோ அவற்றை மதிப்பீடு செய்யவும், நிலைகுலையச் செய்யவும், விமர்சனத்திற்கு உட்படுத்தவும், வீழ்த்தவும் எல்லாவிதமான பகுத்தறிவு மூலோபாயங்களையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதைக் காண முடிகிறது. இன்றைய முஸ்லிம்கள் தொலைத்துவிட்டவொரு அரிய கலை இது.

மேலும் படிக்க