கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 9) – மரியம் ஜமீலா

“கிழக்குப் பாகிஸ்தானில் இஸ்லாத்திற்கும் ஐக்கிய பாகிஸ்தானிற்கும் விசுவாசமான பல இலட்சக்கணக்கான முஸ்லிம் வங்காளிகளும் வங்காளியல்லாதோரும் இந்திய இராணுவம் மற்றும் முக்தி பாஹினியின் கூட்டுக் கொலைகள், கூட்டுக் கைதுகள் மற்றும் பரவலான இரையாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு கொடூர ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர். ராக்கெட் மற்றும் குண்டுகளால் தாக்கப்படும் வங்காளியல்லாத முஸ்லிம்களின் குடியிருப்புப் பகுதிகள் நிர்மூலமாக்கப்படும் அபாயத்தில் உள்ளன. டாக்காவில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வங்காளியல்லாத முஸ்லிம்கள் துடைத்தழிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர். மத மற்றும் கல்வி நிறுவனங்கள் அழிக்கப்பட்டு மூடப்படுகின்றன. வங்காள முஸ்லிம் உலமாக்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது கைது செய்யப்படுகிறார்கள். பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகைகள் நடைபெறுவது சிரமமாகிவிட்டது. பாகிஸ்தான் இராணுவத்தின் ஒடுக்குமுறை என்ற கட்டுக்கதைகளை ஒலித்துக் கொண்டிருந்த வல்லரசுகளும் பிற நாடுகளும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் என்று கூறப்படுவதன் ஆக்கிரமிப்புப் படைகள் செய்யும் அடக்குமுறைகள் மட்டும் அடக்குமுறைகளே இல்லை என்பது போலும் அவை நன்மையானவை என்பது போலும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. தயவு செய்து இந்த இரத்தக் களரியையும் ஒடுக்குமுறையையும் நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுங்கள்!”

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 8) – மரியம் ஜமீலா

“ஜமாத்தும் அதன் எழுத்துப் பணிகளும், தேசிய வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் நுழைந்து இஸ்லாத்தின்படி நம் வாழ்க்கையை எப்படி மறுகட்டமைப்பு செய்வது என்றும், நவீன காலத்தில் இஸ்லாத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்றும், உலகளாவிய அளவில் இஸ்லாம் எப்படி வழிகாட்டியாகத் திகழ முடியும் என்பதையும் மனமேற்கும்படியான வாதங்களுடன் எடுத்துரைத்தன. ஜமாத்தும் அதன் எழுத்துக்களும், மேற்கத்தியக் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் அதன் வாழ்க்கைத் தத்துவத்தையும், பொருள்முதல்வாதம் மற்றும் கம்யுனிசத்தையும் நுணுக்கமான பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, கற்றறிந்த வர்க்கத்தின் நலனுக்காக, அவற்றின் பலவீனங்களையும் பிழைகளையும், அவைகளை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் துயரமான விளைவுகளையும் மிக விரிவாக வெளிப்படுத்தின.”

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 7

ஏகாதிபத்தியவாதிகளும் ஸியோனிஸ்டுகளும் முஸ்லிம் நாடுகளைத் தாக்கி அப்பாவி முஸ்லிம்களை அழித்து வருவதற்கு பழிவாங்கும் முகமாகவே தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தி, எதிரிகளின் பாதுகாப்பை உருக்குலைக்க முனைகிறோம் என்று கூறி, போரில் ஈடுபடாத பொதுமக்களின் மீது தாம் நடத்தும் படுகொலைகளுக்கு உலக முஸ்லிம்களின் மனங்களில் ஒருவித சட்டஏற்பினை ஏற்படுத்த முனைகிறார்கள்.

மேலும் படிக்க