கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் மதரசாக்கள் – நிழலும் நிஜமும்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இன்னும் 8.5 கோடி குழந்தைகள் பள்ளியையே எட்டிப் பார்க்காத நிலையில், மதரசாக்கள் தன்னளவில் அறிவொளியைப் பரப்பியே வருகின்றன. அதிலும், மதரசாக்களில் பயில்பவர்கள் சமூகத்தின் அடித்தட்டு மக்களாகவும் பெண்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கான உணவு, உறையுள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளோடு அவர்களுக்கான கல்வியும் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பு இல்லையென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் படிக்காத தற்குறிகளாகத்தான் ஆவார்கள். நவீனச் சிந்தனை என்ற போர்வையில் மதரசாவை மட்டும் குறிவைத்துத் தாக்குபவர்கள் சிறுபான்மைச் சமுதாயத்திற்கு எதைக் கையளிக்கப்போகிறார்கள்?

மேலும் படிக்க
கட்டுரைகள் 

நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 4

தம்முடைய ‘ஃகிலாஃபாவுடன்’ போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் கேளிக்கை விடுதிகள், கடற்கரை போன்று பெருந்திரளாக மக்கள் கூடும் இடங்களைத் தெரிவுசெய்து, துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், வாகனங்களை ஓட்டி நசுக்கியும் இயன்றளவு அதிக எண்ணிக்கையில் பொதுமக்களை கொன்று குவிப்பதில் உள்ள இவர்களின் ‘நியாயத்தை’ புரிந்துகொள்ளாத நாமெல்லாம் ‘மேற்கத்திய விபச்சார ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு’ பலியாகி உள்ளவர்களாம்!

மேலும் படிக்க