தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 2)

ஒரு இறைத்தூதர் மற்றும் ஆட்சித் தலைவர் என்ற வகையில் நீடித்த அவருடைய பணிக்காலத்தின் போது, அரசவை எழுத்தரென்று ஒருவர் இருந்துகொண்டு அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த சிரத்தையுடன் பதிவு செய்து கொண்டிருக்கவில்லை. அதேபோல் அவருடைய ஆணைகளையும் மார்க்கத் தீர்ப்புகளையும் அன்றாடப் பேச்சுகளையும் அப்படியொருவர் எழுத்து வடிவத்தில் பதிவுசெய்து கொண்டிருக்கவும் இல்லை. ஆனால், நபித்தோழர்கள் என்றறியப்படும் இறைத்தூதரோடு வாழ்ந்த முஸ்லிம்கள்தான் அவற்றைத் தங்கள் நினைவில் ஞாபகங்களாகவோ, அல்லது ஏதோவொரு வகையில் எழுத்து வடிவிலோ பாதுகாத்து வந்ததுடன் அடுத்தவர்களுக்கும் பரப்பினார்கள். இந்த அறிவிப்புகள் வாய்மொழியாகவோ, அல்லது எழுத்து வடிவிலோ தொடர்ச்சியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட்டுக் கொண்டே வந்தன. அறிஞர்கள் அவற்றை நிரந்தரமான திரட்டுகளில் தொகுக்கும்வரை இந்நிலை தொடர்ந்தது.

மேலும் படிக்க