தொடர்கள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள்: அனைத்தையும் தழுவியது (பகுதி 3)

மனிதர்கள் வாழ்கின்ற பிரபஞ்சத்தைக்குறித்து, அதன் தனித்தன்மைகள் குறித்து, அது படைப்பாளனுடன் கொண்டுள்ள தொடர்பைக்குறித்து, படைப்பாளனின் இருப்பிற்கு அது எவ்வாறு சான்றாக இருக்கின்றது என்பதைக்குறித்து, அல்லாஹ்வின் கட்டளையைக்கொண்டு அது எவ்வாறு அவர்களுக்காக வசப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக்குறித்து இந்தக் கண்ணோட்டம் அவர்களுக்கு எடுத்துரைக்கிறது. அது அவர்களின் இயல்பும் அறிவும் புரிந்துகொள்ளும் நடையில் எடுத்துரைக்கிறது. அவர்கள் எதார்த்த வாழ்வில் அவற்றை அப்படியே காண்பார்கள். அதனை அறிந்துகொள்வதற்கு அதன் இரகசியங்களை உணர்ந்துகொள்வதற்கு அதனோடு சரியான அணுகுமுறையை மேற்கொள்வதற்கு அது அவர்களை அழைக்கின்றது.

மேலும் படிக்க
தொடர்கள் மொழிபெயர்ப்பு 

பாவிகளின் பண்புகள் (திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப்)

திருக்குர்ஆன் மனிதர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டிய, ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய எதார்த்தத்தைக் கொண்டு அவர்களை அணுகுகிறது. அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை, அது அடைந்த நிலைகளை முன்வைக்கிறது. அவர்கள் ஒன்றும் இல்லாதவர்களாக, உயிரற்றவர்களாக இருந்தார்கள். அல்லாஹ்தான் அவர்களுக்கு உயிரளித்தான். உயிரற்ற நிலையிலிருந்து வாழ்வு என்னும் நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றான். படைப்பாளனின் வல்லமையைக் கொண்டேதவிர இந்த உண்மைக்கு யாராலும் விளக்கமளிக்க முடியாது. அவர்கள் உயிருள்ளவர்களாக ஆனார்கள். அவர்களுக்கு வாழ்வு கிடைத்தது. அவர்களுக்கு இந்த வாழ்வை அளித்தவன் யார்? பூமியிலுள்ள உயிரற்ற பொருள்களில் இந்த புதிய வெளிப்படையான ஒன்றை உருவாக்கியவன் யார்? இந்த வாழ்வின் இயல்பும் ஜடப்பொருள்களைச் சூழ்ந்துள்ள மரணத்தின் இயல்பும் ஒன்றல்ல. இந்த உயிர் எங்கிருந்து வந்தது? மீண்டும் மீண்டும் உள்ளத்தில் தோன்றும் இந்தக் கேள்வியை எதிர்கொள்ளாமல் வெருண்டோடுவதால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. படைப்பாளனின் வல்லமையைக் கொண்டு தவிர நாம் இவற்றிற்கு விடையளிக்க முடியாது. இந்த உயிர் எங்கிருந்து வந்தது? அது வந்தவுடன் உயிரற்ற அனைத்தையும் விட்டு தனித்தன்மை பெற்றதாகிவிட்டதே?! நிச்சயமாக அது அல்லாஹ்விடமிருந்து வந்தது. இதுதான் மிகவும் நெருக்கமான பதில். இதை ஏற்றுக் கொள்ள முடியாதவர் பதில் கூறட்டும், அது எங்கிருந்து வந்தது?

மேலும் படிக்க