தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அருட்கொடைகளும் நன்றிகெட்டத்தனமும் -1

சொல்லுக்கும் செயலுக்கும், கொள்கைக்கும் நடத்தைக்கும் இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அது தொடர் முயற்சியையும் பயிற்சியையும் அல்லாஹ்வுடனான தொடர்பையும் அவனது உதவியையும் வேண்டி நிற்கிறது. வாழ்வின் சூழல்களும் தேவைகளும் தனிமனிதனை அவன் நம்பும் கொள்கையிலிருந்தும் அழைக்கும் பாதையிலிருந்தும் திசைதிருப்பவே செய்கின்றன. அழியக்கூடிய இந்த மனிதன் என்றும் நிலைத்திருப்பவனுடன் தொடர்பு கொள்ளவில்லையெனில் பலவீனப்பட்டுப் போவான். ஏனெனில் தீமையின், அநியாயத்தின் ஆற்றல்கள் அவனைவிட வலிமையானவை. அவை அவனை எளிதாக வீழ்த்திவிடும். அவனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் நாசமாக்கிவிடும். என்றும் நிலைத்திருக்கும் இறைவனுடன் தொடர்பு கொள்ளும் மனிதன் பலம்பெற்று விடுகிறான். பலமான அனைத்தையும் மிகைத்துவிடும் அளவுக்கு அவன் பலம்பெற்றுவிடுகிறான். தன் இச்சையை, பலவீனத்தை, தேவைகளை மிகைத்து விடுகிறான். எதுவும் அவனை அடிமையாக்கி விடுவதில்லை.

மேலும் படிக்க