கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

என்ன நடக்கிறது ஃபலஸ்தீனில்?

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான அல்அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ள நிலமான ஃபலஸ்தீன், இஸ்லாமிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவமும் தனிச்சிறப்பும் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். இப்ராஹீம், லூத், தாவூத், சுலைமான், மூஸா, ஈஸா (அலை) உள்ளிட்ட இறைத்தூதர்களின் பிறப்பு அல்லது இறப்பு இம்மண்ணில்தான் நிகழ்ந்துள்ளது. ’இறைத்தூதர்களின் பூமி’ எனும் புகழுக்குரிய ஃபலஸ்தீனில் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் இருப்பது தொட்டு அங்கிருந்து நபிகள் நாயகம் (ஸல்) விண்ணுலகப் பயணம் மேற்கொண்டது வரை அதை மிகுந்த சிறப்புமிக்கதாய் ஆக்கியிருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 6) – மரியம் ஜமீலா

“இன்று முஸ்லிம் உலகை குழப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்லாமிய மாநாட்டிற்கான இவ்வழைப்பு புதிய நம்பிகைகளை ஊட்டுகிறது. எனவே நட்பு மற்றும் கூட்டுறவுக்கான அழைப்பு எந்த நாட்டிலிருந்து வந்தாலும், முஸ்லிம்கள் அதை வரவேற்க வேண்டும்; அதே சமயம் நமது பின்தங்கிய நிலையையும் ஒற்றுமையின்மையையும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்றென்றும் கண்காணித்துக் கொண்டிருக்கும் உலக சக்திகள் குறித்து எச்சரிகையாக இருக்க வேண்டும். உண்மையில், எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவே முஸ்லிம்களின் ஒற்றுமையை வேண்டி நிற்கிறது. இதன் காரணமாக ஒவ்வொருவரின் தனித்தனிச் சக்தியும் ஒரே கூட்டுச் சக்தியாக மாறிவிடும். இது மட்டுமே, முஸ்லிம்கள் தங்கள் சுதந்திரத்தைத் தக்கவைத்து, உலக விவகாரங்களில் ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான பங்காற்றி, தாங்கள் பெரிதும் விரும்பும் புத்துயிர்ப்பைக் கொண்டுவருவதற்கான பாதையாகும்.”

மேலும் படிக்க