இலக்கியம் கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘கவிதையின் சமன்’ – மலபார் இலக்கியத் திருவிழா, கோழிக்கோடு 2023

ஒவ்வொரு சமூகத்தினரும் சாதி, மத அடிப்படையில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினால் மட்டுமே தங்கள் சமூக மாணவர்களுக்கு போதிய இடங்கிடைக்கிறது என்ற பருண்மை இலக்கிய நிகழ்வுகளுக்குள்ளும்  தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுவது வேதனையளிக்கும் விசயம்தான். மலபார் இலக்கியத் திருவிழாவுமே நீண்ட ஒதுக்கலினால், சமூகம் தனக்குத்தானே கண்டெடுத்த விடைதானே. ‘எங்கள் இலக்கிய முதுசொங்களை இறக்கி வைப்பதற்கும், புதியதாய் சுட்ட பணியாரங்களைக் கடை விரிப்பதற்கும் ஈரடி இடந்தாருங்கள் எஜமானே!’ என்ற மன்றாட்டுகளிலிருந்து விடுதலை. இது நம்ம இடம் என்ற உணர்வு அளிக்கும் விசாலமும் தன்னுணர்வும் மகத்தானது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஹலால் லவ் ஸ்டோரி: அறம், அழகியல், அரசியல்

‘ஹலால் லவ் ஸ்டோரி’ அதன் மாறுபட்ட கதையம்சத்தினாலும், பல்வேறு அடுக்குகளைக் கொண்ட கதைசொல்லல் பாணியாலும், பேசிய அரசியலாலும் பரவலான கவனத்தைப் பெற்றதோடு, பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று ஒரு விவாதத்தையும் உருவாக்கியிருந்தது. ஹலால் லவ் ஸ்டோரி கேரளத்தின் மலபார் பகுதியில் இரண்டாயிரங்களின் தொடக்க காலகட்டத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்படுகிறது. இது கேரளத்தில் செயல்படும் ஓர் இஸ்லாமிய அமைப்பின் தொண்டர்களில் சிலர் ஒரு திரைப்படம் எடுக்க முயற்சிசெய்வது குறித்த திரைப்படமாகும். எனவே இது திரைப்படத்துக்குள் திரைப்படம் என்ற பாணியைக் கையாள்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அழிவின் விளிம்பில் அடையாளச் சின்னங்கள்

தமிழக முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மை வாய்ந்தது. நீண்ட பாரம்பரியம் மிக்கது. எனினும், தமிழக வரலாற்றுப் பக்கங்களில் இவர்களுக்குரிய இடம் இல்லை. தங்களின் வரலாற்றைப் பதிவு செய்வதிலும் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாப்பதிலும் இவர்கள் பின்தங்கியுள்ளனர். இச்சமூகத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும் அடையாளச் சின்னங்கள் பலவும் அழிந்துவிட்டன. அறியாமையாலும் அலட்சியத்தாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்று அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இஸ்லாமிய அமைப்புகளும் மார்க்க அறிஞர்களும் வரலாற்று ஆர்வலர்களும் சமூக அக்கறை கொண்டவர்களும் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். காலம் தாழ்த்தினால் எதுவும் மிஞ்சாது.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

நபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – ஓவியர் மதுரை ரஃபீக் நேர்காணல்

அரூப (Abstract) ஓவியங்களுக்கு அடிப்படையே இஸ்லாம்தான் என்றுகூடச் சொல்வேன். பூடகமான, புதுவிதமான Concept-ஐ தேடி முஸ்லிம் ஓவியர்கள் நகர்ந்திருக்கிறார்கள். உருவம் சாராது எப்படி வரைவது என யோசித்தபோதுதான் இலைகளை, பூக்களைப் பார்த்து அதே மாதிரி வரைந்திருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, தாஜ்மஹாலைச் சொல்லலாம். மேலிருக்கும் Dome (மைய மண்டபத்தின் கூம்பு வடிவக் கூரை) மலரின் மொட்டாகவும், சுற்றியுள்ளவை இலையாகவும், மினாராக்கள் மல்லிகைக் கொடியாகவும் உருவகிக்கலாம்.

நபிகள் நாயகம் அவர்கள் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைக்கான கிரியா ஊக்கியாகவே வினை புரிந்ததிருப்பதை வரலாறு பதிவுசெய்துள்ளது. Miniature Painting நுண்கலையில் புதிய தனி பாணியொன்றைக் கட்டியமைத்தது முஸ்லிம்களே.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமிய எழுத்தணி: பாரம்பரியக் கலையும் சம்பிரதாய வழக்குகளும்

இஸ்லாத்தின் நான்காம் கலீஃபாவான இமாம் அலீ (ரழி) அவர்களே, முதல் முக்கிய எழுத்தணிக் கலைஞர் என்று முஸ்லிம்களால் கருதப்படுகிறார். ஆக, அவர் தொட்டுத் தொடங்கும் தொடர்வரிசை, நூற்றாண்டுகள் நெடுக இடைவிடாது நகர்ந்து இன்றுவரை பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க
நேர்காணல்கள் 

எந்தவொரு கலையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமானதாய் இருக்க முடியாது

மனித வாழ்வுக்கு கலை அவசியமானது என்பேன். கலைகள் எல்லாம் உயர் மனிதப் பண்புகளை நம்முள் விதைக்கக்கூடியவை. எதிர்மறை மனிதப் பண்புகளை நம்மிடமிருந்து அகற்றுவதற்கு கலை, இலக்கியங்கள் அவசியத் தேவை. உண்மையில், கலைகளின் செயல்பாடும் நல்ல மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.

மேலும் படிக்க