இலக்கியம் கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘கவிதையின் சமன்’ – மலபார் இலக்கியத் திருவிழா, கோழிக்கோடு 2023

ஒவ்வொரு சமூகத்தினரும் சாதி, மத அடிப்படையில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினால் மட்டுமே தங்கள் சமூக மாணவர்களுக்கு போதிய இடங்கிடைக்கிறது என்ற பருண்மை இலக்கிய நிகழ்வுகளுக்குள்ளும்  தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுவது வேதனையளிக்கும் விசயம்தான். மலபார் இலக்கியத் திருவிழாவுமே நீண்ட ஒதுக்கலினால், சமூகம் தனக்குத்தானே கண்டெடுத்த விடைதானே. ‘எங்கள் இலக்கிய முதுசொங்களை இறக்கி வைப்பதற்கும், புதியதாய் சுட்ட பணியாரங்களைக் கடை விரிப்பதற்கும் ஈரடி இடந்தாருங்கள் எஜமானே!’ என்ற மன்றாட்டுகளிலிருந்து விடுதலை. இது நம்ம இடம் என்ற உணர்வு அளிக்கும் விசாலமும் தன்னுணர்வும் மகத்தானது.

மேலும் படிக்க
இலக்கியம் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்துமாக்கடல் வாழ் சமூகத்தில் மறைந்துவரும் மொழியைக் காப்பாற்றும் காயல்பட்டினம்

தமிழ் – அறபி ஆகிய இரண்டு செவ்வியல் மொழிகள் இணைந்து ஈன்ற அழகிய குழந்தைதான் அர்வி மொழி. இன்று அர்வி அதன் நோக்கத்தையும் பெருமையையும் இழந்திருந்தாலும், அது மீட்டுருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுவது அவசியம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமும் மதச்சார்பற்ற கல்விமுறையும் – ஜாஸிர் அவ்தா

மார்ச் 12 அன்று திருச்சி அஸ்ஸலாம் கல்லூரியில் எஸ்ஐஓ நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் அறிஞர் ஜாஸிர் அவ்தா ஆற்றிய உரையின் சுருக்கம். புதிய சிந்தனைகளை உள்வாங்கிக்கொள்ள உங்களுடைய இந்த வயதுதான் சரியானது என்று நம்புகிறேன். முற்காலத்தில் இஸ்லாத்தைத் தம் தோள்களில் சுமந்த பல சஹாபாக்கள் பதின்ம வயதுடையவர்களாய் இருந்திருக்கிறார்கள். அலி, அர்கம், முஸ்அப் பின் உமைர், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) போன்றோர் இதற்கு சில உதாரணங்கள். அவர்கள் உலகையே மாற்றியமைப்பதற்கான பார்வையைக் கொண்டிருந்ததோடு, உலகின் போக்கை மாற்றியமைக்கவும் செய்தார்கள் என்பது வரலாறு. அந்த வகையில் உங்களின் முன்பு, மகாஸிதுஷ்ஷரீஆ குறித்துப் பேசுவதை என் கடமையாக உணர்கிறேன். அது இஸ்லாமியச் சிந்தனையின் ஒரு கிளை மட்டுமின்றி, அது இஸ்லாம் குறித்ததொரு புதிய பார்வை. அதை உள்வாங்கிக்கொள்வதற்கு நாம் இஸ்லாம் அல்லாத சிந்தனைமுறைகளிலிருந்து விடுபட வேண்டியது அவசியம். இஸ்லாத்துக்காகப்…

மேலும் படிக்க
இஸ்லாமிய கல்வி கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலனியமும் இஸ்லாமியக் கல்விமுறையின் வீழ்ச்சியும் – ஃபைசல் மாலிக்

முன்னுரை அளவிலாக் கருணையாளனும், இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் CNNல் 2009ம் ஆண்டு வெளியான Generation Islam எனும் ஆவணப்படத்தில் ‘பாகிஸ்தானில் இஸ்லாமியக் கல்வி’ என்ற பகுதியில், “பழங்காலத்தில் அடைபட்டிருக்கும் ஒருவித இஸ்லாத்தையே பல மதரசாக்கள் பயிற்றுவிக்கின்றன. கணிதம், அறிவியல் போன்றவை பயிற்றுவிக்கப்படுவதில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு ஒரு என்ஜிஓ பணியாளரை “பாகிஸ்தானின் மதரசாக்களை நவீனமாக்கும் போரில் முன்னணியிலிருப்பவர்” [1] எனப் பாராட்டியது. மதரசாக்களை [2] நவீன யுகத்துக்கு முந்தைய முஸ்லிம் கலாச்சாரத்தின் எச்சமாகவும், சமகாலத்துக்குத் தொடர்பற்றவையாகவும், நவீன உலகிற்கு முரணானவையாகவும் சித்தரித்தது இந்த ஆவணப்படம். முஸ்லிம் உலகம் கல்வியில் எதிர்கொள்ளும் சவால்களுக்குக் காரணம் அது கல்வியை “நவீனமாக்காததே” என நாம் பரவலாக ஊடகங்களிலும் அறிவுஜீவி வட்டாரங்களிலும் அரசுசார் நிறுவனங்களிலும் [3] காணும் கருத்தைப் பிரதிபலிப்பதாக இப்படம் அமைந்தது. இப்படிச் சொல்வதன் வழியாக முஸ்லிம் உலகின் பல…

மேலும் படிக்க
karnataka hijab issue tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப் விவகாரம்: பாதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவிகள் சொல்வதென்ன? (நேரடி ரிப்போர்ட்)

தொடர்ச்சியாக பள்ளி நிர்வாகம், ஊடகம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளை மேன்மேலும் தொந்தரவுக்கு உள்ளாக்குவதைப் பார்க்க முடிகிறது. ஹிஜாபுக்காகப் பேசும் மாணவிகள் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கும் அளவுக்குத் திறமைவாய்ந்தவர்கள் அல்ல, அவர்கள் எப்போதும் அதை அணிந்திருந்தவர்களும் அல்ல என்றெல்லாம் ஆசிரியர்களே அவர்களைச் சாடுவது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களையே பழிக்குற்றச்சாட்டுக்கு ஆளாக்குவது தொடர்கிறது. மாணவிகள் இதற்கு உரிய வகையில் பதிலடி தரவும் செய்கிறார்கள். கல்வியிலும் அதற்கு அப்பாலும் தாங்கள் எந்த அளவுக்கு சிறந்து விளங்குகிறோம் என்பதை சொல்லிக் காட்டுகிறார்கள். ஊடகங்கள் பாதிக்கப்பட்ட மாணவிகளையே குறிவைத்துத் தாக்குகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், சில தொலைக்காட்சி சேனல்கள் ஆலியா என்ற ஒரு மாணவியைக் இலக்காக்கின. அவர் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஹிஜாபுடன் பங்கேற்றவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அவரிடம், எப்போது ஹிஜாப் போட ஆரம்பித்தீர்கள், நீங்கள் ஹிஜாபைக் கழட்டியதே கிடையாதா, எத்தனை ஆண்டுகளாக இதைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்றெல்லாம் ஊடகங்கள் கூச்சலிட்டன.

சமூகச் செயல்பாட்டாளர் சஃபூரா ஸர்கார், “முன்பு மாணவிகள் ஹிஜாப் அணிந்தார்களா, இல்லையா என்பது இங்கு பொருட்டல்ல. எனது அடிப்படை உரிமையை நான் எடுத்துக்கொள்வதற்கு எந்தக் கால வரையறையும் கிடையாது” என்கிறார். ஹிஜாப் அணிவதைத் தெரிவு செய்யும் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் இங்கு மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

மேலும் படிக்க
பாத்திமா சேக் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஃபாத்திமா ஷேக்: கல்வி மறுக்கப்பட்டவர்களுக்காகத் தன் இல்லத்தைப் பள்ளிக்கூடமாக்கியவர்

இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியை என்று அறியப்படும் கல்வியாளர் ஃபாத்திமா ஷேக் அவர்களின் 191வது பிறந்தநாளான இன்று, அவரை கூகுளின் டூடுல் சிறப்பித்துள்ளது. இதையொட்டி முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ தன் முகநூல் பக்கத்தில் ஃபாத்திமா ஷேக் குறித்து பகிர்ந்துள்ள பதிவின் சுருக்கம் இது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவை சமஸ்கிருதமயமாக்கல்!

சமஸ்கிருதம் என்கிற மொழியை விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசு எப்படியெல்லாம் வளர்க்க முயன்றது என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ளச் சமஸ்கிருத கமிஷன் சார்ந்து பல்வேறு விஷயங்களைத் தொட்டுக் காண்பிக்கிறது சுமதி ராமசுவாமியின் கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

வணிகப் பொருளா கல்வி?

கல்வியே ஒரு சேவைதான். அதை வணிகத்திற்குரிய சேவையாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது. எவ்வித பாரபட்சமுமின்றி எல்லோருக்கும் தரமான கல்வி வழங்கவேண்டியது அரசின் கடமை. கற்றல் ஒருபோதும் பண்டமாக இருந்ததில்லை. கற்றலும் கற்பித்தலும் ஓர் அறப்பணி என்பதாகவே நாம் கருதுகிறோம். அதை வணிகமயபடுத்துவது நாட்டைத் சிதைத்து சின்னாபின்னமாக்கவே வழிகோலும்.

மேலும் படிக்க