உரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அரசும் அரச எதிர்ப்பும்

[இமாம் முஹம்மது அல்ஆஸியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்து, தலைப்புகளைக் கொடுத்துள்ளோம். உரையாற்றிய நாள்: 13-01-2006, இடம்: வாஷிங்டன் டி.சி. YouTube Link: The politics of state and Islamic opposition; தமிழில்: ஜுந்துப்] அல்லாஹ் நமக்குப் பல செய்திகளை வழங்கியுள்ளான். இறைத்தூதருடைய (ஸல்) நடத்தைகளும் நம்மிடையே உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இவையனைத்தும் நூற்றாண்டுகாலத் தவறுகள் மற்றும் திரிபுகளின் பாதிப்புகளுக்கு ஆட்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்படவில்லை. அல்லாஹ்வோடும் அவனுடைய தூதரோடும் நாம் தொடர்புகொள்ளும்போது, பிற விஷயங்கள் மற்றும் சக்திகளின் தலையீடு இருக்கும்பட்சத்தில் அவற்றின் தாக்கம் நம்மீது அதிகம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களோடு கொண்டுள்ள உறவில் நாம் உண்மையாக இருந்தால், இவ்வாறு ஏற்படும் தலையீடு அவ்வுறவை வலுப்படுத்துமே ஒழிய அதை சமரசம் செய்வதாகவோ, பேரம் பேசி சரி செய்வதாகவோ, தவறான காரணங்களையும் சாக்குப்போக்குகளையும் சொல்லி அதைத் திணறடிப்பதாகவோ இருக்காது. நம்…

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சையித் குதுப்: ஆளுமை உருவாக்கமும் குடும்பப் பின்னணியும்

மலேசியா சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழக உசூலுத்தீன் துறைப் பேராசிரியர் தமீம் உசாமா எழுதிய Sayyid Qutb: Between Reform and Revolution என்ற நூலின் தமிழாக்கம் சீர்மை வெளியீடாக இவ்வாண்டின் இறுதியில் வெளிவரும், இன்ஷா அல்லாஹ். தமிழாக்கம்: நூரிய்யா ஃபாத்திமா. நூலிலிருந்து ஒரு பகுதி கீழே…

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பாப்புலர் ஃப்ரண்ட் தடையை எப்படி புரிந்துகொள்வது?

நடந்திருப்பது பாசிச அரசின் மிக முக்கியமான தாக்குதலாகும்.
பாஜக அரசின் சிறுபான்மை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானப் போராட்டக் களத்தில் நின்று கொண்டிருந்த, அமைப்புப் பலம் பொருந்திய சக்தி ஒன்று அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பாசிச எதிர்ப்பு முகாம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மெளதூதியைக் குறிவைக்கும் இந்துத்துவர்கள்

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மெளதூதி, சையித் குதுப் புத்தகங்களுக்குத் தடை விதிக்கும் முடிவை எடுத்திருப்பது பதற்றத்தால் அல்லது கோழைத்தனத்தால்தான்.

முதலில், பாடத்திட்டம் தொடர்பான ஒரு கடிதம் யாருக்கு எழுதப்பட வேண்டும்? பிரதமருக்கா அல்லது பல்கலைக்கழக மானியக் குழுவுக்கா (யூஜிசி)? யூஜிசி ஏதாவது சொல்லியிருந்தால் அந்தக் கல்வி நிறுவனம் அதுகுறித்து ஒரு நடவடிக்கை எடுக்கலாம். மாறாக, கல்விப்புலத்துக்கு சம்பந்தமில்லாத, அரசியல் உள்நோக்கு கொண்ட சிலர் ஆற்றிய வினைக்கு AMU போன்ற ஒரு மதிப்புக்குரிய கல்வி நிறுவனம் இப்படி எதிர்வினையாற்றியிருக்கக் கூடாது. இதற்குப் பதிலாக, பல்கலைக்கழகத் தன்னாட்சி, அறிவுசார் சுதந்திரம், எதுவெல்லாம் “Indic” ஆகியவற்றை விவாதத்துக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் AMU ஒரு நியாயமற்ற, பிளவுவாதக் கோரிக்கைக்குப் பணிந்துவிட்டது!

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

ஃகிலாஃபத்தும் மன்னராட்சியும் – நூல் அறிமுகம்

பலரும் பதில் சொல்லத் தயங்கும் ஒரு கேள்வி, ஃகிலாஃபத் எப்படி மன்னராட்சியாக மாற்றப்பட்டது என்பதுதான். அதற்கு அளிக்கப்படும் மழுப்பலான பதில்கள் தெளிவின்மையை, குழப்பத்தை அதிகரிப்பவை. அது தாமாகவே அந்த நிலையை அடைந்துவிட்டது என்பது போன்ற சித்திரத்தை ஏற்படுத்தக்கூடியவை. இங்கு அது தானாக மாறவில்லை. தனிமனிதர்களின் சுயநலத்தால் அது வலுக்கட்டாயமாக மன்னராட்சியாக மாற்றப் பெற்றது என்பதை உடைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்

நாம் உளுத்துப்போன அவற்றை அகற்றித் துப்புரவாக்க வேண்டும். அவற்றைத் தகர்த்து, கலைத்துப்போட்டு, அதன் சிதிலங்களை அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகே, நாம் முழு நம்பிக்கையுடன் நம்முடைய சொந்த நியமங்களில் ஊன்றிநின்று, நம்முடைய சன்மார்க்கத்தின் மேன்மையையும் மதிப்பச்சம்தரும் மகோன்னதத்தையும் உலகின் முன்பாக மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் காட்டமுடியும், இன்ஷா அல்லாஹ்.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் 

மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)

இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய மாபெரும் இஸ்லாமிய ஆளுமை மௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்). 20ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகக் களம் கண்ட புரட்சிகர சிந்தனையாளரான அவர், இஸ்லாத்தை இம்மண்ணில் மேலோங்கிடச் செய்யும் உயரிய லட்சியத்துக்காக அல்லும் பகலும் உழைத்தவர். பல இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆதர்ச நாயகராக விளங்கிய மௌதூதியைக் கற்பதற்கான ஆர்வமும் தேடலும் உலகம் முழுக்க இன்றும் உயிர்ப்புடன் இருந்துவருகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி

பாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது காதல்கொண்ட இனிவரும் பல தலைமுறைகளையும் அது போராடும்படி உணர்வூட்டிக் கொண்டே இருக்கும்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் இஸ்லாமிசமும் ஜனநாயகமும்

குஃப்ர், ஜாஹிலிய்யத், ஈமான் போன்ற இஸ்லாமிய வழக்குகளை நடப்பிலிருந்த அரசியல் அதிகாரத்திற்கும் பொருத்திய மௌதூதி, மதச்சார்பற்ற அமைப்புகளிலும் அரசாங்கத்துறைகளிலும் பங்கேற்பதைத் தடைசெய்தார். தேர்தலில் பங்கேற்பதையும் வாக்களிப்பதையும் தடை செய்தார். இதுபோன்ற தீவிரத்தன்மை கொண்ட அறிவுறுத்தல்களை ஏற்கமறுத்த முஸ்லிம் சமூகம், தங்களது வாழ்க்கை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் யதார்த்தபூர்வமான வழிகளை நோக்கிப் பயணிக்கும்படி ஜமாத்தை உந்தித்தள்ளியது. ஜமாத்தும் தனது தீவிரத்தன்மைகளோடான புறக்கணிப்புவாத கருத்தியலைக் கைவிட்டு, பங்கேற்புவாதப் பாதைக்கு நகர்ந்தது. 

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிவில் சமூகம்: இஸ்லாமிய வரலாற்றில் அதன் தோற்றமும் படிமுறை வளர்ச்சியும்

நபியவர்களின் (ஸல்) காலத்தில் சிறந்தொரு சிவில் சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை விழுமியங்கள் அறிமுகம் செய்யப்பட்டதுடன், உமையாக்களின் காலப்பகுதியில் அதிகாரச் சக்திகளுக்கு எதிரான சிவில் சமூகத்தின் எதிர்ப்பரசியல் செயற்பாடுகள் துளிர்விட ஆரம்பித்தன. தொடர்ந்து, அப்பாஸிய காலப்பிரிவில் சிவில் சமூகத்தின் ஏனைய கூறுகளான தொழிற்சங்கங்களின் எழுச்சி, அறிஞர்களின் செல்வாக்கு, சமூகநலச் செயற்திட்டங்களின் மேம்பாடு போன்றவை வளர்ச்சிகண்டன. ஆனால், உஸ்மானிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசிக் காலப்பிரிவிலும், புதிய தேசிய அரசுகளது தோற்றத்தின் பின்புலத்தில் இயங்கிய சர்வதிகார அரசியல் சக்திகளாலும் சிவில் சமூகக் கட்டமைப்புகள் காவுகொள்ளப்பட்டன.

மேலும் படிக்க