ஒரு நாள் மனிதர்கள்?!
![]()
இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான். நிச்சயமாக சிந்தனை உடையவர்களுக்கு இதில் தக்க படிப்பினை இருக்கின்றது. (அல்குர்ஆன் 24:44) இரவும் பகலும் மாறி மாறி வரக்கூடிய சுழற்சியான இந்த செயல்தான் பூமி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஆதாரமாகும். இதுமட்டுமல்ல பூமியின் மீது வாழ்ந்து வரும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின் இயக்கத்திற்கான, செயல்பாட்டிற்கான மையப் புள்ளி இரவும் பகலுமாகும். இதனை அல்லாஹ்வே தீர்மானிக்கின்றான். இதில் அறிவுடையோருக்கு நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றது என்பது அல்லாஹ் நமக்கு கற்றுத்தரும் செய்தியாகும். ‘பகல் மட்டுமே இருந்தால் நன்றாக இருக்குமே.. இன்னும் நிறைய சம்பாதிக்கலாம்.. வாழ்க்கையை இன்னும் மகிழ்ச்சிகரமாக மாற்றலாம்’ என்றோ அல்லது ‘பகல் எப்போது முடிவுக்கு வரும்? எனது வேலைப்பளு எப்பொழுது தீரும்’ என்றோ எண்ணலாம். அதேபோன்றுதான் இரவின் நீளம் எப்போதுதான் குறையுமோ அல்லது இரவு இனியும் கொஞ்சம் நீண்டால்…
மேலும் படிக்க