Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடங்கள்

தேர்தல் முடிவுகள்குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தால் அதனை அதன் இறுதி அரசியல் அத்தியாயமாகக் கொண்டாடுவதும், பா.ஜ.க. வெற்றிபெற்றால் அதனை அதன் நிரந்தர வெற்றியாக அங்கலாய்ப்பதும் எதிர் தரப்பில் இப்போதும் தொடர்கிறது. பா.ஜ.க.வின் வெற்றியை ஒட்டுமொத்த வட இந்தியாவும் இந்துத்துவத்தின் பக்கம் சாய்ந்து விட்டதைபோல் சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல. அப்படியென்றால் ஐந்து வருடங்களுக்கு முன் இதே மாநிலங்களில் காங்கிரஸ் எப்படி வெற்றி பெற்றது?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

செக்யுலரிசம்: அரசியல் நவீனத்துவத்தின் புனிதப் பசு

இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய நாடுகளைப் போல் அனைத்து மதங்களையும் விலக்குவது அல்ல; மாறாக அவ்வனைத்தையும் சமமாக நடத்துவது எனக் கூறப்பட்டு வந்தாலும் இங்கு ஏன் பெரும்பான்மையினரின் அடையாளங்கள் இயல்பாகவும் சிறுபான்மையினரின் அடையாளங்கள் சந்தேகக் கண்கொண்டும் பார்க்கப்படுகின்றன? இந்திய தேசியம் ‘உள்ளடக்கும் தேசியம் (Inclusive Nationalism)’ என்றால் சகிப்புத்தன்மை, மதச் சுதந்திரம் போன்ற வார்த்தைகள் சிறுபான்மையினரை மையப்படுத்தி இருப்பதன் தேவை என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகாண, இருவேறு துருவங்களான தேசியம், அரசு ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட நவீன தேச அரசு எனும் கருத்தாக்கத்தின் வரலாற்றுப் பின்னணியையும் அதன் அடிப்படைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். இக்கட்டுரை அதைக்குறித்தான புதிய கண்திறப்பை நமக்கு கொடுக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

பஸ்மந்தா முஸ்லிம்களுக்கு வலை விரிக்கும் பாஜக
“நீங்கள் நினைக்கும் அளவுக்கு பிளவுபட்டதில்லை முஸ்லிம் சமூகம்” - கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலோ, அ.கலையரசன்

வட இந்தியாவில் சாதி அமைப்பானது இந்து, முஸ்லிம் சமூகத்தின் உட்பிரிவுகளுள் ஏற்படுத்தியுள்ள வர்க்க முரண்பாட்டை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டு முஸ்லிம் சமூகத்தின் மீதான சாதி அமைப்பின் குறைவான தாக்கத்தை இக்கட்டுரை நிறுவுகிறது. மேலும், முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவும் பாகுபாட்டைப் பயன்படுத்தி தனது வாக்குவங்கியை நிறுவ முயலும் பாஜகவின் தந்திரத்தை புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஏன் இந்த கள்ள மௌனம்?

நாட்டில் கணிசமாக உள்ள ஒரு சமூக மக்களை ஒதுக்கிவிட்டு வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை இந்த தலைவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். இருந்தும் முஸ்லிம்களிடம் கைகோர்க்கும் சிந்தனை அவர்களிடம் ஏன் இல்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் சில கட்சிகளிடம் கூட ஒரு வித அனுதாபப் பார்வை மட்டுமே இருக்கிறது. ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் மீது அனுதாபம் கொள்வதையும் தாண்டி அவர்களுடன் இணைந்து பயணிப்பதே, அதைவிட அவசியமாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இ.ந்.தி.யா Vs. பா.ஜ.க.

தேர்தல் நெருங்கநெருங்க பா.ஜ.க. கொடுக்கும் நெருக்கடிகள் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்க்கட்சிகளும் ஃபாசிசத்திற்கு எதிரான சித்தாந்தம் கொண்டவர்களும் உணர வேண்டும். மூன்று மாதங்களாக மணிப்பூர் பற்றியெரிந்தாலும் நாளை யார் வீட்டிற்கு அமலாக்கத்துறையை அனுப்பலாம் என்றுதான் ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் யோசித்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. இனி வரும் நாள்களில் அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ.வின் கொடுங்கரங்கள் இன்னும் அதிகமானோரை நோக்கி நீளலாம். அரசியல் கட்சிகளுக்கு அமலாக்கத்துறை, செயல்பாட்டாளர்களுக்கு என்.ஐ.ஏ., சிலருக்கு இரண்டும் என்ற மிரட்டல்-அரசியலை பா.ஜ.க. மேலும் உக்கிரப்படுத்தவே செய்யும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஏன் மணிப்பூர் பற்றி எரிகின்றது?

இந்தத் தாக்குதல்களை மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசாங்கமும் முதலமைச்சர் பிரேன் சிங்கும் தடுக்கவில்லை என்பது மட்டுமில்லை, ஊக்குவித்தனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினர். மெய்த்தி இனவெறியை ஊதிப் பெருக்கினர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நடப்பு தேர்தல் முறையின் பிரச்னைகளும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையும்

1952இலிருந்து (அதற்கு முன்பும்கூட) பிரிட்டிஷாரிடமிருந்து பெற்றுக்கொண்ட FPTP (First-past-the-post) எனும் இந்தத் தேர்தல் முறையைக் கொண்டே நாம் தேர்தல்களை நடத்திவருகிறோம். மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பகுதியைப் பெறும் கட்சிகள்கூட அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்கு இது வழியேற்படுத்துகிறது. இதுதான் காங்கிரஸை 35% வாக்குகளைக் கொண்டு 60% தொகுதிகளைப் பிடிக்க வாய்ப்பளித்தது. அதுபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 37% வாக்குகளுடன் 56% இடங்களைக் கைப்பற்ற பாஜகவுக்கும் உதவியது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சிறையிலிருந்து… ஷர்ஜீல் இமாம்

மாணவச் செயற்பாட்டாளரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவருமான ஷர்ஜீல் இமாம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராகப் போராடியதற்காக ஜனவரி 2020ல் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். இன்றுடன் மூன்று வருடங்களை நிறைவுசெய்கிறார். திகார் சிறையிலிருக்கும் ஷர்ஜீல் இமாம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே

மேலும் படிக்க
காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

உத்தரப் பிரதேச தேர்தல்: தமிழகப் பத்திரிகையாளர்களின் கள அனுபவப் பகிர்வு

உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் இனியன், பியர்சன் ஆகியோர் தம் அனுபவங்களை மெய்ப்பொருள் யூடியூப் சேனலுக்குப் பகிர்ந்துள்ளார்கள்.

* உ.பி. தேர்தல் பிரச்சாரத்தை ஒவ்வொரு கட்சியும் எப்படி முன்னெடுத்தது?
* எதிர்க்கட்சிகளின் பலவீனங்கள் என்னென்ன?
* ஆதித்யநாத் அரசின் தோல்வி ஏன் தேர்தலில் எதிரொலிக்கவில்லை?
* பாஜகவின் சாதி அரசியல் பற்றி..
* உ.பி. முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்?

– உள்ளிட்ட பல விஷயங்களைத் தங்களின் ஒன்றரை மாத கள அனுபவங்களின் வழியாக அலசியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க
thozhar thiyagu காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

இந்து தேசிய வெறியூட்டும் தி காஷ்மீர் பைல்ஸ் – தோழர் தியாகு நேர்காணல்

பண்டிட்கள் பிரச்னையை அரசியலாக்குகிறதா பாஜக?
பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்களா?
ஆளுநர் ஜக்மோகன் மீது குற்றம் சாட்டுவது சரியா?
கஷ்மீரிகளின் தற்போதைய நிலை என்ன?
ராணுவம் அங்கு குவிக்கப்படுவது நியாயமா?

மேலும் படிக்க