குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

மக்காவிலிருந்து மால்கம் எக்ஸ் எழுதிய கடிதம்!

Loading

ஆரம்பத்தில் மால்கம் எக்ஸ் கறுப்பினப் பிரிவினைவாதத்தை ஆதரித்துவந்தார். வெள்ளை இனத்தவர்களுடன் ஒருங்கிணைவதை வெறுத்தார். அகிம்சை முறையை நிராகரித்ததோடு ‘அவசியமான அனைத்து வழிகளிளிலும்’ தற்காப்பை ஊக்குவித்தார். நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் தாக்கத்தால், வெள்ளையர்கள் இயல்பாகவே ஊழல்வாதிகள், தீயவர்கள் என்றும்; கறுப்பின மக்களின் பல்லாண்டுக்காலத் துயரங்களுக்கு அவர்களே காரணம் என்றும் உறுதியாக நம்பினார். இந்தச் சமயத்தில்தான் அவர் ஹஜ் யாத்திரைக்காக மக்காவுக்குப் பயணமானார். ஹஜ்ஜிலிருந்து அவர் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் இது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

எண்ணெய்க்கு கிடைக்கும் மதிப்பு மனித உயிர்களுக்கு கிடைக்குமா?

Loading

இருபது ஆண்டுகளாக ஃபலஸ்தீனின் காஸா பொருளாதார தடையில் சிக்கித் தவித்தாலும் கண்டு கொள்ளாத உலக நாடுகள், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டவுடன் அவசரமாக செயலில் இறங்குகின்றன.
மனிதாபிமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் போது அமைதியும், வர்த்தகம் அச்சுறுத்தப்படும்போது அவசரமும் உடனடியாக வெளிப்படுகிறது. உலகம் தனது மனசாட்சியை சந்தையின் ஓசைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. உலக நாடுகள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதை இது உணர்த்துகிறது.
எந்தவொரு நாகரிகமும் அதன் கருவூலங்களின் செழிப்பையோ அல்லது எண்ணெய் வழித்தடங்களின் பாதுகாப்பையோ கொண்டு மதிப்பிடப்படாது; மாறாக, அது மனித உயிருக்கு அளித்த முக்கியத்துவத்தைக் கொண்டே மதிப்பிடப்படும் என்பதை நாடுகள் உணருமா?

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

வரலாற்றுத் துளிகள் – மதாயீன் நகரப் புகார்

Loading

மதாயீன் நகரைச் சேர்ந்த முஸ்லிம்களின் குழு ஒன்று பெரும் குறை ஒன்றைச் சுமந்து, வேகவேகமாக பக்தாத்திற்கு வந்தது. மதாயீன்-பக்தாத் நகரங்களுக்கு இடையிலான பயண தூரம் சற்றொப்ப ஆயிரம் கிலோ மீட்டர். ஆனால் மெனக்கெட்டு, சிரமப்பட்டு, அத்தனை தூரம் பயணப்பட்டு வந்திருந்த அக்குழு. கலீஃபாவைச் சந்தித்து புகார் அளிக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம்.
மதாயீன் நகர மக்களின் புகார் என்ன? அவர்களுக்கு என்ன பதில் கிடைத்தது?
வரலாற்று வரிகளில் இருந்து ஒரு நிகழ்வு.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஈரான் – அமெரிக்கா / இஸ்ரேல் போர்: யார் கை ஓங்குகிறது ?

Loading

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அமெரிக்கா தனது இலக்குகளை அடைந்துள்ளதா? பொருளாதார ரீதியாக ஈரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அமெரிக்காவை பாதிக்குமா? நடைபெறும் இந்த போரில் யாரின் கை மேலோங்கியுள்ளது? விளக்கங்களை அளிக்கிறது இந்த கட்டுரை.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஈரானின் நிழல் இராணுவம்

Loading

ஈரானின் நிழல் இராணுவமாக செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் தோற்றம், கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த சுருக்கமான பார்வை

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

இந்திய – இஸ்ரேல் உறவு

Loading

ஃபலஸ்தீன விவகாரத்தில் இந்தியா இரு தேசத் தீர்வை ஆதரிப்பதாகக் கூறினாலும், உறவு இஸ்ரேலுடன் மிக நெருக்கமாக ஆகியிருக்கிறது. குறிப்பாக, ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்காவின் தற்போதைய தாக்குதல்களையோ, ஆயதுல்லாஹ் ஃகாமினயீயின் கொலையையோ இந்தியா கண்டிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் 

நோன்பின் நோக்கம்

Loading

தக்வா என்பது அல்லாஹ்வின் சட்டங்களுக்கு, அவன் அமைத்த ஒழுங்குகளுக்கு உட்பட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. தக்வா என்பது அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணுவது. தக்வா என்பது அவன் செய்ய வேண்டும் என்று கூறியவற்றைச் செய்வதும் அவன் விலகியிருக்க வேண்டும் என்று கூறியவற்றிருந்து விலகியிருப்பதும் ஆகும். நோன்பு அப்படியான, நேர்த்தியான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு பயிற்சி. நோன்பின் வழியாக மனிதர்கள் அந்த உயர்நிலையை அடைய முடியும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தூஃபானுல் அக்ஸா: இழப்புகளுக்கு அப்பால்…

Loading

காஸாவின் இழப்புகளுக்கு ஈடாக எதுவும் இருக்க முடியாது என்றாலும், ஸியோனிஸ்டுகளின் இனப்படுகொலை முயற்சிகள் எதிர்ப்புப் போராட்ட அமைப்புகளையோ, அவற்றின் திறனையோ, போர் புரியும் மன உறுதியையோ பாதிக்கவில்லை. இராணுவ நடவடிக்கையின் மூலம் காஸாவை ஒருபோதும் பணியவைக்க முடியாது. தலைவர்கள் என்றோ, வீரர்கள் என்றோ வேறுபாடின்றி, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை முடித்துச்செல்கிறவர்களின் பொறுப்புகளை உடனடியாக ஏற்கக்கூடிய ஒரு நீண்ட வரிசையும், குறைபாடற்ற செயற்பாட்டு அமைப்பும் அங்கு இருக்கிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்திய முஸ்லிம்கள் ஜனநாயகத்தில் பங்காளிகள்; ராஜதந்திரத்தில் பகடைகள் அல்ல!

Loading

இந்திய அரசியலுக்கு மட்டுமே உரித்தான விசித்திரமான முரண்பாடாக, உள்நாட்டில் முஸ்லிம்களைப் புறக்கணிக்கும் ஓர் அரசாங்கம், அண்மையில் பஹல்காமில் நிகழ்ந்த கொடிய தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கினை ‘வெளிக்கொணர்வதற்காக’ முஸ்லிம் முகங்கள் முதன்மையாக இடம்பெற்றுள்ள 48 உறுப்பினர்கள் கொண்ட ஒரு பரந்த, பலகட்சிப் பிரதிநிதிகள் குழுவை தற்போது ஒருங்கிணைத்துவருகிறது.
முஸ்லிம்கள் அந்தக் குழுவில் அங்கம் வகிப்பது பிரச்சினையல்ல. மாறாக, இதன் பின்னணியில் உள்ள பாசாங்குத்தனமான அடையாள அரசியலே சிக்கலானது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு தமிழ் முஸ்லிமின் இலங்கைப் பயண அனுபவப் பதிவு (பகுதி 1)

Loading

தமிழக அரசியல் பண்பாட்டு சூழலில் இலங்கை முஸ்லிம்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி என்பது ஏன் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தங்களை பிற தமிழர்களோடு இணைத்து அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான். அத்தகைய கேள்வியின் அடியாக உள்ள அனுமானம் மத அடையாளத்திலிருந்து தனி தேசிய இன அடையாளம் உருவாக முடியாது என்று கருதுவதும்தான். இன அடையாளம் என்பது மதம், மொழி, பிரதேசம் போன்ற சமூக வித்தியாசங்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழமைவுக்குள் உருவாகி வருவதே.

மேலும் படிக்க