காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

சவூதி அறபியா ஃபலஸ்தீனுக்கு முழு ஆதரவு வழங்காதது ஏன்?

1973ல் அறபு-இஸ்ரேல் போர் நடந்தபோது சவூதியை ஆட்சிபுரிந்த மன்னர் ஃபைசல் எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்து அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மிகப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தார். அது அவர்களுக்கு பொருளாதார ரீதியான அடியைக் கொடுத்தது. உலக அரங்கில் இஸ்ரேலைத் தனிமைப்படுத்தியது. இதுபோல் ஒரு சரியான, தாக்ககரமான நடவடிக்கையை MBS எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஓர் அழகிய ஆவணம்

தொழுகை முடித்து அறைக்குத் திரும்பி வந்த இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ அவர்கள் ஹதீஸ் விரிவுரை எழுதப்பட்ட அந்தத் தாளைப் பார்க்கிறார்கள். தன் மகள் அதில் கிறுக்கி வைத்திருப்பதை அறிகிறார்கள். வேறொரு தாளில் அதை அப்படியே எழுதிக்கொண்டு அதைக் கிழித்துப் போட்டிருக்கலாம். கால் நூற்றாண்டு காலம் கடுமையாக உழைத்து எழுதும் பணியில் ஒரேயொரு தாளை மீண்டும் படி எடுப்பது ஒன்றும் சிரமமான வேலை அல்ல. ஆனால், மகான் அவர்கள் தன் மகள் கிறுக்கிய அந்தத் தாளை அப்படியே தன் நூலில் சேர்த்துவிட்டார்கள். அது இன்றும் மூலக் கையெழுத்து ஆவணமாக (manuscript) இருக்கிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பாப்புலர் ஃப்ரண்ட் தடையை எப்படி புரிந்துகொள்வது?

நடந்திருப்பது பாசிச அரசின் மிக முக்கியமான தாக்குதலாகும்.
பாஜக அரசின் சிறுபான்மை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானப் போராட்டக் களத்தில் நின்று கொண்டிருந்த, அமைப்புப் பலம் பொருந்திய சக்தி ஒன்று அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பாசிச எதிர்ப்பு முகாம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
Yusuf Al-Qaradawi குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பேரறிஞர் யூசுஃப் அல்-கர்ளாவி: வாழ்வும் பணிகளும்

கத்தார் தலைநகர் தோஹாவில் வசித்து வந்த உலகப் புகழ்பெற்ற இஸ்லாமியப் பேரறிஞர் யூசுஃப் அல்-கர்ளாவி (96) மரணமடைந்ததாக அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

நாத்திகம் அறிவியலுக்கு எதிரானது!

கடவுள் இல்லை எனில் இந்தப் பிரபஞ்சம் தோன்றியதற்கான, பிரபஞ்சத்தின் இருப்பிற்கான காரணம் என்னவாக இருக்கும்? எந்தக் காரணமுமின்றி அது தானாகவே தோன்றியது, தானாகவே செயல்படுகிறது என்பார்கள் நாத்திகர்கள். படைப்பாளன், திட்டம், நோக்கம், அறிவு என எதுவுமின்றி இந்த மாபெரும் பிரபஞ்சம் தோன்றியது எனக் கொண்டால், இதில் சீர்மையும் (Perfection) தக்க வடிவமும் (Pattern) காணப்படுவது எப்படி? மட்டுமின்றி, இவையெல்லாம் என்றென்றும் இவ்வாறே இருக்கும் (Repetition for Inductive Reasoning) என்று நம்பி அதைக் கொண்டு அறிவியல் கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றவே! நாத்திகக் கண்ணோட்டத்தில் இது நம்பிக்கையா, மூடநம்பிக்கையா?

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

அவமதிப்பதற்குச் சுதந்திரம்?

சமீபத்தில் ராபர்ட் கார்டர் என்ற பத்திரிகையாளர் ட்விட்டரில் பகிர்ந்த பதிவு நினைவுக்கு வருகிறது. LGBT+ அவமதிப்பு ஹோமோ ஃபோபியா என்றும், யூத அவமதிப்பு செமிட்டிய விரோதம் என்றும், தோல் நிறத்தை அவமதித்தல் இனவாதம் என்றும் கருதப்படும் நிலையில், இஸ்லாத்தை அவமதிப்பது மட்டும் கருத்துச் சுதந்திரம் ஆகிவிடுமா?

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஸியோனிச இஸ்ரேலின் பயங்கரவாதம்

ஃபலஸ்தீனின் கஸ்ஸா பகுதியின் மீது சென்ற ஆண்டு மே மாதம் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் தொடுத்தது. 11 நாட்கள் அது நிகழ்த்திய கோரத் தாண்டவத்தில் சுமார் 250 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். தற்போது அதேபோன்றதொரு தாக்குதலை இஸ்ரேல் கட்டவிழ்த்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் 31 ஃபலஸ்தீனர்களை அது கொன்றுள்ளது. 250க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர்.

மேலும் படிக்க
kayalpattinam shuaib குறும்பதிவுகள் 

புத்தக மனிதர் சுஐபு காக்கா

அமெரிக்காவாழ் இந்தியரொருவர் சுஐபு காக்காவின் புத்தகங்களை அப்படியே விலைக்கு எடுத்துக் கொள்கிறேன் எனச் சொன்னார். மூத்த ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசனின் வழிகாட்டுதலின்படி சுஐபு காக்காவின் மொத்த நூல் சேகரம் அவர் மிகவும் நேசித்த காயல்பட்டினம் அரசு நூலகத்தில் சேர்க்கப்பட்டு அவரது பெயரிட்ட தனியடுக்கில் வைக்கப்படவுள்ளன.

மேலும் படிக்க
malcom x tamil குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஒடுக்கப்பட்ட மக்களுடன் அணிசேர்தல்

நாம் விடுதலை பெறுவதற்கான ஒரே வழி, உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருடனும் நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்வது மட்டுமே.

– மால்கம் X (மாலிக் அல்-ஷப்பாஸ்)

மேலும் படிக்க
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

புத்த, சமண கோவில்கள் இந்து ஆலயங்களாக மாற்றப்படவில்லையா?

கஜினி முகம்மது பதினேழு முறை சோமநாதபுரம் கோவிலை இடித்து நொறுக்கினார் என்று உங்களுக்குப் பாடநூற்கள் சொல்லியுள்ளன இல்லையா? பண்டைய இந்தியாவில் கோவில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடங்கள் மட்டுமல்ல. மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன. இல்லாவிட்டால் தஞ்சைப் பெரிய கோவிலைச் சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்? பண்டைய மன்னர்களின் போர்கள் என்பன பெரும்பாலும் கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதாம். இந்த அடிப்படையில்தான் கஜினி முகம்மது கொள்ளையிட்டதும். கோவிலுக்குள் ஒளிந்து கொண்ட எதிரி மன்னனைக் கொல்லவும், ஒளித்து வைக்கப்பட்ட செல்வத்தைக் கொள்ளையிடவும், எதிரியின் பண்பாட்டு ஆளுமையை அழிக்கவுமே கோவில்கள் மீது படையெடுக்கப்பட்டன. எந்த முஸ்லிம் மன்னனும் தன்னுடைய எல்லைக்குள் இருந்த இந்துக் கோவில்களையோ, தனது பாதுகாப்பிலிருந்த இந்துக் கோவில்களையோ இடித்ததில்லை. அவுரங்கசிப் ஆட்சிக் காலத்திலும் அப்படித்தான். அவருக்கு எதிராகச் சதி செய்தவர்களின் கோட்டைகளும் கோவில்களும் இடிக்கப்பட்டன.…

மேலும் படிக்க