இந்திய முஸ்லிம்கள் ஜனநாயகத்தில் பங்காளிகள்; ராஜதந்திரத்தில் பகடைக் காய்கள் அல்ல!
இந்திய அரசியலுக்கு மட்டுமே உரித்தான விசித்திரமான முரண்பாடாக, உள்நாட்டில் முஸ்லிம்களைப் புறக்கணிக்கும் ஓர் அரசாங்கம், அண்மையில் பஹல்காமில் நிகழ்ந்த கொடிய தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கினை ‘வெளிக்கொணர்வதற்காக’ முஸ்லிம் முகங்கள் முதன்மையாக இடம்பெற்றுள்ள 48 உறுப்பினர்கள் கொண்ட ஒரு பரந்த, பலகட்சிப் பிரதிநிதிகள் குழுவை தற்போது ஒருங்கிணைத்துவருகிறது.
முஸ்லிம்கள் அந்தக் குழுவில் அங்கம் வகிப்பது பிரச்சினையல்ல. மாறாக, இதன் பின்னணியில் உள்ள பாசாங்குத்தனமான அடையாள அரசியலே சிக்கலானது.