கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமும் மதச்சார்பற்ற கல்விமுறையும் – ஜாஸிர் அவ்தா

மார்ச் 12 அன்று திருச்சி அஸ்ஸலாம் கல்லூரியில் எஸ்ஐஓ நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் அறிஞர் ஜாஸிர் அவ்தா ஆற்றிய உரையின் சுருக்கம். புதிய சிந்தனைகளை உள்வாங்கிக்கொள்ள உங்களுடைய இந்த வயதுதான் சரியானது என்று நம்புகிறேன். முற்காலத்தில் இஸ்லாத்தைத் தம் தோள்களில் சுமந்த பல சஹாபாக்கள் பதின்ம வயதுடையவர்களாய் இருந்திருக்கிறார்கள். அலி, அர்கம், முஸ்அப் பின் உமைர், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) போன்றோர் இதற்கு சில உதாரணங்கள். அவர்கள் உலகையே மாற்றியமைப்பதற்கான பார்வையைக் கொண்டிருந்ததோடு, உலகின் போக்கை மாற்றியமைக்கவும் செய்தார்கள் என்பது வரலாறு. அந்த வகையில் உங்களின் முன்பு, மகாஸிதுஷ்ஷரீஆ குறித்துப் பேசுவதை என் கடமையாக உணர்கிறேன். அது இஸ்லாமியச் சிந்தனையின் ஒரு கிளை மட்டுமின்றி, அது இஸ்லாம் குறித்ததொரு புதிய பார்வை. அதை உள்வாங்கிக்கொள்வதற்கு நாம் இஸ்லாம் அல்லாத சிந்தனைமுறைகளிலிருந்து விடுபட வேண்டியது அவசியம். இஸ்லாத்துக்காகப்…

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பாப்புலர் ஃப்ரண்ட் தடையை எப்படி புரிந்துகொள்வது?

நடந்திருப்பது பாசிச அரசின் மிக முக்கியமான தாக்குதலாகும்.
பாஜக அரசின் சிறுபான்மை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானப் போராட்டக் களத்தில் நின்று கொண்டிருந்த, அமைப்புப் பலம் பொருந்திய சக்தி ஒன்று அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பாசிச எதிர்ப்பு முகாம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
Yusuf Al-Qaradawi குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பேரறிஞர் யூசுஃப் அல்-கர்ளாவி: வாழ்வும் பணிகளும்

கத்தார் தலைநகர் தோஹாவில் வசித்து வந்த உலகப் புகழ்பெற்ற இஸ்லாமியப் பேரறிஞர் யூசுஃப் அல்-கர்ளாவி (96) மரணமடைந்ததாக அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க
salai basheer novel kasabath நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கசபத்: ஆழ்மனத்தின் ஆறாத காயம் – முஹம்மது சேக் அன்சாரி

‘கசபத்’ காயல்பட்டினத் தமிழில் எழுதப்பட்ட அழகிய சுயசரிதை நாவல். காயல்பட்டினத் தமிழ் புதிதாக கேட்பவர்களுக்கு புதுமையாகவும் இனிமையாகவும் இருக்கும். அது இந்த நாவல் முழுக்க விரவிக் கிடக்கிறது. நாவலைப் படித்து முடிக்கும்போது நம் நாவும் அந்த வட்டார மொழியை உச்சரிக்கத் தவறாது.

நாவலாசிரியர் சாளை பஷீரின் ஊர் காயல்பட்டினம். அவரைச் சுற்றி நடந்த சுமார் நான்கு வருட நிகழ்வுகளை அற்புதமாக விவரித்திருக்கிறார் என்பதை விட காட்சிப்படுத்தி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
பிறரின் கதையைக் கேட்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு நிறைய பொறுமை வேண்டும். கொட்டாவி விடாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்! ஆனால், இந்த அலுப்புகள் எதுவும் இன்றி நாவலை முடிக்கும்வரை சலிப்புத் தட்டாமல் நகர்த்தியிருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

மேலும் படிக்க
nv ramana tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்’: என்.வி. ரமணாவின் பேச்சும் செயல்பாடும்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஓய்வு பெற்றார். தனது பதவிக்காலத்தில் அரசியலமைப்பைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி 29க்கும் மேற்பட்ட உரைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். எனினும், நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 6 வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும், நடுவர் மன்ற மறுஆய்வு தேவைப்படும் 53 வழக்குகள் முன்பிருந்ததைப் போலவே கிடப்பில் போடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க
bulldozer politics bjp tamil afreen fatima கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புல்டோசர் பயங்கரவாதம்: இஸ்ரேலைப் பின்பற்றும் இந்தியா

உலகிலேயே சட்ட விதிகளை மீறி சிறுபான்மையினர் வீடுகளைத் தகர்ப்பது இரண்டே நாடுகள்தான்; ஒன்று இஸ்ரேல், மற்றொன்று இந்தியா என்கிறார்கள். ஒரு நாடாக இந்தியாவுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்? இந்தியர்கள் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும்.

இந்து ராஷ்டிர கனவில் மிதக்கும் சங் பரிவாரம் முஸ்லிம்களை அதன் முதன்மை இலக்காக்கி தன் பாசிச செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாட்டில் மத ரீதியாக பதற்ற நிலை ஏற்பட்டால் அதை அருவடை செய்து பெரும் அரசியல் லாபமடைவது பாஜகதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு எனப் பல பிரச்னைகள் இந்தியாவை சூழ்ந்துள்ளன. இந்திய மக்கள் வெறுப்பரசியலுக்கு இனியும் இடமளித்தால் இன்னொரு இலங்கையாக இந்தியா மாறக்கூடும் என்று எச்சரிக்கிறோம்.

மேலும் படிக்க
why muslim girls wearing hijab கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப்: முஸ்லிம் பெண்களைத் துரத்தும் கேள்விகளும், அதற்கான பதில்களும்!

ஹிஜாப் உங்கள் சுயதேர்வா அல்லது வீட்டிலுள்ளர்களின் அழுத்தத்தால் கடைப்பிடிக்கப்படுவதா?

இது எங்கள் மீது திணிக்கப்பட்டிருப்பதாக முஸ்லிமல்லாதோர் பலர் நினைக்கிறார்கள். அந்த அடிப்படையிலிருந்துதான் இந்தக் கேள்வி வருகிறது. நாங்கள் மூளை சலவை செய்யப்பட்டிருப்பதாகக்கூட ஒருசிலர் வெறுப்பைக் கக்குகிறார்கள். எங்களுக்கு சுயசிந்தனை இல்லை என்பதுபோல் அவர்கள் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். ஒருவகையில் இதுவெல்லாம் முஸ்லிம் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை.

சுயதேர்வு பற்றி ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஒருவரின் சுயதேர்வு 100 சதவீதம் எந்தப் புற அழுத்தமும் இல்லாமல் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்ல முடியுமா? நம் சமூகத்தில் பெண்கள் முடியை நீளமாக விடுவதும், ஆண்கள் தன் முடியைக் கத்தரித்துக்கொள்வதும் அவரவர் விருப்பங்களின்படிதான் நடக்கிறதா? அவ்வாறு நடந்தால் மக்கள் எல்லோரும் எப்படி ஒன்றுபோல் இருக்க முடிகிறது?

அதனால் ஹிஜாபை திணிப்பு, அடிமைத்தனம் என்றெல்லாம் வெளியிலுள்ளோர் சொல்லக் கூடாது. அது எங்களை அவமதிக்கும் செயல். அப்படிச் சொல்வோரை சட்டப்படி தண்டிக்க வழிவகைகள் தேவை என்று நினைக்கிறேன். ஹிஜாப் குறித்து கருத்துச் சொல்லும் உரிமை மற்றவர்களைவிட எங்களுக்குத்தான் இருக்கிறது.

மேலும் படிக்க
salai basheer novel kasabath நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கசபத்: நூல் மதிப்புரை – பேரா. ஆர்.முஹம்மது ஹசன்

எழுத்தாளர் சாளை பஷீர் அவர்களின் முதல் நாவலான ‘கசபத்’தை சமீபத்தில் படித்தேன். தென் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்ட கடற்கரை ஊரான காயல்பட்டினம் தான் கதையின் நிகழ்விடம். காயல்பட்டினத்தை மையமாகக் கொண்டு அதன் வட்டார மொழியில் பண்பாட்டுப் பின்னணியில் வரும் முதல் நாவல் என நினைக்கிறேன்.

காயல்பட்டினம் மிகப் பழைமையான வரலாற்று எச்சங்களையும், பல ஸூஃபி அறிஞர்களின் தடங்களுடன் தமிழ்ச் செறிவும் கொண்ட இஸ்லாமியர்கள் கணிசமாக வாழும் ஓர் ஊர். இந்நாவலின் ஆசிரியர் சாளை பஷீரின் சொந்த ஊரும்கூட. தான் கண்ட வாழ்வியல் முறைகளை, எளிய மனிதர்களை சிலாகித்த இடங்களை மிகையில்லாமல் பதிவு செய்திருக்கிறார் சாளை பஷீர். காயல்பட்டின ஊரார், குறிப்பாக இஸ்லாமியர்கள் என்றாலே சிவப்புத் தோல் உடையவர்கள், பெரும் செல்வந்தர்கள் எனப் பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை உடைத்தெறிந்து இருக்கிறார்.

மேலும் படிக்க
beast review குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பீஸ்ட்: விமர்சனம் எழுதக்கூட தகுதியற்ற குப்பை – ப. பிரபாகரன்

FIR படத்தைத் தொடர்ந்து இஸ்லாமிய வெறுப்பைக் கக்கும் மற்றுமொரு நச்சுக் குப்பைதான் இந்த Beast திரைப்படம். இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து வெளியிடும் உதயநிதி ஸ்டாலினின் கொள்கைப் பற்று மயக்கமடைய வைக்கிறது.

நாடே இந்துத் தீவிரவாதத்தால் பாதிக்கப்படும்போது, அதிலும் வடக்கில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டும்கூட இப்படியொரு படம் எடுக்க முடிகிறதென்றால் நெல்சன் போன்றவர்கள் யார் என்று அடையாளம் கண்டு கொள்ள வேண்டிய தருணம் இது.

மேலும் படிக்க
காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

உத்தரப் பிரதேச தேர்தல்: தமிழகப் பத்திரிகையாளர்களின் கள அனுபவப் பகிர்வு

உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் இனியன், பியர்சன் ஆகியோர் தம் அனுபவங்களை மெய்ப்பொருள் யூடியூப் சேனலுக்குப் பகிர்ந்துள்ளார்கள்.

* உ.பி. தேர்தல் பிரச்சாரத்தை ஒவ்வொரு கட்சியும் எப்படி முன்னெடுத்தது?
* எதிர்க்கட்சிகளின் பலவீனங்கள் என்னென்ன?
* ஆதித்யநாத் அரசின் தோல்வி ஏன் தேர்தலில் எதிரொலிக்கவில்லை?
* பாஜகவின் சாதி அரசியல் பற்றி..
* உ.பி. முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்?

– உள்ளிட்ட பல விஷயங்களைத் தங்களின் ஒன்றரை மாத கள அனுபவங்களின் வழியாக அலசியிருக்கிறார்கள்.

மேலும் படிக்க