உரைகள் கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஜப்ரிய்யா, கதரிய்யா, முர்ஜிஆ சிந்தனைப் பள்ளிகள்
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்

முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய கோட்பாட்டளவிலான வித்தியாசங்களைப் பார்க்கையில், அவையனைத்தும் முஸ்லிம்களின் சாராம்சத்தோடு, அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் போன்ற கேள்விகளோடு தொடர்புடையவை அல்ல என்று பார்க்கிறோம். மாறாக, அவை ‘இஸ்லாத்தில் போதுமானளவு விவரிக்கப்படாத விவகாரங்கள்’ என்று சிலர் நினைத்த விஷயங்களை விவரிக்க முற்படுவதோடு தொடர்புடையது என்று பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க
உரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஃகவாரிஜ் சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் சிந்தனைப் பள்ளிகள்

இமாம் அல்ஆஸீயின் இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகள்பற்றிய தொடர் உரையின் இப்பகுதி, இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய முதலாவது கடுபோக்காளர்களாக அறியப்படுகிற ஃகவாரிஜ்களின் சிந்தனைப் போக்கு, அதன் சிக்கல், அவர்களுக்குள்ளே காணப்பட்ட வேறுபட்ட குழுக்கள்குறித்த முழுமையான சித்திரத்தை வழங்குவதுடன் சம காலத்தில் அப்போக்குகளின் நீட்சியையும் சுட்டிக் காட்டுகிறது. நடுநிலையுடன் வரலாற்றை அறிய விரும்புவர்களுக்கு இது பயனளிக்கக் கூடும்.

மேலும் படிக்க
உரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஷீஆ சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் சிந்தனைப் பள்ளிகள்

ஒரே இறைவன், ஒரே தூதர், ஒரே வேதம், ஒரே உம்மத் – என்ற கருத்தாக்கம்கொண்ட முஸ்லிம் சமூகத்தில் பல்வேறுபட்ட பிளவுகளும் குழுக்களும் இருப்பதுபோல் தோன்றுவதன் உண்மைநிலை என்ன? 1400 ஆண்டுகால நீண்ட இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறுபட்ட சமூக-அரசியல் சூழல்களில் தோன்றிய இச்சிந்தனைக் குழுக்களின் அடிப்படைகள், வகைகள், வேறுபடும் புள்ளிகள் போன்றவற்றை விளக்கி இமாம் முஹம்மது அல்ஆஸி அவர்கள் ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகளை மொழிபெயர்த்து தொடராகப் பதிவிடுகிறோம். தேடலுள்ள ஆரம்பநிலை வாசகர்களுக்கு இவை நல்லதொரு புரிதலை வழங்குமென்று எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க
sepoy mutiny tamil கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

காலனிய எதிர்ப்புப் போரில் முஸ்லிம்கள் (2)

சிப்பாய்ப் புரட்சியின் நாயகர்கள் அல்லாமா பஜ்லேஹக் கைராபாதி 1857ல் நடந்த சிப்பாய்ப் புரட்சிக்கு இந்திய விடுதலை வரலாற்றில் முதன்மையான இடமுண்டு. அதில் பங்குகொண்டு போராடியவர்களில் மிக முக்கியமானவர் அல்லாமா பஜ்லேஹக் கைராபாதி. 1797ல் பிறந்த இவர், அறபி, உருது, பார்ஸி, இந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்ற பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார். சமஸ்தான மன்னர்கள் இவரிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். சில சமஸ்தானங்களில் நீதிபதியாகவும் பணி புரிந்தார். இந்திய மன்னர்களுக்கு இடையே விரோதத்தை விதைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியில் பெரும் வெற்றி பெற்று இறுமாப்புடன் இருந்த ஆங்கிலேய அரசு, இந்திய செல்வத்தை தொடர்ச்சியாகக் கொள்ளையடித்து வந்தது. அதுகுறித்து சமஸ்தான மன்னர்களுக்குப் புரிய வைத்துடன், முகலாய மன்னர் பஹதூர்ஷா ஜாஃபர் தலைமையில் 1857 சுதந்திரப் போராட்டம் நடைபெற வித்திட்டவர் அல்லாமா பஜ்லேஹக்…

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

காலனிய எதிர்ப்புப் போரில் முஸ்லிம்கள் (1)

மேற்கத்திய சக்திகள் உலகமெங்கும் தம் மேலாதிக்கத்தை நிறுவிய வரலாற்றையும், இந்தியத் துணைக் கண்டத்தில் காலனியத்துக்கு எதிரான போராட்டம் வீரியத்துடன் நடைபெற்றதையும் நாம் அறிவோம். வரலாற்றை ஆராய்ந்தால் காலனிய எதிர்ப்பில் முஸ்லிம் சமூகத்துக்கு முதன்மையான இடமிருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது தொடர்பாக பல அற்புதமான புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில், காலனிய எதிர்ப்புப் போரில் பங்குகொண்ட முஸ்லிம்களின் தீரமிகு வரலாற்றைப் பதிவு செய்வதும், இளைய தலைமுறை வாசகர்களுக்கு அதைக் கொண்டு சேர்ப்பதுமே இந்தத் தொடரின் நோக்கம். இதில் முக்கியமான வரலாற்றுத் தகவல்கள் தொகுத்தளிக்கப்படவுள்ளன. வாசகர்கள் தொடரை முழுமையாக வாசித்துப் பயனடைய வேண்டும். குஞ்ஞாலி மரைக்காயரும் போர்ச்சுகீயர் எதிர்ப்பும் கேரளாவின் பொன்னானியில் பிறந்தவர் குஞ்ஞாலி மரைக்காயர். இவரின் முன்னோர்கள் சாமுத்திரி மன்னனிடம் தளபதிகளாக இருந்தவர்கள். இவரது இயற்பெயர் முஹம்மது. மன்னர் இவரை குஞ்ஞு அலி என்று அழைத்தார். பின்னாளில்…

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (5)

எப்படி குழப்பங்களை எதிர்கொள்ளப் போகிறோம்?
• பாரம்பரிய இஸ்லாமிய அறிவு மரபில் நிலைகொள்ள வேண்டும்.
• எதுவெல்லாம் பாரம்பரிய அறிவுக்கும் பண்பாட்டுக்கும் மாற்றாக எழுகின்றதோ அதை விசாரணைக்குள்ளாக்க வேண்டும்.
• இஸ்லாமிய அறிவு மரபின் ஞானத்தையும், அதன் உயர் மதிப்பீடுகளையும் நாம் கண்டடைவதோடு, அவற்றை நிறுவுவதற்கு உழைக்க வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (4)

கடந்த காலத்திலும் தற்காலத்தைப் போன்று முஸ்லிம்களிடையே பல குழப்பங்கள் தோன்றியிருக்கின்றன. இன்று நவீனத்துவம் வகிக்கும் இடத்தை முற்காலத்தில் கிரேக்கத் தத்துவம் வகித்தது. அதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் முகங்கொடுத்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு, கிரேக்கத் தத்துவவியலாளர்கள் இந்தப் பிரபஞ்சம் நிலையானது, தொடக்கமும் முடிவுமற்றது என்றனர். அதற்கு சில அடிப்படைகளையும் முன்வைத்தனர். இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் வானியலாளர் எட்வின் ஹபிள் போன்றோரின் தலையீட்டுக்கு முன்புவரை இந்தக் கருத்தமைவுதான் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்தது. இஸ்லாமிய வரலாற்றின் முதல் நான்கு தலைமுறைகளுக்குள்ளாகவே முஸ்லிம் உலகில் இது அறிமுகமாகிவிட்டது. தத்துவவியலாளர்களான அரிஸ்டாட்டில், பிளேட்டோ முதலானோரை அநேகர் கற்க முற்பட்டார்கள். சிலர் அதை இஸ்லாத்துடன் குழப்பிக்கொள்ளும்போது வழிகேட்டுக்கு அது காரணமாக அமைந்தது. அவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியேறும் சூழலும் உருவானது.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (3)

தொழில்நுட்பம், அறிவியல், பண்பாடு என அனைத்து அம்சங்களிலும் சமூகம் தொடர்ச்சியாக சிறந்த தெரிவை நோக்கி முன்நகர்வதாய் முற்போக்குவாதம் கருதுகிறது.

பத்தாண்டுகளுக்கு முன் ஜான் ஸ்டீவர்ட் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பெண்களைப் போல் ஆண்கள் ஆடை அணிவதாகச் சொல்லி திருநங்கைகளை நகைப்புக்குள்ளாக்கினார். அனைவரும் சிரித்தார்கள். ஜான் ஸ்டீவர்ட் நவீனமானவராகவும் தாராளவாதியாகவும் அறியப்படுபவர்தான். இப்போது அவர் அப்படி செய்தால் Transphobic என்று எல்லாரும் அவர் மீது பாய்ந்திருப்பார்கள். ஏனெனில், இன்று சமூகம் முன்நகர்ந்திருப்பதாகக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில், சரி – தவறு என்ற மதிப்பீடுகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பதாகக் கருதுவது முற்போக்குவாதத்தின் ஓர் அடிப்படை.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (2)

மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் ஐரோப்பிய வரலாற்றை செவ்வியல் காலம், மத்திய காலம், நவீன காலம் என மூன்றாக வகைப்படுத்துவார்கள். பண்டைய எகிப்து மற்றும் கிரேக்கம் உள்ளிட்டவற்றின் வரலாறு செவ்வியல் காலத்தைச் சார்ந்தது. 16 – 18ம் நூற்றாண்டு காலப்பிரிவில்தான் மறுமலர்ச்சிக் காலம், அறிவொளிக் காலம் என்பன வருகின்றன. இது நவீன காலமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அப்போது தோன்றிய கருத்தியல்கள் குறித்தே நாம் அதிகம் கரிசனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

மேற்குலக வரலாற்றின் முப்பகுதிகள்:

• செவ்வியல் காலம் கி.பி. 500க்கு முன்
• மத்திய காலம் கி.பி. 500 முதல் கி.பி. 1500 வரை
• நவீன காலம் கி.பி. 1500க்குப் பின்

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (1)

இஸ்லாமிய அழைப்பாளரும், அலஸ்னா நிறுவனத்தின் நிறுவனருமான டேனியல் ஹகீகத்ஜு, இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் மீது நவீனத்துவம் தொடுக்கும் தாக்குதல்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருபவர். நாத்திகம், தாராளவாதம், பெண்ணியவாதம், மதச்சார்பின்மைவாதம் போன்ற ஆதிக்கக் கருத்தியல்கள் இவரின் பிரதான பேசுபொருள்களாக விளங்கின்றன. Dark Storms: The Modernist Challenge to Islam எனும் கருப்பொருளில் அவர் வழங்கிய ஆன்லைன் கோர்ஸின் சுருக்கப்பட்ட வடிவமே இந்தத் தொடர்.

மேலும் படிக்க