sepoy mutiny tamil கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

காலனிய எதிர்ப்புப் போரில் முஸ்லிம்கள் (2)

சிப்பாய்ப் புரட்சியின் நாயகர்கள் அல்லாமா பஜ்லேஹக் கைராபாதி 1857ல் நடந்த சிப்பாய்ப் புரட்சிக்கு இந்திய விடுதலை வரலாற்றில் முதன்மையான இடமுண்டு. அதில் பங்குகொண்டு போராடியவர்களில் மிக முக்கியமானவர் அல்லாமா பஜ்லேஹக் கைராபாதி. 1797ல் பிறந்த இவர், அறபி, உருது, பார்ஸி, இந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்ற பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார். சமஸ்தான மன்னர்கள் இவரிடம் ஆலோசனை கேட்டு அதன்படி நடக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். சில சமஸ்தானங்களில் நீதிபதியாகவும் பணி புரிந்தார். இந்திய மன்னர்களுக்கு இடையே விரோதத்தை விதைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியில் பெரும் வெற்றி பெற்று இறுமாப்புடன் இருந்த ஆங்கிலேய அரசு, இந்திய செல்வத்தை தொடர்ச்சியாகக் கொள்ளையடித்து வந்தது. அதுகுறித்து சமஸ்தான மன்னர்களுக்குப் புரிய வைத்துடன், முகலாய மன்னர் பஹதூர்ஷா ஜாஃபர் தலைமையில் 1857 சுதந்திரப் போராட்டம் நடைபெற வித்திட்டவர் அல்லாமா பஜ்லேஹக்…

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

காலனிய எதிர்ப்புப் போரில் முஸ்லிம்கள் (1)

மேற்கத்திய சக்திகள் உலகமெங்கும் தம் மேலாதிக்கத்தை நிறுவிய வரலாற்றையும், இந்தியத் துணைக் கண்டத்தில் காலனியத்துக்கு எதிரான போராட்டம் வீரியத்துடன் நடைபெற்றதையும் நாம் அறிவோம். வரலாற்றை ஆராய்ந்தால் காலனிய எதிர்ப்பில் முஸ்லிம் சமூகத்துக்கு முதன்மையான இடமிருப்பதை யாரும் மறுக்க முடியாது. இது தொடர்பாக பல அற்புதமான புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில், காலனிய எதிர்ப்புப் போரில் பங்குகொண்ட முஸ்லிம்களின் தீரமிகு வரலாற்றைப் பதிவு செய்வதும், இளைய தலைமுறை வாசகர்களுக்கு அதைக் கொண்டு சேர்ப்பதுமே இந்தத் தொடரின் நோக்கம். இதில் முக்கியமான வரலாற்றுத் தகவல்கள் தொகுத்தளிக்கப்படவுள்ளன. வாசகர்கள் தொடரை முழுமையாக வாசித்துப் பயனடைய வேண்டும். குஞ்ஞாலி மரைக்காயரும் போர்ச்சுகீயர் எதிர்ப்பும் கேரளாவின் பொன்னானியில் பிறந்தவர் குஞ்ஞாலி மரைக்காயர். இவரின் முன்னோர்கள் சாமுத்திரி மன்னனிடம் தளபதிகளாக இருந்தவர்கள். இவரது இயற்பெயர் முஹம்மது. மன்னர் இவரை குஞ்ஞு அலி என்று அழைத்தார். பின்னாளில்…

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (5)

எப்படி குழப்பங்களை எதிர்கொள்ளப் போகிறோம்?
• பாரம்பரிய இஸ்லாமிய அறிவு மரபில் நிலைகொள்ள வேண்டும்.
• எதுவெல்லாம் பாரம்பரிய அறிவுக்கும் பண்பாட்டுக்கும் மாற்றாக எழுகின்றதோ அதை விசாரணைக்குள்ளாக்க வேண்டும்.
• இஸ்லாமிய அறிவு மரபின் ஞானத்தையும், அதன் உயர் மதிப்பீடுகளையும் நாம் கண்டடைவதோடு, அவற்றை நிறுவுவதற்கு உழைக்க வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (4)

கடந்த காலத்திலும் தற்காலத்தைப் போன்று முஸ்லிம்களிடையே பல குழப்பங்கள் தோன்றியிருக்கின்றன. இன்று நவீனத்துவம் வகிக்கும் இடத்தை முற்காலத்தில் கிரேக்கத் தத்துவம் வகித்தது. அதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் முகங்கொடுத்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு, கிரேக்கத் தத்துவவியலாளர்கள் இந்தப் பிரபஞ்சம் நிலையானது, தொடக்கமும் முடிவுமற்றது என்றனர். அதற்கு சில அடிப்படைகளையும் முன்வைத்தனர். இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் வானியலாளர் எட்வின் ஹபிள் போன்றோரின் தலையீட்டுக்கு முன்புவரை இந்தக் கருத்தமைவுதான் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்தது. இஸ்லாமிய வரலாற்றின் முதல் நான்கு தலைமுறைகளுக்குள்ளாகவே முஸ்லிம் உலகில் இது அறிமுகமாகிவிட்டது. தத்துவவியலாளர்களான அரிஸ்டாட்டில், பிளேட்டோ முதலானோரை அநேகர் கற்க முற்பட்டார்கள். சிலர் அதை இஸ்லாத்துடன் குழப்பிக்கொள்ளும்போது வழிகேட்டுக்கு அது காரணமாக அமைந்தது. அவர்கள் இஸ்லாத்தை விட்டே வெளியேறும் சூழலும் உருவானது.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (3)

தொழில்நுட்பம், அறிவியல், பண்பாடு என அனைத்து அம்சங்களிலும் சமூகம் தொடர்ச்சியாக சிறந்த தெரிவை நோக்கி முன்நகர்வதாய் முற்போக்குவாதம் கருதுகிறது.

பத்தாண்டுகளுக்கு முன் ஜான் ஸ்டீவர்ட் அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பெண்களைப் போல் ஆண்கள் ஆடை அணிவதாகச் சொல்லி திருநங்கைகளை நகைப்புக்குள்ளாக்கினார். அனைவரும் சிரித்தார்கள். ஜான் ஸ்டீவர்ட் நவீனமானவராகவும் தாராளவாதியாகவும் அறியப்படுபவர்தான். இப்போது அவர் அப்படி செய்தால் Transphobic என்று எல்லாரும் அவர் மீது பாய்ந்திருப்பார்கள். ஏனெனில், இன்று சமூகம் முன்நகர்ந்திருப்பதாகக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில், சரி – தவறு என்ற மதிப்பீடுகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பதாகக் கருதுவது முற்போக்குவாதத்தின் ஓர் அடிப்படை.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (2)

மேற்கத்திய வரலாற்றாசிரியர்கள் ஐரோப்பிய வரலாற்றை செவ்வியல் காலம், மத்திய காலம், நவீன காலம் என மூன்றாக வகைப்படுத்துவார்கள். பண்டைய எகிப்து மற்றும் கிரேக்கம் உள்ளிட்டவற்றின் வரலாறு செவ்வியல் காலத்தைச் சார்ந்தது. 16 – 18ம் நூற்றாண்டு காலப்பிரிவில்தான் மறுமலர்ச்சிக் காலம், அறிவொளிக் காலம் என்பன வருகின்றன. இது நவீன காலமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அப்போது தோன்றிய கருத்தியல்கள் குறித்தே நாம் அதிகம் கரிசனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

மேற்குலக வரலாற்றின் முப்பகுதிகள்:

• செவ்வியல் காலம் கி.பி. 500க்கு முன்
• மத்திய காலம் கி.பி. 500 முதல் கி.பி. 1500 வரை
• நவீன காலம் கி.பி. 1500க்குப் பின்

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (1)

இஸ்லாமிய அழைப்பாளரும், அலஸ்னா நிறுவனத்தின் நிறுவனருமான டேனியல் ஹகீகத்ஜு, இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளின் மீது நவீனத்துவம் தொடுக்கும் தாக்குதல்கள் குறித்து தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருபவர். நாத்திகம், தாராளவாதம், பெண்ணியவாதம், மதச்சார்பின்மைவாதம் போன்ற ஆதிக்கக் கருத்தியல்கள் இவரின் பிரதான பேசுபொருள்களாக விளங்கின்றன. Dark Storms: The Modernist Challenge to Islam எனும் கருப்பொருளில் அவர் வழங்கிய ஆன்லைன் கோர்ஸின் சுருக்கப்பட்ட வடிவமே இந்தத் தொடர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 8

வாழ்வின் இரகசியங்கள் என்றும் முடிவடையாதவை. ஆன்மீகத் தேடல் கொண்டவர்கள் எளிதில் சலிப்படைவதில்லை. ஆன்மீக வாழ்வு லௌகீக வாழ்வு போன்று குறுகியதும் அல்ல. அது எல்லையற்ற பெருவெளி. அங்கு அறிதல்கள் பெருகிக் கொண்டேயிருக்கும். தகவல்கள் மனிதனை எளிதில் சலிப்பில் ஆழ்த்திவிடுகின்றன. அறிதல்கள் அப்படியல்ல. ஒரு ஆன்மீகவாதியால் இறுதிவரை இயங்கிக் கொண்டேயிருக்க முடிகிறது, அவர் மரணத்தின் வாசனையை அருகாமையில் உணர்ந்தாலும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 7

மனிதர்களில் ஒவ்வொருவரையும் ஒருவகையில் அவர் இன்ன இயல்பினர், அவருக்கு இன்னின்ன தனித்தன்மைகள், பலவீனங்கள் இருக்கின்றன, அவர் இப்படித்தான் செயல்படுவார் என்றெல்லாம் மிக எளிதாக வகைப்படுத்திவிடலாம். இந்த வகையில் நாம் அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். அவர்களின் செயல்பாடுகளை சரியாகக் கணிக்கலாம். ஆனால் இன்னொரு வகையில் ஒவ்வொருவரும் ஒரு தனி உலகம். சில சமயங்களில் அவர்கள் நம் கணிப்புகளை, எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி விடுவார்கள். அவர்களின் சில செயல்பாடுகள் நம்மை வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்லலாம் அல்லது பேரதிர்ச்சியில் ஆழ்த்தலாம். இந்த வகையில் மனிதன் ஒரு புரியாத புதிர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் தொடர்கள் 

மனம் என்னும் மாயநதியின் வழியே – 5

நம் உலகம் விசாலமாக விசாலமாக நம் மனதும் விசாலாமாகிக் கொண்டே செல்லும். அது தன்னைச் சுற்றியிருக்கும் சூழலிலிருந்து பெரிதும் தாக்கமடையக்கூடியது. அறிதல்கள் நம் மனதை விசாலமாக்கிக் கொண்டே செல்கின்றன. அந்த அறிதல்களை நாம் பரந்துவிரிந்த இந்த பிரபஞ்ச வெளியிலிருந்தும் பெற முடியும். அது மௌன மொழியில் நமக்கு உணர்த்தும் அறிதல்கள் எண்ணிக்கையற்றவை. அவை மனதின் வெளியை விசாலமாக்கக்கூடியவை.

மேலும் படிக்க