All Posts
விசாரணை சிறைவாசிகளும் மறுக்கப்படும் மருத்துவ உரிமைகளும்
![]()
சிறையில் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். சமூகத்தில் உள்ளவர்கள் பெறும் அதே தரத்திலான சிகிச்சையை சிறைவாசிளும் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சர்வதேச விதிகளும் நீதிமன்ற தீர்ப்புகளும் கூறுகின்றன.
ஆனால் நடைமுறையில் சிறைவாசிகளும் மருத்துவ சிகிச்சை தொடர்ந்து மறுக்கப்படுவதை செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. தண்டனையும் இன்றி விசாரணையும் இன்றி அல்லல்படும் விசாரணை சிறைவாசிகளும் இந்த உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர்.
விசாரணை சிறைவாசிகளுக்கு மறுக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை இந்த கட்டுரை அலசுகிறது.
இந்தியாவில் வெறுப்புக் குற்றங்கள்
ஜூன்– ஆகஸ்ட் 2025க்கான அறிக்கை
![]()
இந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. சிவில் அமைப்புகள் இதனைக் குறித்து தொடர்ந்து அறிக்கை வெளியிடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. சிவில் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு (APCR) ஜூன் முதல் ஆகஸ்ட் 2025 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த வெறுப்புக் குற்றங்கள் குறித்த விபரங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. மத சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் வெறுப்புக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை என்ற அவலத்தையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும் படிக்கமக்காவிலிருந்து மால்கம் எக்ஸ் எழுதிய கடிதம்!
![]()
ஆரம்பத்தில் மால்கம் எக்ஸ் கறுப்பினப் பிரிவினைவாதத்தை ஆதரித்துவந்தார். வெள்ளை இனத்தவர்களுடன் ஒருங்கிணைவதை வெறுத்தார். அகிம்சை முறையை நிராகரித்ததோடு ‘அவசியமான அனைத்து வழிகளிளிலும்’ தற்காப்பை ஊக்குவித்தார். நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் தாக்கத்தால், வெள்ளையர்கள் இயல்பாகவே ஊழல்வாதிகள், தீயவர்கள் என்றும்; கறுப்பின மக்களின் பல்லாண்டுக்காலத் துயரங்களுக்கு அவர்களே காரணம் என்றும் உறுதியாக நம்பினார். இந்தச் சமயத்தில்தான் அவர் ஹஜ் யாத்திரைக்காக மக்காவுக்குப் பயணமானார். ஹஜ்ஜிலிருந்து அவர் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் இது.
மேலும் படிக்கஇந்து முகங்கள், முஸ்லிம் முகமூடி
![]()
டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நாசிக் வழக்கின் பின்னணியில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்ட குற்றமயமாக்கலின் சமூக, பொருளாதார, அரசியல் பாதிப்புகளை இக்கட்டுரை ஆராய்கிறது. குறிப்பாக, முஸ்லிம் அல்லாதவர்கள் செய்யும் குற்றங்களை முஸ்லிம் அடையாளங்களின் கீழ் மறைத்து, ஊடகங்களும் அதிகார அமைப்புகளும் எவ்வாறு ‘முஸ்லிம் குற்றவாளி’ என்ற பிம்பத்தைக் கட்டமைக்கின்றன என்பதை இது விவரிக்கிறது.
மேலும் படிக்கநான் செய்த குற்றம் என்ன? ஷர்ஜீல் இமாம்
![]()
சிஏஏ எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை சிறைவாசியாக ஆறு ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாம் தனது வழக்கு, கைதுக்கு காரணமான உரை, தனது பேச்சிற்காக அவர் வருத்தப்படுகிறாரா உள்ளிட்ட விசயங்களை இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். வேறு சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் தான் இருந்த போதே டெல்லி கலவர வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, தனது குற்றம் என்ன?’ என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.
“எனது நண்பர்கள் என்னிடம் கொஞ்சம் நிதானமாக இருக்குமாறு சொன்னபோது, நான் நேரடியாகவே பதில் கூறினேன். சமூக அறிவியல் மற்றும் இந்தியக் குடியரசில் முஸ்லிம்களின் வரலாறு குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் என்ற முறையில், மக்களுக்காகப் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதன் மூலம் முன்னணியில் நிற்பது நமது பொறுப்பு. நாம் நமது பாதுகாப்பான சூழலிலிருந்து (Comfort zone) வெளியே வர வேண்டும்” என்றார் இமாம்.
எண்ணெய்க்கு கிடைக்கும் மதிப்பு மனித உயிர்களுக்கு கிடைக்குமா?
![]()
இருபது ஆண்டுகளாக ஃபலஸ்தீனின் காஸா பொருளாதார தடையில் சிக்கித் தவித்தாலும் கண்டு கொள்ளாத உலக நாடுகள், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டவுடன் அவசரமாக செயலில் இறங்குகின்றன.
மனிதாபிமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் போது அமைதியும், வர்த்தகம் அச்சுறுத்தப்படும்போது அவசரமும் உடனடியாக வெளிப்படுகிறது. உலகம் தனது மனசாட்சியை சந்தையின் ஓசைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. உலக நாடுகள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதை இது உணர்த்துகிறது.
எந்தவொரு நாகரிகமும் அதன் கருவூலங்களின் செழிப்பையோ அல்லது எண்ணெய் வழித்தடங்களின் பாதுகாப்பையோ கொண்டு மதிப்பிடப்படாது; மாறாக, அது மனித உயிருக்கு அளித்த முக்கியத்துவத்தைக் கொண்டே மதிப்பிடப்படும் என்பதை நாடுகள் உணருமா?
தேர்தல் கணக்குகளுக்கு அப்பால் பாஜக-எதிர்ப்பு அரசியலின் எல்லைகள்
![]()
மேற்கு வங்கம், அஸ்ஸாம் முதலான மாநிலங்களின் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் விவாதங்களில் கவனிக்கத்தக்க விசயம், பாஜக பெற்ற வெற்றியின் அளவு மட்டுமல்ல; அந்த வெற்றியை விளக்குவதற்காக முன்வைக்கப்பட்ட அரசியல் பகுப்பாய்வுகளின் பலவீனமும்தான். மதச்சார்பற்ற மற்றும் மாநில கட்சிகளின் பெரும்பாலான எதிர்வினைகள், வாக்குரிமை பறிப்பு குறித்த குற்றச்சாட்டுகளையே மையமாகக் கொண்டிருந்தன.
ஆனால், தற்போதைய அரசியல் நெருக்கடி என்பது வெறும் வாக்குரிமை பறிப்பு சார்ந்தது மட்டுமல்ல. ‘இந்தச் சூழல், எதிர்க்கட்சி அரசியலின் தற்போதைய நிலையைப் பற்றி எதை வெளிப்படுத்துகிறது?’ என்பது அதைவிட முக்கியமான கேள்வியாகும்.
‘ஜனநாயகம் எவ்வாறு பலவீனப்படுத்தப்பட்டது?’ என்பதை விட,‘இந்துத்துவ அரசியலின் வீச்சை எதிர்கொள்ளக்கூடிய வலிமையான மக்கள் ஒற்றுமையையும், புதிய அரசியல் நம்பிக்கையையும் உருவாக்குவதில் மதச்சார்பற்ற மற்றும் மாநில அரசியல் ஏன் தோல்வியடைந்துள்ளது?’ என்பதே இந்தத் தேர்தல்களுக்குப் பின் எழவேண்டிய உண்மையான கேள்வியாகும்.
திமுகவின் கொடுங்கனவான பிம்பச் சிறை
![]()
தமிழ்நாடு அரசியலுக்கும் கலைத் துறைக்குமான தொடர்பு காற்றுக்கும் மரத்துக்கும் உள்ள தொடர்பை ஒத்தது. அமெரிக்க நடிகர் ரொனால்ட் ரீகனுக்குப் பிறகு திரைத் துறையை அரசியலுக்கு கச்சிதமாகப் பயன்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம். அண்ணா, கருணாநிதியின் அர்த்தம் பொதிந்த ஆழமான அரசியல் வசனங்கள், அதனை திரையில் பிரதிபலித்த எம்ஜிஆர் உள்ளிட்ட நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு என திராவிட அரசியலின் வளர்ச்சியில் திரைத் துறையின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.
வெண் திரை என்ற மாயச் சுவரில் தோன்றி மறையும் கதாபாத்திரங்களை அச்சு அசல் மனிதர்களாக நம்பும் குணம் இப்போதும் தமிழக மக்களின் நனவிலியில் ஆழப்பதிந்துள்ளது. அதை அறியாமை என்று விலக்கிவிட்டு நகர்ந்து செல்ல முடியாது. அந்த அறியாமை ஆட்சி மாற்றத்துக்கு இட்டுச் செல்லும் – இட்டுச் சென்ற வரலாறுதான் தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு.
ஃபலஸ்தீனின் குழந்தைகள்
![]()
ஃபலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலை அங்குள்ள குழந்தைகள் உடல், மன, மற்றும் உள ரீதியாக கடுமையாக பாதித்துள்ளன. தாங்கள் ஃபலஸ்தீனில் பிறந்த ஒரே காரணத்திற்காகவே படுகொலை செய்யப்படுகிறோம் என்பதை உறுதியாக நம்பும் அந்த குழந்தைகள் சர்வதேச சமூகம் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
எத்தனை பிரச்சகைள் வந்தாலும் அது எந்த ரூபத்தில் வந்தாலும் அவை அனைத்தையும் கடந்து ஃபலஸ்தீன மக்கள் உறுதியாக உள்ளார்கள் என்று அவர்களை புகழ்வது சர்வதேச சமூகத்தின் வழமையாக மாறியுள்ளது. ஆனால், இந்த புகழ்ச்சிக்கு பின்னால் நமது கையாளாகாத தன்மையும் மறைந்துள்ளதை வசதியாக மறந்து விடுகிறோம்.
