எழுபத்தைந்து வருட ஓட்டமென்பது இரு தலைமுறைக் காலங்களையும் தாண்டிய ஒன்று. அத்தகைய நெடிய காலத்தை வெறும் எண்களுக்குள் குறுக்கிவிட இயலாத அளவிற்கு நிகழ்வுகளும் படிப்பினைகளும் ஈகங்களும் நிறைந்த வாழ்க்கை கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்வுடையது.
பல நாடுகளையும் நாட்டுத் தலைவர்களையும் அச்சுறுத்திவரும் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், ஸியோனிச இஸ்ரேலுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் இமாம் அலீ ஃகாமினயீ. அவர் இமாம் ஃகுமைனீயை அடுத்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசை 35 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தியவர் ஆவார்.
அலீ ஃகாமினயீயின் ஷஹாதத் உறுதிசெய்யப்பட்டதும், டிரம்பும் நெதன்யாஹுவும் ‘ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்கக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு’ என வெற்று கோஷம் முழக்கினர். அதேபோல், மக்களும் நாட்டை மீட்டெடுக்கத் தெருக்களில் கூடினர்; ஆனால் தற்போதைய அரசிடமிருந்தல்ல. மாறாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசை அழிக்கத் துடிக்கும் அமெரிக்க-இஸ்ரேல் ஸியோனிஸ்டுகளிடமிருந்து. ஃகாமினயீயின் ஷஹாதத்திற்குத் துக்கம் அனுசரித்துத் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியவாறே ‘அமெரிக்கா செத்தொழியட்டும்’ (Death to America) என்று மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.
ரஹ்பர் ஃகாமினயீ ஈரானை ஷா மன்னரின் கோரப் பிடியிலிருந்து மீட்டு, ஒரு பிராந்திய சக்தியாக மாற்றி, ஃபலஸ்தீன் விவகாரத்தை அதன் மூலோபாயக் கொள்கையின் மையமாக வைத்தவர். நவீன ஈரானை நீண்டகாலம் திறம்பட நிர்வகித்த தீரமிக்க தலைவர். அவரின் இந்த அரும்பணி பல தசாப்தங்களுக்கு மக்களின் நினைவுகளில் ஆழப் பதிந்திருக்கும். இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக!
இன்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் இரவு நேரச் செய்தி விவாதங்களில் காலித்தின் பெயரைத் தூற்றி, அவரை ஒரு முஸ்லிம் பயங்கரவாதி என்றும், தேச விரோதி என்றும் முத்திரை குத்துகின்றனர். மறுபுறம், இடதுசாரி ஆர்வலர்கள் தங்களின் போராட்டங்களில் அவரது பெயரை முழங்குவதோடு, அவரது முகம் பொறித்த டி-சர்ட்டுகளையும் அணிந்து கொள்கின்றனர்.
ஆறு ஆண்டுகளாக டெல்லி திஹார் சிறையில் விசாரணையும் இன்றி பிணையும் இன்றி அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், தனது சிறை அனுபவங்களை ‘தி கார்டியன்’ இதழுக்கு வழங்கிய பேட்டியின் மூலம் பகிர்ந்துள்ளார்.
திரையுலகில் முஸ்லிம்களை பெரும்பாலும் எதிர்மறையாக சித்தரிக்கும் நிலையில், அசல் தன்மையுள்ள கதைகளையும் கதை மாந்தர்களையும் பொது சமூகத்திற்கு அப்பட்டமாக ஒரு இருட்டு அறையில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.
ஹபீபி தமிழ் சினிமாவில் ஒரு நல்ல தொடக்கமாகட்டும். ஹபீபியின் கரங்களை பற்றிக் கொண்டு நட்பு பாராட்ட ஓராயிரம் விரல்கள் வரட்டும். உலக அரங்கில் அவ்விரல்கள், அக்கரங்கள் நமது வாழ்வியலின் காத்திரமான கதைகளுக்காக கரவொலி எழுப்பட்டும்.
டைனோர்சர்களை அழித்த விண்கற்களின் தாக்குதல் உட்பட பல பேரழிவுகளில் இருந்து தப்பித்த உயிரினங்களில் ஒன்று கரப்பான்பூச்சி. ஒவ்வொரு நிலப்பரப்பின் சூழலுக்கும் ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் இந்த உயிரினத்தின் திறன் அபாரமானது.
இந்திய இளைஞர்களை குறிப்பிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு எதிரொலியாக கரப்பான்பூச்சியின் பெயரால் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இணையத்தை பயன்படுத்தி பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் செல்வாக்கை பெற்று வரும் இந்த அணி, யாரை குறிவைத்து, எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தோற்றப் பின்னணியையும் அதன் செயல்பாட்டு முறையையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.
‘வெனிசுலா மாதிரி’யை அப்படியே மீட்டுருவாக்கம் செய்து அதன் மூலம் ஈரான் தலைமைத்துவத்தின் அரசியல், ராணுவ நடத்தைகளை மாற்ற வேண்டும் அல்லது ஒட்டுமொத்தமாக வீழ்த்த வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டம் முற்றிலும் சிதைந்துள்ளது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் காத்திரத் தன்மையும் அதன் கருத்தியல் பலமுமே அமெரிக்காவின் இத்தோல்விக்கான காரணமாகும்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் சமீபத்திய கூட்டு இராணுவ நடவடிக்கைகள் முழுமையான தோல்வி என்பதோடு, அவை ஈரானை அச்சுறுத்துவதிலும் பின்னடையச் செய்வதிலும் வெற்றி பெறவில்லை; அதிகாரச் சமநிலையை மாற்றியமைக்கவும் இல்லை. மாறாக, இஸ்ரேலை மிகப் பலவீனமான ஒரு வியூகம்சார் நிலைப்பாட்டுக்கே அவை தள்ளியுள்ளன.
இங்கே காணலாம் எல்லோரும்
என்ன ஆயிற்று எனக்கு என்று
ஹுசைனை இந்த மிருக நகங்கள் கிழிப்பதை
மனித குலத்தின் சிகர நபி சகிப்பார்களா?
அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
இறைவனின் திருத்தூதரின் மீதும்
அபூ தாலிபின் மகனான அலீயின் மீதும்
பரிசுத்த ஃபாத்துமத்துஸ் ஸஹ்றா மீதும்
நற்குண நாயகராம் என் அண்ணன்
ஹசன் அல்முஜ்தபா மீதும்…
என் சகோதரனே!
குதிரைகள் என் நெஞ்சின் மீது
ஏறி மிதிப்பதைப் பார்த்தீரே, எப்படி இருந்தது?
ஹிஜ்ரத் என்பது வெறும் இடம்பெயர்வோ அல்லது ஒரு இடத்தில் இருந்து தப்பித்துச் செல்லும் நிகழ்வோ அல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் உலகை மாற்றி அமைக்கும் பெரும் சக்தியாக மாறுவதற்கான மாபெரும் பாய்ச்சலாக அது அமைந்தது.
அதிகாரத்தின் நிழலில் நின்று அக்கிரமத்தையும் அநீதியையும் மேற்கொண்டவன் இறைநம்பிக்கையின் வலிமையோடு அழிக்கப்பட்டது முஹர்ரம் மாதத்தில்தான்.
சர்வாதிகாரத்தை தீர்க்கமாக எதிர்கொண்ட கர்பலா நிகழ்ந்ததும் இதே மாதத்தில்தான்.
கண்ணீர் சிந்துவதற்காக அல்ல, மாறாக, வரலாற்றை நெறிமுறை சார்ந்த வீரத்தோடு எதிர்கொள்ளும் பாடங்களையே ஹிஜ்ரத்யும் முஹர்ரமும் நமக்கு கற்றுத் தருகின்றன என்பதை விவரிக்கும் கட்டுரை.
தென்கிழக்காசியச் சூழலில் இஸ்லாமியச் சிந்தனையின் போக்குகளை ஆய்வுசெய்ய வேண்டுமென்ற கருத்துகள் பலமடையும் சூழலிலேயே பேராசிரியர் ஃகைருத்தீன் ஜுனைது தனது Shapers of Islam in Southeast Asia என்று நூலை வெளியிட்டுள்ளார். இவர் தென்கிழக்காசிய இஸ்லாமியச் சிந்தனை மரபு தொடர்பான ஆய்வுப்புல உரையாடல்களில் பிரதான விற்பன்னராகக் கருதப்படுபவர். அறிவுசார் வரலாற்றாசியர் (Intellectual Historian). சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகம், அமெரிக்க ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியாகப் பணியாற்றியவர். தென்கிழக்காசியச் சூழலில் இஸ்லாம் பற்றிய விரிவான பல நூல்களை எழுதியுள்ளார்.
சிறையில் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். சமூகத்தில் உள்ளவர்கள் பெறும் அதே தரத்திலான சிகிச்சையை சிறைவாசிளும் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சர்வதேச விதிகளும் நீதிமன்ற தீர்ப்புகளும் கூறுகின்றன.
ஆனால் நடைமுறையில் சிறைவாசிகளும் மருத்துவ சிகிச்சை தொடர்ந்து மறுக்கப்படுவதை செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. தண்டனையும் இன்றி விசாரணையும் இன்றி அல்லல்படும் விசாரணை சிறைவாசிகளும் இந்த உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர்.
விசாரணை சிறைவாசிகளுக்கு மறுக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை இந்த கட்டுரை அலசுகிறது.