கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அலீ ஃகாமினயீ: இஸ்லாமிய ஈரானைச் செதுக்கிய சிற்பி

Loading

பல நாடுகளையும் நாட்டுத் தலைவர்களையும் அச்சுறுத்திவரும் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், ஸியோனிச இஸ்ரேலுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் இமாம் அலீ ஃகாமினயீ. அவர் இமாம் ஃகுமைனீயை அடுத்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசை 35 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தியவர் ஆவார்.

அலீ ஃகாமினயீயின் ஷஹாதத் உறுதிசெய்யப்பட்டதும், டிரம்பும் நெதன்யாஹுவும் ‘ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்கக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு’ என வெற்று கோஷம் முழக்கினர். அதேபோல், மக்களும் நாட்டை மீட்டெடுக்கத் தெருக்களில் கூடினர்; ஆனால் தற்போதைய அரசிடமிருந்தல்ல. மாறாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசை அழிக்கத் துடிக்கும் அமெரிக்க-இஸ்ரேல் ஸியோனிஸ்டுகளிடமிருந்து. ஃகாமினயீயின் ஷஹாதத்திற்குத் துக்கம் அனுசரித்துத் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியவாறே ‘அமெரிக்கா செத்தொழியட்டும்’ (Death to America) என்று மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.

ரஹ்பர் ஃகாமினயீ ஈரானை ஷா மன்னரின் கோரப் பிடியிலிருந்து மீட்டு, ஒரு பிராந்திய சக்தியாக மாற்றி, ஃபலஸ்தீன் விவகாரத்தை அதன் மூலோபாயக் கொள்கையின் மையமாக வைத்தவர். நவீன ஈரானை நீண்டகாலம் திறம்பட நிர்வகித்த தீரமிக்க தலைவர். அவரின் இந்த அரும்பணி பல தசாப்தங்களுக்கு மக்களின் நினைவுகளில் ஆழப் பதிந்திருக்கும். இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக!

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கண்ணியம், சுயாதீனம், சுய நிர்ணய உரிமையுடன் ஆதிக்கத்தை நிறுவிய ஈரான்!

Loading

‘வெனிசுலா மாதிரி’யை அப்படியே மீட்டுருவாக்கம் செய்து அதன் மூலம் ஈரான் தலைமைத்துவத்தின் அரசியல், ராணுவ நடத்தைகளை மாற்ற வேண்டும் அல்லது ஒட்டுமொத்தமாக வீழ்த்த வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டம் முற்றிலும் சிதைந்துள்ளது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் காத்திரத் தன்மையும் அதன் கருத்தியல் பலமுமே அமெரிக்காவின் இத்தோல்விக்கான காரணமாகும்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் சமீபத்திய கூட்டு இராணுவ நடவடிக்கைகள் முழுமையான தோல்வி என்பதோடு, அவை ஈரானை அச்சுறுத்துவதிலும் பின்னடையச் செய்வதிலும் வெற்றி பெறவில்லை; அதிகாரச் சமநிலையை மாற்றியமைக்கவும் இல்லை. மாறாக, இஸ்ரேலை மிகப் பலவீனமான ஒரு வியூகம்சார் நிலைப்பாட்டுக்கே அவை தள்ளியுள்ளன.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

எண்ணெய்க்கு கிடைக்கும் மதிப்பு மனித உயிர்களுக்கு கிடைக்குமா?

Loading

இருபது ஆண்டுகளாக ஃபலஸ்தீனின் காஸா பொருளாதார தடையில் சிக்கித் தவித்தாலும் கண்டு கொள்ளாத உலக நாடுகள், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டவுடன் அவசரமாக செயலில் இறங்குகின்றன.
மனிதாபிமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் போது அமைதியும், வர்த்தகம் அச்சுறுத்தப்படும்போது அவசரமும் உடனடியாக வெளிப்படுகிறது. உலகம் தனது மனசாட்சியை சந்தையின் ஓசைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. உலக நாடுகள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதை இது உணர்த்துகிறது.
எந்தவொரு நாகரிகமும் அதன் கருவூலங்களின் செழிப்பையோ அல்லது எண்ணெய் வழித்தடங்களின் பாதுகாப்பையோ கொண்டு மதிப்பிடப்படாது; மாறாக, அது மனித உயிருக்கு அளித்த முக்கியத்துவத்தைக் கொண்டே மதிப்பிடப்படும் என்பதை நாடுகள் உணருமா?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஈரானிய ஏவுகணைத் துறையின் தந்தை
முஸ்லிம் பலவீனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்

Loading

“லெபனானில் வடக்கிலிருந்து தெற்குவரை, தெற்கிலிருந்து வடக்குவரை பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் பாதுகாப்புக்காக ஹஸன் தெஹ்ரானி மொகதாமுக்கு கடமைப்பட்டுள்ளனர்” என்று ஹிஸ்புல்லாஹ் பொதுச் செயலாளர் ஸய்யித் ஹஸன் நஸ்ரல்லாஹ் வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.
ஹிஸ்புல்லாஹ் தலைவரின் பாராட்டைப் பெற்ற, ‘ஈரான் ஏவுகணை திட்டத்தின் தந்தை’ என்ற சிறப்பு பெயரையும் பெற்ற ஹஸன் தெஹ்ரானி முகத்தம் குறித்த பார்வை.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஈரான் – அமெரிக்கா / இஸ்ரேல் போர்: யார் கை ஓங்குகிறது ?

Loading

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அமெரிக்கா தனது இலக்குகளை அடைந்துள்ளதா? பொருளாதார ரீதியாக ஈரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அமெரிக்காவை பாதிக்குமா? நடைபெறும் இந்த போரில் யாரின் கை மேலோங்கியுள்ளது? விளக்கங்களை அளிக்கிறது இந்த கட்டுரை.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஈரானின் நிழல் இராணுவம்

Loading

ஈரானின் நிழல் இராணுவமாக செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் தோற்றம், கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த சுருக்கமான பார்வை

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

இந்திய – இஸ்ரேல் உறவு

Loading

ஃபலஸ்தீன விவகாரத்தில் இந்தியா இரு தேசத் தீர்வை ஆதரிப்பதாகக் கூறினாலும், உறவு இஸ்ரேலுடன் மிக நெருக்கமாக ஆகியிருக்கிறது. குறிப்பாக, ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்காவின் தற்போதைய தாக்குதல்களையோ, ஆயதுல்லாஹ் ஃகாமினயீயின் கொலையையோ இந்தியா கண்டிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சின்வாரின் கைத்தடி!

Loading

“உயிர்த் தியாகிகள் சிந்திய ரத்தத்திற்கு உண்மையாளர்களாக இருங்கள். சுதந்திரத்திற்காக பாதை அமைத்த அவர்களின் தியாகங்களை அரசியல் லாபங்களுக்காக வீணாக்கிவிடாதீர்கள். நமது முன்னோர்கள் தொடங்கியதை முடிப்பது நமது வேலை. விலை எவ்வளவு இருந்தாலும் இந்தப் பாதையை விட்டும் தவறிவிடாதீர்கள். இந்த நிலம் நமக்கு எவ்வளவு குறுகியதாக இருந்தாலும் இப்போதும் எப்போதும் உறுதியின் உறைவிடமாக காஸா இருக்கும்.” – யஹ்யா சின்வார்

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்மாயில் ஹனிய்யா கொல்லப்படக் காரணம் என்ன?

Loading

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 10 மாதத்துக்குள் இஸ்மாயில் ஹனிய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் 60 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்கூட ஃகஸ்ஸாவில் இருந்த அவரின் மூன்று மகன்களைக் கொன்றது இஸ்ரேல்.

இப்போது இஸ்மாயில் ஹனிய்யா ஷஹீதாகியிருக்கிறார். இதற்குக் காரணம் என்னவென்று பலருக்கும் கேள்வி இருக்கும். குறிப்பாக இதற்கு 4 காரணங்களைச் சொல்லலாம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்மாயில் ஹனிய்யாவின் உயிர்த் தியாகமும், ஃபலஸ்தீனப் போராட்டத்தின் எதிர்காலமும்

Loading

ஜூலை 31 நள்ளிரவில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் இயக்க அரசியல் பிரிவுத் தலைவரும் ஃபலஸ்தீனின் முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹனிய்யா படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலைக்கு இஸ்ரேல் பொறுப்பு ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆனால், ஹனிய்யாவை படுகொலை செய்தது இஸ்ரேல்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

மேலும் படிக்க