கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிப்பது ஏன்?

Loading

பல ஆண்டுகளாக அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இஸ்ரேல் இருப்பது நமக்குத் தெரியும். அதிலும் காஸா மீது இஸ்ரேல் அரசு இனப்படுகொலையை நிகழ்த்தும்போது அமெரிக்கா அதற்கு பக்கபலமாக நின்று எந்த அளவுக்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் அளிக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். 1948ல் இஸ்ரேல் எனும் நாடு உருவான சமயம் தொட்டு (75 ஆண்டுகளாக) இரு நாடுகளுக்கும் மத்தியில் மிக பலமான உறவு இருந்துவருகிறது. இந்த உறவு வலுவாக இருப்பதற்கு 4 முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.

மேலும் படிக்க
காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

சவூதி அறபியா ஃபலஸ்தீனுக்கு முழு ஆதரவு வழங்காதது ஏன்?

Loading

1973ல் அறபு-இஸ்ரேல் போர் நடந்தபோது சவூதியை ஆட்சிபுரிந்த மன்னர் ஃபைசல் எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்து அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மிகப் பெரும் அழுத்தத்தைக் கொடுத்தார். அது அவர்களுக்கு பொருளாதார ரீதியான அடியைக் கொடுத்தது. உலக அரங்கில் இஸ்ரேலைத் தனிமைப்படுத்தியது. இதுபோல் ஒரு சரியான, தாக்ககரமான நடவடிக்கையை MBS எடுப்பாரா என்பது கேள்விக்குறிதான்.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஃபலஸ்தீன்-இஸ்ரேல் தற்காலிகப் போர் நிறுத்தம்: விளைவுகள் என்ன?

Loading

இந்தத் தாக்குதல் யாருக்குச் சாதகமாக அமைந்தது என்பதைக் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையைக் கொண்டு கூற இது ஒன்றும் கிரிக்கெட் போட்டி அல்ல. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இதில் இஸ்ரேல் மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதே உண்மை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஆணவத்திலிருந்து அவமானம் வரை: இஸ்ரேலை உலுக்கிய அந்த பத்து மணிநேரம்

Loading

இஸ்ரேலுக்கு ஏற்பட்ட சேதம் அதன் உளவு மற்றும் இராணுவத் துறைகளின் தோல்விக்கும் அப்பாற்பட்டது; இஸ்ரேலுக்கு இதுவோர் அரசியல், உளவியல் பேரழிவு ஆகும். வெல்ல முடியாத அரசு என்று மார்தட்டிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு, இத்தாக்குதல் அதன் பலவீனத்தையும் படுமோசமான இயலாமையையும் காட்டியுள்ளது. ஃபலஸ்தீனை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டு, மத்தியக் கிழக்கு பகுதிக்கு தன்னை புதிய தலைமையாக ஆக்கிக்கொள்வதற்கான அதன் திட்டங்களுக்கும் இது பேரிடியாய் அமைந்துள்ளது.

மேலும் படிக்க
bulldozer politics bjp tamil afreen fatima கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புல்டோசர் பயங்கரவாதம்: இஸ்ரேலைப் பின்பற்றும் இந்தியா

Loading

உலகிலேயே சட்ட விதிகளை மீறி சிறுபான்மையினர் வீடுகளைத் தகர்ப்பது இரண்டே நாடுகள்தான்; ஒன்று இஸ்ரேல், மற்றொன்று இந்தியா என்கிறார்கள். ஒரு நாடாக இந்தியாவுக்கு இது எவ்வளவு பெரிய அவமானம்? இந்தியர்கள் வெட்கித் தலைகுனியத்தான் வேண்டும்.

இந்து ராஷ்டிர கனவில் மிதக்கும் சங் பரிவாரம் முஸ்லிம்களை அதன் முதன்மை இலக்காக்கி தன் பாசிச செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாட்டில் மத ரீதியாக பதற்ற நிலை ஏற்பட்டால் அதை அருவடை செய்து பெரும் அரசியல் லாபமடைவது பாஜகதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு எனப் பல பிரச்னைகள் இந்தியாவை சூழ்ந்துள்ளன. இந்திய மக்கள் வெறுப்பரசியலுக்கு இனியும் இடமளித்தால் இன்னொரு இலங்கையாக இந்தியா மாறக்கூடும் என்று எச்சரிக்கிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

என்ன நடக்கிறது ஃபலஸ்தீனில்?

Loading

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான அல்அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ள நிலமான ஃபலஸ்தீன், இஸ்லாமிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவமும் தனிச்சிறப்பும் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். இப்ராஹீம், லூத், தாவூத், சுலைமான், மூஸா, ஈஸா (அலை) உள்ளிட்ட இறைத்தூதர்களின் பிறப்பு அல்லது இறப்பு இம்மண்ணில்தான் நிகழ்ந்துள்ளது. ’இறைத்தூதர்களின் பூமி’ எனும் புகழுக்குரிய ஃபலஸ்தீனில் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் இருப்பது தொட்டு அங்கிருந்து நபிகள் நாயகம் (ஸல்) விண்ணுலகப் பயணம் மேற்கொண்டது வரை அதை மிகுந்த சிறப்புமிக்கதாய் ஆக்கியிருக்கிறது.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

யாத் வஷேம்: வேர்களைத் தேடி…

Loading

உலர்ந்த, வற்றிய சருகுகள்தான் நெருப்பை விழுங்குகின்றன. எல்லோரும் கூடி வாழும் ஒரு நாட்டில் ரத்தமும் சதையுமாய் ஊனும் நிணமுமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதத் தொகையினரை எல்லோரையும் சாட்சியாக்கிக் கொன்றொழிக்க எப்படி முடிகிறது? அதைத்தான் இந்த நாவல் கேள்விகளாக்கி, கள்ள மௌனம் சாதிக்கும் பெரும்பான்மையினரின் முகத்திற்கு நேரே நீட்டுகிறது.

மேலும் படிக்க