கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாடு முஸ்லிம் அரசியல்: சவால்களும் வாய்ப்புகளும்
2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து கவனப்படுத்தும் ஆய்வறிக்கை

Loading

ஏறத்தாழ ஆறு சதவிகித மக்கள் தொகை கொண்ட தமிழக முஸ்லிம்கள் தேர்தல் அரசியலில் தங்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை எப்போதும் பெற்றதில்லை என்பதை தரவுகள் தெரிவிக்கின்றன. சமூக நீதி, மதச்சார்பின்மை, எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய கொள்கைகள் முன்வைக்கப்பட்டாலும் அரசியலில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இங்கும் வழங்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. இந்தியாவின் ஏனைய மாநிலங்களை விட சமூக களத்தில் முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருந்தாலும் அரசியல் களத்தில் ஏனைய மாநிலங்களின் நிலைதான் தமிழ்நாட்டிலும் நீடிக்கிறது.
முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான குரல்கள் ஒலித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் முஸ்லிம் கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர்களுக்கான வாய்ப்புகளையும் இந்த கட்டுரை பேசுகிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஈரானின் நிழல் இராணுவம்

Loading

ஈரானின் நிழல் இராணுவமாக செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் தோற்றம், கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த சுருக்கமான பார்வை

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பத்ரு தரும் படிப்பினைகள்

Loading

முஸ்லிம்கள் சந்தித்த முதல் போர் என்று வர்ணிக்கப்படும் பத்ர் போர் ஏராளமான படிப்பினைகளை விட்டுச் சென்றது. இறை நம்பிக்கை, தலைமைத்துவம், மன உறுதி, அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பது என றமளான் மாதம் நடைபெற்ற இந்த போர் தரும் பாடங்களை விவரிக்கிறது இந்த கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் எங்கே?

Loading

அடையாளம், சமத்துவம், பாதுகாப்பு என அனைத்து கிளைப் பிரச்சனைகளுக்கும் நாம் தனித் தனியாக தீர்வை தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவை அனைத்திற்கும் சர்வ ரோக நிவாரணியாக அரசியல் அதிகாரம் இருக்காது என்றாலும் இதில் பெரும்பான்மை பிரச்சனைகளுக்கு அது தீர்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால்தான் அரசியல் அதிகாரம் அவசியம் என்று வாதிடுகிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புதிய பாதைகளை உருவாக்கும் வங்கதேசத் தேர்தல்

Loading

ஜென் ஸீக்கள் தொடங்கிய போராட்டம் நாற்பது ஆண்டுகள் வங்கதேச அரசியலில் முக்கிய அங்கமாக இருந்த ஷேக் ஹஸீனாவை நாட்டை விட்டும் வெளியேற்றியது. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளும் நிலையற்ற அரசாங்கங்களும் கொண்ட வங்கதேசத்தில் இன்று உருவாகியுள்ள புதிய அரசாங்கம் ஜனநாயகத்தின் திருப்புமுனையாக அமையுமா? வங்கதேச வரலாற்றுப் பின்னணியுடன் சமீபத்திய தேர்தல்குறித்த பகுப்பாய்வை இந்தக் கட்டுரை வழங்குகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நாய்களுக்கு கிடைக்கும் நீதி, செயற்பாட்டாளர்களுக்கு இல்லை!

Loading

2020 டெல்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் ஒன்பது பேரின் ஜாமீன் மனுக்களை செப்டம்பர் 2ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, அந்த உள்ளார்ந்த அநீதிக்கு எதிராகக் கண்டனக் குரல் எழும் என்று நினைத்தேன். ஆகஸ்ட் 11ஆம் தேதி டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள நகரங்களின் மாநகராட்சி அதிகாரிகள், தங்கள் பகுதிகளில் இருந்து தெருநாய்களை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மக்கள் வெளிப்படுத்திய கோபத்திலிருந்து எனக்கு இந்த நம்பிக்கை பிறந்தது. ஆனால், என் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. ‘முஸ்லிம்களை விட நாய்களுக்கு நீதி கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது’ — கசப்பினால் மட்டும் நான் இவ்வாறு கூறவில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

யுஏபிஏ வழக்குகள்: முடிவில்லா விசாரணைகள்

Loading

பிணை இன்றி நீண்டகாலச் சிறைவாசம், நீண்டகாலச் சிறைவாசத்திற்குப் பின் விடுதலை என்று யுஏபிஏ பலரின் வாழ்க்கையைச் சீரழித்துவந்தாலும் அரசியல்வாதிகள் இதில் உரிய அக்கறை காட்டுவதில்லை. பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என யாரும் இதில் விதிவிலக்கில்லை. பண மோசடி வழக்கை எதிர்த்துக் குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் யுஏபிஏ வழக்குகளில் பெரும்பாலும் வாய் திறப்பதில்லை.

பயங்கரவாதக் குற்றச்சாட்டு, பிணை மறுப்பு, நீண்டகாலச் சிறைவாசம், பல்லாண்டுகளுக்குப் பின்னர் விடுதலை, மறுக்கப்படும் நிவாரணம், பொருளாதார மற்றும் சமூகச் சிக்கல்கள், உள மற்றும் மன ரீதியான பாதிப்புகள் என யுஏபிஏ வழக்குகள் பலரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிவரும் நிலையில் அதனைக் குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் சமூகத்தில் எழுவது அவசியமாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

பயத்தால் மௌனிக்கப்பட்டவர்கள்
இந்தியாவில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் நெருக்கடி

Loading

இந்திய முஸ்லிம்கள் தங்களுக்கான சொந்தக் குரலைக் கொண்டிருப்பதற்குப் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. உலக அளவிலும் இதே நிலைதான். உதாரணமாக, தேசியவாதத்தை எதிர்த்து ஒரு முஸ்லிம் கருத்து தெரிவித்தால், அவன் தீவிரவாதி அல்லது பிரிவினைவாதி என்று முத்திரை குத்தப்படுகிறான். இதுபோன்ற முத்திரைகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக, முஸ்லிம் அல்லாதவர்களை மேற்கோள் காட்டியே தங்கள் கருத்துகளை நியாயப்படுத்தும் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த வகையில், கூட்டணிகளை அமைத்தே தீர வேண்டுமென அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

மேலும் படிக்க
நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

தனிமையில் என் புத்தகங்களுடன்…
சிறையிலிருந்து ஷர்ஜீல் இமாம்

Loading

எழுத்துப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பிரத்யேக நேர்காணலில், திகார் மத்திய சிறையில் இருக்கும் 37 வயதான ஷர்ஜீல் இமாம் தனது சிறைவாசம், வாசிக்கும் புத்தகங்கள், சக கைதிகள், தனது பூனை நண்பர்கள் ஆகியோர் பற்றித் தம்முடைய எண்ணங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். வெளியுலக நிகழ்வுகளுடன் இணைய விரும்பும் அவர் தனது தாயின் உடல்நிலை குறித்துக் கவலையை வெளிப்படுத்துகிறார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து வியப்பும் உற்சாகமும் அடைந்துள்ளார். தனது முனைவர் பட்டத்தை நிறைவுசெய்ய முடியுமென்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு காஸா குழந்தையின் உயில்!

Loading

“நான் உயிர்த் தியாகி ஆகிவிட்டால் அல்லது மரணித்துவிட்டால் இது எனது உயில்: எனக்காக நீங்கள் அழ வேண்டாம்; ஏனென்றால் உங்கள் அழுகை எனக்கு வலி தருகிறது. என் உடைகள் தேவையுடையவர்களுக்குக் கொடுக்கப்படும் என்று நம்புகிறேன். என் பொருட்கள் றஹஃப், சாரா, ஜூடி, லானா, பதூல் ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். என்னுடைய மணிகளை அஹ்மதுக்கும் றஹஃபுக்கும் கொடுத்துவிடுங்கள். எனது மாதாந்திரத் தொகை 50 ஷெகல்களில் 25ஐ றஹஃபிற்கும், 25ஐ அஹ்மதுக்கும் கொடுக்க வேண்டும். என்னுடைய கதைப் புத்தகங்களையும் பாடப் புத்தகங்களையும் றஹஃபிற்கும், விளையாட்டுச் சாமான்களை பதூலிற்கும் கொடுத்துவிடுங்கள். என் சகோதரன் அஹ்மதைத் திட்ட வேண்டாம். தயவுசெய்து என்னுடைய இந்த விருப்பங்களை நிறைவேற்றுங்கள்.”

மேலும் படிக்க