கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவராக ஃகலீல் அல்ஹய்யா

Loading

1948 நக்பா (பேரழிவு) நிகழ்விற்குப் பிறகு மிகப்பெரும் சவாலை ஃபலஸ்தீன மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் அதன் பிரதான போராட்ட இயக்கமான ஹமாஸ் இயக்கத்தின் புதிய தலைவராக கலீல் அல் ஹய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடும் நெருக்கடிகளையும் புதிய சவால்களையும் எதிர்நோக்கும் காலத்தில் கலீல் அல் ஹய்யா இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் முன்னணி நாடாக ஈரான் உருவெடுத்துள்ள நிலையில் ஈரான் ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட அல் ஹய்யாவின் தலைமையில் இயக்கத்தின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நியாயமான கோபம் எப்போது தார்மீகக் கடமையாகிறது?

Loading

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், அடக்கி ஆள வேண்டும் என்று போதனை செய்யும் இஸ்லாம், அநீதிக்கும் வரம்பு மீறலுக்கும் எதிராக கோபம் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. கோபம் அதன் சரியான வடிவத்தில் இருக்கும்போது இயற்கையானது மட்டுமல்ல, உன்னதமானதுமாகும்.

நமது இறைநம்பிக்கையில் வேரூன்றிய, நம் நெறிமுறைகளால் வழிநடத்தப்படும், கண்ணியம் என்பது சிலருக்கு மட்டுமான சலுகை அல்ல — அது அனைவருக்கும் உரிய உரிமை என்பதை உறுதி செய்யும் ஓர் உலகத்தை நோக்கிய கோபமே நமக்குத் தேவை.

ஃபலஸ்தீன நிகழ்வுகளை மையமாக வைத்து இச்சிறிய, ஆனால் முக்கியமான பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது இக்கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கமால் மௌலா: கோயிலாக மாற்றப்பட்ட பள்ளிவாசல்!

Loading

மத்திய பிரதேசத்தில் பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கமால் மௌலா பள்ளிவாசல், உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் தெளிவான வழிகாட்டல்கள் உள்ள போதும், பள்ளிவாசல்களுக்கான உரிமை கோரல்களை இந்து வலதுசாரிகள் தொடர்ந்து முன்வைக்கின்றனர். நீதிமன்றங்களும் அவற்றை அனுமதிக்கின்றன.

‘வழிபாட்டுத் தலங்கள் சட்டம் முறையாக பின்பற்றப்படும்’ என்று பாபரி பள்ளிவாசல் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியதை மிகப்பெரும் கேடயமாக நம்பியிருக்கும் முஸ்லிம்களுக்கு இத்தகைய தீர்ப்புகள் அதிர்ச்சியையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றன.

நீதியை நிலைநாட்டி, முஸ்லிம்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதில் நீதித்துறைக்கு மிகப்பெரும் பொறுப்பு உள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

விசாரணை சிறைவாசிகளும் மறுக்கப்படும் மருத்துவ உரிமைகளும்

Loading

சிறையில் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். சமூகத்தில் உள்ளவர்கள் பெறும் அதே தரத்திலான சிகிச்சையை சிறைவாசிளும் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சர்வதேச விதிகளும் நீதிமன்ற தீர்ப்புகளும் கூறுகின்றன.
ஆனால் நடைமுறையில் சிறைவாசிகளும் மருத்துவ சிகிச்சை தொடர்ந்து மறுக்கப்படுவதை செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. தண்டனையும் இன்றி விசாரணையும் இன்றி அல்லல்படும் விசாரணை சிறைவாசிகளும் இந்த உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர்.
விசாரணை சிறைவாசிகளுக்கு மறுக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை இந்த கட்டுரை அலசுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நான் செய்த குற்றம் என்ன? ஷர்ஜீல் இமாம்

Loading

சிஏஏ எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை சிறைவாசியாக ஆறு ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாம் தனது வழக்கு, கைதுக்கு காரணமான உரை, தனது பேச்சிற்காக அவர் வருத்தப்படுகிறாரா உள்ளிட்ட விசயங்களை இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். வேறு சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் தான் இருந்த போதே டெல்லி கலவர வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, தனது குற்றம் என்ன?’ என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.
“எனது நண்பர்கள் என்னிடம் கொஞ்சம் நிதானமாக இருக்குமாறு சொன்னபோது, நான் நேரடியாகவே பதில் கூறினேன். சமூக அறிவியல் மற்றும் இந்தியக் குடியரசில் முஸ்லிம்களின் வரலாறு குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் என்ற முறையில், மக்களுக்காகப் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதன் மூலம் முன்னணியில் நிற்பது நமது பொறுப்பு. நாம் நமது பாதுகாப்பான சூழலிலிருந்து (Comfort zone) வெளியே வர வேண்டும்” என்றார் இமாம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஃபலஸ்தீனின் குழந்தைகள்

Loading

ஃபலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலை அங்குள்ள குழந்தைகள் உடல், மன, மற்றும் உள ரீதியாக கடுமையாக பாதித்துள்ளன. தாங்கள் ஃபலஸ்தீனில் பிறந்த ஒரே காரணத்திற்காகவே படுகொலை செய்யப்படுகிறோம் என்பதை உறுதியாக நம்பும் அந்த குழந்தைகள் சர்வதேச சமூகம் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
எத்தனை பிரச்சகைள் வந்தாலும் அது எந்த ரூபத்தில் வந்தாலும் அவை அனைத்தையும் கடந்து ஃபலஸ்தீன மக்கள் உறுதியாக உள்ளார்கள் என்று அவர்களை புகழ்வது சர்வதேச சமூகத்தின் வழமையாக மாறியுள்ளது. ஆனால், இந்த புகழ்ச்சிக்கு பின்னால் நமது கையாளாகாத தன்மையும் மறைந்துள்ளதை வசதியாக மறந்து விடுகிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிறைவாசிகளின் வாக்குரிமை?

Loading

சிறைவாசிகளுக்கு வாக்குரிமையை சட்டரீதியாக மறுத்து விட்டுத்தான் ‘100% வாக்குப்பதிவை உறுதி செய்வோம்’ என்று தேர்தல் ஆணையம் வீதி வீதியாக பிரச்சாரம் செய்கிறது. வாக்குரிமை மறுக்கப்படும் சிறைவாசி தேர்தலில் போட்டியிடலாம் என்ற நடைமுறையும் நமது நாட்டில் உள்ளது. சிறைவாசிகளின் வாக்குரிமை மறுப்பு மற்றும் அதனை மீட்பதற்கான முயற்சிகள் குறித்த சுருக்கமான பார்வையை இந்த கட்டுரை வழங்குகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாடு முஸ்லிம் அரசியல்: சவால்களும் வாய்ப்புகளும்
2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து கவனப்படுத்தும் ஆய்வறிக்கை

Loading

ஏறத்தாழ ஆறு சதவிகித மக்கள் தொகை கொண்ட தமிழக முஸ்லிம்கள் தேர்தல் அரசியலில் தங்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை எப்போதும் பெற்றதில்லை என்பதை தரவுகள் தெரிவிக்கின்றன. சமூக நீதி, மதச்சார்பின்மை, எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய கொள்கைகள் முன்வைக்கப்பட்டாலும் அரசியலில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இங்கும் வழங்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. இந்தியாவின் ஏனைய மாநிலங்களை விட சமூக களத்தில் முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருந்தாலும் அரசியல் களத்தில் ஏனைய மாநிலங்களின் நிலைதான் தமிழ்நாட்டிலும் நீடிக்கிறது.
முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான குரல்கள் ஒலித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் முஸ்லிம் கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர்களுக்கான வாய்ப்புகளையும் இந்த கட்டுரை பேசுகிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஈரானின் நிழல் இராணுவம்

Loading

ஈரானின் நிழல் இராணுவமாக செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் தோற்றம், கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த சுருக்கமான பார்வை

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பத்ரு தரும் படிப்பினைகள்

Loading

முஸ்லிம்கள் சந்தித்த முதல் போர் என்று வர்ணிக்கப்படும் பத்ர் போர் ஏராளமான படிப்பினைகளை விட்டுச் சென்றது. இறை நம்பிக்கை, தலைமைத்துவம், மன உறுதி, அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பது என றமளான் மாதம் நடைபெற்ற இந்த போர் தரும் பாடங்களை விவரிக்கிறது இந்த கட்டுரை.

மேலும் படிக்க