கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்திய ஜனநாயகத்தின் உண்மைக் கதை

Loading

‘உலகின் மிகப்பெரும் ஜனநாயகம்’, ‘ஜனநாயகத்தின் தாய்’ போன்ற உயர்வு நவிற்சியுடன் கூடிய ஒப்பீடுகள் இந்தியா குறித்த உண்மையைக் கூறுகின்றனவா? உண்மையில் இல்லை. அரசியல் கட்சிகள், ஊடகங்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், சாதாரணக் குடிமக்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அதிகப்படியான அச்சம் நிலவுகிறது என்பதே கள யதார்த்தமாகும். நடப்புநிலையைக் கேள்விகேட்கும் எவரும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

விழித்தெழுமா மக்கள் மனசாட்சி?

Loading

இந்நாட்டில் சிறுபான்மையினர் — குறிப்பாக முஸ்லிம்கள் — மீதான வன்முறையும் அவர்கள் கொல்லப்படுவதும் தினசரி செய்திகள். ஆம், அவை எவரும் கேட்டுவிட்டு கடந்துவிடும் செய்திகள், அவ்வளவுதான். இப்போது, இங்கு அரசு இயந்திரமும் அதில் கூட்டு சேர்ந்து கொண்டுள்ளது. பாதிக்கப்பட்டவனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியவனுக்கும் இடையில் மௌனமாக நாம் இருந்தோமெனில், அவனைத் தாக்கியது குச்சியோ துப்பாக்கியோ அல்ல; அது நாம்தான். ஏனென்றால், முதல் தாக்குதலிலேயே நாம் அதை தடுத்திருந்தால் இரண்டாவது தாக்குதல் நிகழ்ந்திருக்காது அல்லவா? இந்திய வரலாற்றில் மரங்களைக் காப்பதற்குத் தோன்றிய மக்கள் இயக்கமான சிப்கோ (Chipko) போல, முஸ்லிம்களைக் காப்பதற்கு தன்னெழுச்சியான ஒரு மக்கள் இயக்கம் தோற்றம் பெறுமா எனும் எதிர்பார்ப்பை முன்வைக்கிறது இக்கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஏன் இந்த கள்ள மௌனம்?

Loading

நாட்டில் கணிசமாக உள்ள ஒரு சமூக மக்களை ஒதுக்கிவிட்டு வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை இந்த தலைவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். இருந்தும் முஸ்லிம்களிடம் கைகோர்க்கும் சிந்தனை அவர்களிடம் ஏன் இல்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்கும் சில கட்சிகளிடம் கூட ஒரு வித அனுதாபப் பார்வை மட்டுமே இருக்கிறது. ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் மீது அனுதாபம் கொள்வதையும் தாண்டி அவர்களுடன் இணைந்து பயணிப்பதே, அதைவிட அவசியமாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பெரியாரிஸ்டுகள் முஸ்லிம்களிடமிருந்து விலக வேண்டுமா? – ஓர் உரையாடல் குறிப்பு

Loading

ஒடுக்கப்படும் தமது சமூகத்தை ஒற்றைக்கல் கட்டுமானமாகச் சித்தரிப்பதும், அதற்குள் பல போக்குகள் இருப்பதைக் காண மறுப்பதும், தம் சமூகத்தின் மீது அரசு நிறுவன ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் அளவுக்கு அவரது பகுத்தறிவு உணர்ச்சி செல்வதும் சரியானதாகத் தோன்றவில்லை. எந்தச் சமூகத்திலிருந்து வந்தாரோ, அந்தச் சமூகம் படும் பாடுகளைப் பரிவுணர்ச்சியுடன் காண அவருக்குக் கண் இல்லை. அத்துடன், பார்ப்பன ஆதிக்கத்தின் கோர வடிவான இந்து / இந்திய தேச அரசின் ஒடுக்குமுறை எதிர்த்துப் போராடும் திராவிட இயக்க உணர்ச்சியும் அவரிடமில்லை என எனக்குத் தோன்றுகிறது.

இதுபோன்ற குரல்களை பகுத்தறிவுவாதம், மத விமர்சனம் என பொத்தாம் பொதுவான போக்கில் திராவிட இயக்க மேடைகளில் அனுமதிப்பதும் நியாயமானதில்லை.

மேலும் படிக்க
karnataka hijab ban judgement tamil காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப் தடை
பெரும்பான்மைவாத பண்பாட்டு மேலாதிக்கத்தை முறியடிப்போம்!

Loading

கர்நாடகாவிலுள்ள பள்ளிகளில் ஹிஜாபுக்கு அம்மாநில அரசாங்கம் தடை விதித்தது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதுகுறித்து News TN சேனலுக்கு மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர் நாகூர் ரிஸ்வான் அளித்த பேட்டி இது.

மேலும் படிக்க
karnataka hijab issue tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப் விவகாரம்: பாதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவிகள் சொல்வதென்ன? (நேரடி ரிப்போர்ட்)

Loading

தொடர்ச்சியாக பள்ளி நிர்வாகம், ஊடகம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளை மேன்மேலும் தொந்தரவுக்கு உள்ளாக்குவதைப் பார்க்க முடிகிறது. ஹிஜாபுக்காகப் பேசும் மாணவிகள் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கும் அளவுக்குத் திறமைவாய்ந்தவர்கள் அல்ல, அவர்கள் எப்போதும் அதை அணிந்திருந்தவர்களும் அல்ல என்றெல்லாம் ஆசிரியர்களே அவர்களைச் சாடுவது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களையே பழிக்குற்றச்சாட்டுக்கு ஆளாக்குவது தொடர்கிறது. மாணவிகள் இதற்கு உரிய வகையில் பதிலடி தரவும் செய்கிறார்கள். கல்வியிலும் அதற்கு அப்பாலும் தாங்கள் எந்த அளவுக்கு சிறந்து விளங்குகிறோம் என்பதை சொல்லிக் காட்டுகிறார்கள். ஊடகங்கள் பாதிக்கப்பட்ட மாணவிகளையே குறிவைத்துத் தாக்குகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், சில தொலைக்காட்சி சேனல்கள் ஆலியா என்ற ஒரு மாணவியைக் இலக்காக்கின. அவர் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஹிஜாபுடன் பங்கேற்றவர். மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றவர். அவரிடம், எப்போது ஹிஜாப் போட ஆரம்பித்தீர்கள், நீங்கள் ஹிஜாபைக் கழட்டியதே கிடையாதா, எத்தனை ஆண்டுகளாக இதைக் கடைப்பிடிக்கிறீர்கள் என்றெல்லாம் ஊடகங்கள் கூச்சலிட்டன.

சமூகச் செயல்பாட்டாளர் சஃபூரா ஸர்கார், “முன்பு மாணவிகள் ஹிஜாப் அணிந்தார்களா, இல்லையா என்பது இங்கு பொருட்டல்ல. எனது அடிப்படை உரிமையை நான் எடுத்துக்கொள்வதற்கு எந்தக் கால வரையறையும் கிடையாது” என்கிறார். ஹிஜாப் அணிவதைத் தெரிவு செய்யும் முஸ்லிம் பெண்களின் உரிமைகள் இங்கு மறுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

மேலும் படிக்க
karnataka hijab issue update காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப்: கர்நாடக அரசின் ஒடுக்குமுறைக்குத் துணை போகும் நீதிமன்றம் – எழுத்தாளர் காமராசன்

Loading

கர்நாடகாவில் இந்து தேசியவாதிகளால் ஹிஜாப் சர்ச்சையாக்கப்படும் சூழலில், அதற்குத் துணை போகும் வகையில் நீதிமன்றத்தின் செயல்பாடு அமைந்திருப்பதாக எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான காமராசன் தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க
hijab issue tamil கட்டுரைகள் காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப் விவகாரம்: இந்து தேசியவாதத்துக்குத் தீனி போடும் பெண்ணியவாதிகள்

Loading

ஹிஜாப் சர்ச்சையாக்கப்படுவதை எப்படி புரிந்துகொள்வது?
தேர்தல் கணக்குகளுக்காகவும் பாஜக அரசின் பொருளாதாரத் தோல்வியை மறைக்கவும்தான் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கின்றதா?
இந்து தேசியவாதத்துக்கு எப்படி பெண்ணியவாதம் தீனி போடுகிறது?
தேச அரசு எனும் வடிவம் அதனளவில் கொண்டிருக்கும் சிக்கல் என்ன?
போன்ற முக்கியமான விஷயங்கள் இந்நேர்காணலில் விவாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க
சர்மிளா சையத் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஷர்மிளா ஸெய்யித் எனும் தொழில்முறை முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரகர்

Loading

இன்று இஸ்லாமிய வெறுப்பைப் பரப்புவது ஒரு லாபம் கொழிக்கும் தொழில். அதை செவ்வனே செய்து பெயர், புகழ், பணம், அதிகாரம் என அனைத்தையும் பெற முடிகிறது. ஷர்மிளா போன்ற பல இஸ்லாம் வெறுப்புப் பிரச்சாரகர்களுக்குள் இருக்கும் பொது அம்சங்களாக பின்வருவனவற்றைச் சொல்லலாம்: முஸ்லிம்/ பெண் அடையாளம், Victim playing, சர்வதேச அங்கீகாரம், விருதுகள் பெறுதல், மேலை நாடுகளில் அரசியல் அடைக்கலம் பெறுதல்.

தமிழகத்து முற்போக்கு சக்திகள் இவரைப் போன்ற உதிரிக்கு இடமளித்து முஸ்லிம்களிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திக்கொள்ளக் கூடாது என்பது என் வேண்டுகோள். சிஏஏ, சிறைவாசிகள் விடுதலை, ஹிஜாப் உள்ளிட்ட எல்லா உரிமைப் போராட்டங்களிலும் களமாடும் முஸ்லிம் பெண்கள்தாம் அந்தச் சமூகத்தின் பெண் பிரதிநிதிகள். ஷர்மிளா ஸெய்யித் அல்ல.

மேலும் படிக்க
Kareem Graphy கட்டுரைகள் காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

ஹிஜாப்: எது பொதுப் பண்பாடு?

Loading

இந்து தேசியவாதிகளால் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது சர்ச்சையாக்கப்படுவது தொடர்பாக OH Tamil யூடியூப் சேனலுக்கு மெய்ப்பொருள் பொறுப்பாசிரியர் நாகூர் ரிஸ்வான் அளித்த நேர்காணல்.

மேலும் படிக்க