கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஏன் மணிப்பூர் பற்றி எரிகின்றது?

Loading

இந்தத் தாக்குதல்களை மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசாங்கமும் முதலமைச்சர் பிரேன் சிங்கும் தடுக்கவில்லை என்பது மட்டுமில்லை, ஊக்குவித்தனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினர். மெய்த்தி இனவெறியை ஊதிப் பெருக்கினர்.

மேலும் படிக்க
srilanka economic crisis explained tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நெருக்கடியில் இலங்கைப் பொருளாதாரம் – அரசியல் பொருளாதார நிபுணருடன் ஓர் உரையாடல்

Loading

கடந்த பல மாதங்களாக உக்கிரமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றிய கட்டுரைகள் உள்ளூர் ஊடகங்களிலும், உலகளாவிய ஊடகங்களிலும் பிரதானமாக இடம்பெறுகின்றன. இலங்கையின் பெரும் வெளிநாட்டுக் கடன் சுமை, அந்நியச் செலாவணி இருப்பு குறைதல், எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டுள்ள சவால்கள் முதலான நெருக்கடியின் அறிகுறிகள் பற்றியே அவற்றில் பெரும்பாலான கட்டுரைகள் பேசுகின்றன. இலங்கை அரசியல் பொருளாதாரத்தின் நீண்டகால அம்சங்கள், அவற்றுக்கு இப்போதைய நெருக்கடியுடன் உள்ள உறவுகள் குறித்த கேள்விகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடந்த கால இலங்கை அரசாங்கங்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கை முடிவுகள், பெருந்தொற்றுக்குப் பின்னர் இலங்கைப் பொருளாதாரத்தை அதிகமாகவோ குறைவாகவோ அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதா? பொதுவெளியில் வல்லுநர்களும் கருத்தாளர்களும் பொருளாதாரம் பற்றி எப்படி விவாதிக்கிறார்கள்? இப்போதைய அரசாங்கத்தின் முன்னுள்ள பணிகள் என்ன?

அரசியல் பொருளாதார நிபுணரும், வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் கௌரவத் தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமான அகிலன் கதிர்காமர் அவர்களுடன் நாம் மேற்கொண்ட கலந்துரையாடல் இந்நேர்காணல். கதிர்காமர் இலங்கையின் பொருளாதாரப் பாதை, அதன் கட்டமைப்பு அம்சங்களை மட்டும் விவரிக்காமல், இப்போதைய நெருக்கடிகள் பற்றிய ஆழமான பார்வையை வழங்குகிறார். அதே வேளையில் இப்போதைய பிரச்னை குறித்த விவாதங்களின் தென்படும் சிக்கல்களையும் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பெரியாரிஸ்டுகள் முஸ்லிம்களிடமிருந்து விலக வேண்டுமா? – ஓர் உரையாடல் குறிப்பு

Loading

ஒடுக்கப்படும் தமது சமூகத்தை ஒற்றைக்கல் கட்டுமானமாகச் சித்தரிப்பதும், அதற்குள் பல போக்குகள் இருப்பதைக் காண மறுப்பதும், தம் சமூகத்தின் மீது அரசு நிறுவன ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் அளவுக்கு அவரது பகுத்தறிவு உணர்ச்சி செல்வதும் சரியானதாகத் தோன்றவில்லை. எந்தச் சமூகத்திலிருந்து வந்தாரோ, அந்தச் சமூகம் படும் பாடுகளைப் பரிவுணர்ச்சியுடன் காண அவருக்குக் கண் இல்லை. அத்துடன், பார்ப்பன ஆதிக்கத்தின் கோர வடிவான இந்து / இந்திய தேச அரசின் ஒடுக்குமுறை எதிர்த்துப் போராடும் திராவிட இயக்க உணர்ச்சியும் அவரிடமில்லை என எனக்குத் தோன்றுகிறது.

இதுபோன்ற குரல்களை பகுத்தறிவுவாதம், மத விமர்சனம் என பொத்தாம் பொதுவான போக்கில் திராவிட இயக்க மேடைகளில் அனுமதிப்பதும் நியாயமானதில்லை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பஞ்சாப்: ஆம் ஆத்மியின் வெற்றியும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் – ப்ரீத்தம் சிங்

Loading

பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தது, ஆம் ஆத்மி கட்சி மீதுள்ள அன்பினால் அல்ல. மாறாக மேட்டுக்குடியினரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியிலிருந்து கட்டுப்படுத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் பாணி குறித்துப் பலத்த சந்தேகங்கள் உள்ளன. பஞ்சாபியர்கள் டெல்லி தர்பாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த நீண்ட வரலாற்று மரபு உள்ளது. கேஜ்ரிவாலும் அவரது டெல்லி கூட்டாளிகளும், பஞ்சாபி அரசியல் பண்பாட்டின் இந்த அம்சத்தின் முக்கியத்துவத்தைத் தாமதமாக உணர்ந்திருந்தாலும், இறுதியில் பகவந்த் மானை ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பதவிக்கு முன்னிறுத்த முடிவு செய்தனர். மான், எந்த நிர்வாகத் திறமைக்கும் பெயர் பெற்றவராக இல்லாவிட்டாலும், ஊழலற்ற, எளிமையான வாழ்க்கை முறைக்கும் செயல்பாட்டிற்கும் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

கெஜ்ரிவாலின் டெல்லி ஆட்சி மீது ஈர்ப்புக் கொண்டு, பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்துள்ளனர் என்ற கதையைப் பரப்பும் பல வர்ணனையாளர்களைப் போலல்லாமல், மானின் நேர்மையும் பிரபலமும்தான் பஞ்சாபி மக்களை ஆம் ஆத்மிக்கு ஈர்த்துள்ளது.

இதன் குறிப்பிடத்தக்க உட்பொருள் என்னவென்றால், கெஜ்ரிவால் மான்னையும் பஞ்சாபின் ஆம் ஆத்மி அரசாங்கத்தையும் கைப்பாவையாக ஆக்கிக் கட்டுப்படுத்துவதாகக் கருதப்பட்டால், காங்கிரஸ்-அகாலி மேட்டுக்குடிகள் தோற்பதற்கு வழிவகுத்த மக்கள் சினம் கெஜ்ரிவாலை நோக்கியும் திரும்பக்கூடும்.

மேலும் படிக்க