தொடர்கள் மொழிபெயர்ப்பு 

ததப்புருல் குர்ஆன்: முன்னுரை (முதல் பகுதி)

அரபு ஜாஹிலிய்யா காலத்தைக் குறித்து நம்முடைய வரலாற்று நூற்களில் காணப்படும் தகவல்கள் யாவும் மேலோட்டமான நுனிப்புல் மேய்கின்ற தகவல்கள் ஆகும். அவற்றின் மூலமாக நாம் காண விளைகின்ற விஷயத்தை ஒருபோதும் சென்றடைய முடியாது. பொதுவாக நமது வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கின்ற தகவல்களைப் படித்தால் என்ன தோன்றுகின்றது? அவர்கள் மனித குலமே கிடையாது. மாறாக, ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் என்ற எண்ணம்தான் தோன்றுகின்றது. ஒரு காலத்தில் மில்லத்தே இப்ராஹீம்- இப்ராஹீமின் மில்லத்தாக இஸ்மாயிலின் தீனின் வாரிசாகத் திகழ்ந்த ஒரு சமூகத்தின் சித்திரமாக அது நமது கண்களுக்குத் தென்படுவதில்லை. அவர்கள் ஏன் இவ்வாறு செய்துள்ளார்கள்? இப்படிச் செய்தால்தான் இஸ்லாத்தின் மேன்மையை உலகிற்குப் பறைசாற்ற முடியும் என்று கருதியதால்!

மேலும் படிக்க