கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அலீ ஃகாமினயீ: இஸ்லாமிய ஈரானைச் செதுக்கிய சிற்பி

Loading

பல நாடுகளையும் நாட்டுத் தலைவர்களையும் அச்சுறுத்திவரும் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், ஸியோனிச இஸ்ரேலுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் இமாம் அலீ ஃகாமினயீ. அவர் இமாம் ஃகுமைனீயை அடுத்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசை 35 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தியவர் ஆவார்.

அலீ ஃகாமினயீயின் ஷஹாதத் உறுதிசெய்யப்பட்டதும், டிரம்பும் நெதன்யாஹுவும் ‘ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்கக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு’ என வெற்று கோஷம் முழக்கினர். அதேபோல், மக்களும் நாட்டை மீட்டெடுக்கத் தெருக்களில் கூடினர்; ஆனால் தற்போதைய அரசிடமிருந்தல்ல. மாறாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசை அழிக்கத் துடிக்கும் அமெரிக்க-இஸ்ரேல் ஸியோனிஸ்டுகளிடமிருந்து. ஃகாமினயீயின் ஷஹாதத்திற்குத் துக்கம் அனுசரித்துத் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியவாறே ‘அமெரிக்கா செத்தொழியட்டும்’ (Death to America) என்று மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.

ரஹ்பர் ஃகாமினயீ ஈரானை ஷா மன்னரின் கோரப் பிடியிலிருந்து மீட்டு, ஒரு பிராந்திய சக்தியாக மாற்றி, ஃபலஸ்தீன் விவகாரத்தை அதன் மூலோபாயக் கொள்கையின் மையமாக வைத்தவர். நவீன ஈரானை நீண்டகாலம் திறம்பட நிர்வகித்த தீரமிக்க தலைவர். அவரின் இந்த அரும்பணி பல தசாப்தங்களுக்கு மக்களின் நினைவுகளில் ஆழப் பதிந்திருக்கும். இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக!

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கண்ணியம், சுயாதீனம், சுய நிர்ணய உரிமையுடன் ஆதிக்கத்தை நிறுவிய ஈரான்!

Loading

‘வெனிசுலா மாதிரி’யை அப்படியே மீட்டுருவாக்கம் செய்து அதன் மூலம் ஈரான் தலைமைத்துவத்தின் அரசியல், ராணுவ நடத்தைகளை மாற்ற வேண்டும் அல்லது ஒட்டுமொத்தமாக வீழ்த்த வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டம் முற்றிலும் சிதைந்துள்ளது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் காத்திரத் தன்மையும் அதன் கருத்தியல் பலமுமே அமெரிக்காவின் இத்தோல்விக்கான காரணமாகும்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் சமீபத்திய கூட்டு இராணுவ நடவடிக்கைகள் முழுமையான தோல்வி என்பதோடு, அவை ஈரானை அச்சுறுத்துவதிலும் பின்னடையச் செய்வதிலும் வெற்றி பெறவில்லை; அதிகாரச் சமநிலையை மாற்றியமைக்கவும் இல்லை. மாறாக, இஸ்ரேலை மிகப் பலவீனமான ஒரு வியூகம்சார் நிலைப்பாட்டுக்கே அவை தள்ளியுள்ளன.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

எண்ணெய்க்கு கிடைக்கும் மதிப்பு மனித உயிர்களுக்கு கிடைக்குமா?

Loading

இருபது ஆண்டுகளாக ஃபலஸ்தீனின் காஸா பொருளாதார தடையில் சிக்கித் தவித்தாலும் கண்டு கொள்ளாத உலக நாடுகள், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டவுடன் அவசரமாக செயலில் இறங்குகின்றன.
மனிதாபிமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் போது அமைதியும், வர்த்தகம் அச்சுறுத்தப்படும்போது அவசரமும் உடனடியாக வெளிப்படுகிறது. உலகம் தனது மனசாட்சியை சந்தையின் ஓசைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. உலக நாடுகள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதை இது உணர்த்துகிறது.
எந்தவொரு நாகரிகமும் அதன் கருவூலங்களின் செழிப்பையோ அல்லது எண்ணெய் வழித்தடங்களின் பாதுகாப்பையோ கொண்டு மதிப்பிடப்படாது; மாறாக, அது மனித உயிருக்கு அளித்த முக்கியத்துவத்தைக் கொண்டே மதிப்பிடப்படும் என்பதை நாடுகள் உணருமா?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஃபலஸ்தீனின் குழந்தைகள்

Loading

ஃபலஸ்தீனில் இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலை அங்குள்ள குழந்தைகள் உடல், மன, மற்றும் உள ரீதியாக கடுமையாக பாதித்துள்ளன. தாங்கள் ஃபலஸ்தீனில் பிறந்த ஒரே காரணத்திற்காகவே படுகொலை செய்யப்படுகிறோம் என்பதை உறுதியாக நம்பும் அந்த குழந்தைகள் சர்வதேச சமூகம் மீதான நம்பிக்கையை இழந்து வருகின்றனர் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
எத்தனை பிரச்சகைள் வந்தாலும் அது எந்த ரூபத்தில் வந்தாலும் அவை அனைத்தையும் கடந்து ஃபலஸ்தீன மக்கள் உறுதியாக உள்ளார்கள் என்று அவர்களை புகழ்வது சர்வதேச சமூகத்தின் வழமையாக மாறியுள்ளது. ஆனால், இந்த புகழ்ச்சிக்கு பின்னால் நமது கையாளாகாத தன்மையும் மறைந்துள்ளதை வசதியாக மறந்து விடுகிறோம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஈரானிய ஏவுகணைத் துறையின் தந்தை
முஸ்லிம் பலவீனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்

Loading

“லெபனானில் வடக்கிலிருந்து தெற்குவரை, தெற்கிலிருந்து வடக்குவரை பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் பாதுகாப்புக்காக ஹஸன் தெஹ்ரானி மொகதாமுக்கு கடமைப்பட்டுள்ளனர்” என்று ஹிஸ்புல்லாஹ் பொதுச் செயலாளர் ஸய்யித் ஹஸன் நஸ்ரல்லாஹ் வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.
ஹிஸ்புல்லாஹ் தலைவரின் பாராட்டைப் பெற்ற, ‘ஈரான் ஏவுகணை திட்டத்தின் தந்தை’ என்ற சிறப்பு பெயரையும் பெற்ற ஹஸன் தெஹ்ரானி முகத்தம் குறித்த பார்வை.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஈரான் – அமெரிக்கா / இஸ்ரேல் போர்: யார் கை ஓங்குகிறது ?

Loading

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அமெரிக்கா தனது இலக்குகளை அடைந்துள்ளதா? பொருளாதார ரீதியாக ஈரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அமெரிக்காவை பாதிக்குமா? நடைபெறும் இந்த போரில் யாரின் கை மேலோங்கியுள்ளது? விளக்கங்களை அளிக்கிறது இந்த கட்டுரை.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஈரானின் நிழல் இராணுவம்

Loading

ஈரானின் நிழல் இராணுவமாக செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் தோற்றம், கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த சுருக்கமான பார்வை

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இரையாகும் இறையாண்மை – நூல் மதிப்புரை

Loading

இந்தியாவை அதன் அணிசேரா கொள்கையைக் கைவிட்டு, முற்றிலும் அமெரிக்கச் சார்புகொண்ட நாடாக மாற்றும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை விளக்கமாக எடுத்துரைக்கும் இந்நூலை பல பதிப்பகங்களும் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், துணிந்து அதனைப் பதிப்பித்துள்ள சீர்மை பதிப்பகம் பாராட்டிற்கு உரியது. அந்நூலைப் பற்றிய சுருக்கமான மதிப்புரை இது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

இந்திய – இஸ்ரேல் உறவு

Loading

ஃபலஸ்தீன விவகாரத்தில் இந்தியா இரு தேசத் தீர்வை ஆதரிப்பதாகக் கூறினாலும், உறவு இஸ்ரேலுடன் மிக நெருக்கமாக ஆகியிருக்கிறது. குறிப்பாக, ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்காவின் தற்போதைய தாக்குதல்களையோ, ஆயதுல்லாஹ் ஃகாமினயீயின் கொலையையோ இந்தியா கண்டிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புதிய பாதைகளை உருவாக்கும் வங்கதேசத் தேர்தல்

Loading

ஜென் ஸீக்கள் தொடங்கிய போராட்டம் நாற்பது ஆண்டுகள் வங்கதேச அரசியலில் முக்கிய அங்கமாக இருந்த ஷேக் ஹஸீனாவை நாட்டை விட்டும் வெளியேற்றியது. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளும் நிலையற்ற அரசாங்கங்களும் கொண்ட வங்கதேசத்தில் இன்று உருவாகியுள்ள புதிய அரசாங்கம் ஜனநாயகத்தின் திருப்புமுனையாக அமையுமா? வங்கதேச வரலாற்றுப் பின்னணியுடன் சமீபத்திய தேர்தல்குறித்த பகுப்பாய்வை இந்தக் கட்டுரை வழங்குகிறது.

மேலும் படிக்க