குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

காபூல் பயங்கரவாதத் தாக்குதல்: யார் இந்த ஐஎஸ்ஐஎஸ்-கே?

Loading

கடந்த வியாழக்கிழமை அன்று காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவரை 13 அமெரிக்க ராணுவத்தினர் உட்பட சுமார் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு ஆஃப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ்-கே / ஐஎஸ்-கே (இஸ்லாமிய அரசு – குராசான் மாகாணம்) பொறுப்பேற்றுள்ளது. யார் இந்த ஐஎஸ்-கே?

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

தாலிபான்களை மையப்படுத்தி மீண்டும் சூடுபிடிக்கும் இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

Loading

தாலிபான்களை மையப்படுத்தி இஸ்லாமிய வெறுப்புத் தொழில் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. தாலிபான்களின் முந்தைய செயல்பாடுகள் இஸ்லாமிய வெறுப்புத் தொழிலாளர்களுக்குப் பெரும் தீனி. தாலிபான்கள் தங்களின் முந்தைய கடும்போக்குத்தனத்துடன் இப்போதும் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் உளமாற விரும்புகிறார்கள்போலும். அப்போதுதான் இஸ்லாமிய ஷரீஆ மீது தொடர்ந்து தாக்குதல் தொடுத்துக் கொண்டேயிருக்க முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்போலும். இஸ்லாத்தின் மீது தொடுக்கப்படும் இந்த அளவு மூர்க்கமான தாக்குதல்கள் அவர்கள் அதன் மீது கொண்டிருக்கும் கடுமையான வெறுப்பையே காட்டுகின்றன.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

“ஆஃப்கானிஸ்தானிலிருந்து ஏகாதிபத்திய சக்திகள் பாடம் பெற வேண்டும்” – JIH தேசியத் தலைவர் கருத்து

Loading

ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து பல்லாண்டுகளாக அங்கு தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கும் அமைதியற்ற சூழலுக்கும், ரத்தக் களரிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், அந்த நாட்டில் அமைதியும் இணக்கமும் பாதுகாப்பும் நிலைபெறுவதற்கும் ஆஃப்கன் மக்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்படுவதற்கும் இந்த மாற்றங்கள் துணை நிற்கும் என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

தாலிபான் ஆட்சியை சர்வதேசச் சமூகம் ஏன் ஏற்க வேண்டும்?

Loading

பல்லாண்டுகால வெளிநாட்டுத் தலையீடுகளால் ஆஃப்கானிஸ்தான் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்துள்ளது. முதலில் ரஷ்யாவாலும், பிறகு அமெரிக்கா, பிரிட்டிஷ், நேட்டோ ஆகியவற்றாலும் அது பாதிப்புக்குள்ளானது. இந்தக் காலனியத் தலையீடுகளெல்லாம் அந்நாட்டையே நாசமாக்கி விட்டிருக்கின்றன; உயிரிழப்புகளையும் அழிவையும் தவிர அவை ஈட்டியது வேறொன்றுமில்லை. காலனியச் சக்திகள் தோற்க வேண்டியவைதாம்; ஏனெனில், தம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சட்டபூர்வ உரிமை ஆஃப்கானியர்களுக்கு மட்டுமே இருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் 

என்ன நடக்கிறது ஃபலஸ்தீனில்?

Loading

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான அல்அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ள நிலமான ஃபலஸ்தீன், இஸ்லாமிய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவமும் தனிச்சிறப்பும் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். இப்ராஹீம், லூத், தாவூத், சுலைமான், மூஸா, ஈஸா (அலை) உள்ளிட்ட இறைத்தூதர்களின் பிறப்பு அல்லது இறப்பு இம்மண்ணில்தான் நிகழ்ந்துள்ளது. ’இறைத்தூதர்களின் பூமி’ எனும் புகழுக்குரிய ஃபலஸ்தீனில் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் இருப்பது தொட்டு அங்கிருந்து நபிகள் நாயகம் (ஸல்) விண்ணுலகப் பயணம் மேற்கொண்டது வரை அதை மிகுந்த சிறப்புமிக்கதாய் ஆக்கியிருக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘பிரிவினைவாத எதிர்ப்பு மசோதா’: பிரான்ஸில் சட்டப்பூர்வமாகும் இஸ்லாமோ ஃபோபியா

Loading

பிரான்ஸின் செனட் அவையில் கொண்டுவரப்பட்டுள்ள ’பிரிவினைவாத எதிர்ப்பு மசோதா’ அந்நாடு முழுக்க பெரும் சர்ச்சைக்கும் விவாதங்களுக்கும் இட்டுச்சென்றுள்ளது. இந்தச் சட்ட வரைவானது இஸ்லாமோ ஃபோபியாவுக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பதாக மனித உரிமை ஆர்வலர்களும் முஸ்லிம்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், அரசு ”இஸ்லாமியப் பிரிவினைவாதத்துக்கு” எதிரான மசோதா என்பதாக இதை முன்வைத்து வருகிறது.

பிரான்ஸ் நாடு 2004ல் ஹிஜாப், டர்பன் உள்ளிட்ட மத அடையாளங்களை பள்ளிக்கூடங்களில் தடை செய்தபோதும், 2011ல் முகத்திரை அணிவதைத் தடை செய்தபோதும், 2016ம் ஆண்டு பல பகுதிகளில் புர்கினி (முழு உடலையும் மூடும் வகையிலான நீச்சல் உடை) தடை செய்யப்பட்டபோதும் இதேபோன்ற விவாதங்கள் மேலெழுந்தன. பிரான்ஸின் மதச்சார்பின்மை எந்த அளவு மூர்க்கமாக மத அடையாளங்களை ஒடுக்குகிறது என்பது அப்போது பெரிதும் பேசப்பட்டது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

உயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி

Loading

பிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய அரசியல் சூழல் மற்றும் பின்னணியிலிருந்து ஆய்வு செய்வது அவசியம். இப்படியான ஒரு அரசியல் பின்னணியில் இரக்கமற்ற பயங்கரவாதத்தால் கொலையுண்ட மக்கள் அனைவருக்கும் நம் அஞ்சலிகளும் அனுதாபங்களும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை

Loading

நியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும் இஸ்லாம்-அச்சமும், இஸ்லாம்-வெறுப்பும் பெருமளவில் பரவலாக்கப்பட்டுள்ளன. வெள்ளையினத் தேசியவாதிகளும், சுவிஷேசக் கிறிஸ்தவர்களும் (Evangelical Christians), ஸியோனிஸ்டுகளும் இதைப் பெரும் தொழிலாகவே வளர்த்தெடுத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க
காணொளிகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

அயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி!

Loading

“நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே விதமான பொதுமைப்படுத்தல்கள் (stereotypes), பொய்யுரைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு லாபகரமான பிழைப்பு.”

மேலும் படிக்க
கட்டுரைகள் 

ஃபல்லூஜா – மினாரத்களின் நகரம் மயான பூமியான கதை

Loading

ஒரு காலத்தில் மினாரத்களின் நகரம் என்று பெருமையோடு அழைக்கப்பட்ட ஈராக்கின் ஃபல்லூஜா நகரம்,அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னர் பெரும் யுத்தங்களுக்கும் அழிவுகளுக்குமுரிய செய்தியாகி வருவது பெரும் துரதிஸ்டமே. ஐஸ்ஐஸின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நகரத்தை மீள கைப்பற்றுவதற்கு ஈராக்கிய இராணுவம் கடந்த திங்கட்கிழமை முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையே இந்த நகரத்தின் பெயர் மீண்டும் உலக மீடியாக்களின் செய்திகளில் தலைப்பு செய்தியாக மாறியிருப்பதற்கு காரணமாகும்.

மேலும் படிக்க