கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

திமுகவின் கொடுங்கனவான பிம்பச் சிறை

Loading

தமிழ்நாடு அரசியலுக்கும் கலைத் துறைக்குமான தொடர்பு காற்றுக்கும் மரத்துக்கும் உள்ள தொடர்பை ஒத்தது. அமெரிக்க நடிகர் ரொனால்ட் ரீகனுக்குப் பிறகு திரைத் துறையை அரசியலுக்கு கச்சிதமாகப் பயன்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம். அண்ணா, கருணாநிதியின் அர்த்தம் பொதிந்த ஆழமான அரசியல் வசனங்கள், அதனை திரையில் பிரதிபலித்த எம்ஜிஆர் உள்ளிட்ட நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு என திராவிட அரசியலின் வளர்ச்சியில் திரைத் துறையின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.
வெண் திரை என்ற மாயச் சுவரில் தோன்றி மறையும் கதாபாத்திரங்களை அச்சு அசல் மனிதர்களாக நம்பும் குணம் இப்போதும் தமிழக மக்களின் நனவிலியில் ஆழப்பதிந்துள்ளது. அதை அறியாமை என்று விலக்கிவிட்டு நகர்ந்து செல்ல முடியாது. அந்த அறியாமை ஆட்சி மாற்றத்துக்கு இட்டுச் செல்லும் – இட்டுச் சென்ற வரலாறுதான் தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு.

மேலும் படிக்க