கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாம் Vs. நவீனத்துவம் (4)

Loading

மனித உள்ளுணர்வு பல்வேறு விஷயங்களில் பெரும்பாலான மக்கள் பொது ஏற்பு கொண்டுள்ளார்கள். அதற்குக் காரணம் மனிதன் இயல்பாகக் கொண்டிருக்கும் உள்ளுணர்வுதான். அது தர்க்கத்துக்கும் அனுபவவாதத்துக்கும்கூட ஓர் அடிப்படையாக விளங்குகிறது. முரண்படா கொள்கை என்பது தர்க்கத்தின் ஆதாரமான கருத்தாக்கமாகும். உதாரணத்துக்கு, என் கையிலுள்ள புத்தகத்தின் அட்டை கறுப்பு நிறம் என்றும், கறுப்பு நிறமல்ல என்றும் சொன்னால், அதில் முரண்பாடு உள்ளது. இரண்டுமே சரியான பதிலாக இருக்க முடியாது. ஆக, அதில் தர்க்கப் பிழை இருக்கிறது. சரி, உங்களிடம் ஒருவர் இதில் முரண்பாடு எங்கே இருக்கிறது, இரண்டுமே சரிதானே என்று கேட்டால், எப்படி அவருக்கு யதார்த்தத்தை விளக்குவீர்கள். அவரை மனப்பிறழ்வு கொண்டவர் என்றல்லவா நினைப்பீர்கள்? காரணம், இயல்பாக மனிதர்கள் சிந்திக்கும் விதத்தில் அவர் சிந்திக்கவில்லை என்பதால். தர்க்கத்தைப் போன்றே அனுபவவாதத்துக்குள்ளும் உள்ளுணர்வு தொழிற்படுகிறது. குழந்தைகளுக்கு மொழியை எப்படி கற்பிப்பீர்கள்? ஒரு…

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாம் Vs. நவீனத்துவம் (3)

Loading

எது அறம், எது அறமல்ல என்பதை எப்படி தீர்மானிப்பது என்பதில் இஸ்லாமும் நவீனத்துவமும் முரண்படுகின்றன. சரி – தவறைப் பிரித்தறிய இரண்டுமே வெவ்வேறு அணுகுமுறைகளைக் கையாள்கின்றன. சமூகம் முன்னேறும்போது அற மதிப்பீடுகள் புதிது புதிதாகக் கண்டடையப்படுவதாகவும், மதங்கள் தேங்கி நிற்பதாகவும் முற்போக்குவாதிகள் வாதிடுகின்றனர். நாம் முன்சென்ற தலைமுறையினரைவிட அறிவில் வளர்ச்சியடைந்துள்ளதால் அவர்கள் சரியென்று கருதிய பல விஷயங்கள் இன்று தவறாகியுள்ளன என்கிறார்கள்.

பிறருக்குத் தீங்கு விளைவிக்காத எதை வேண்டுமானாலும் நீ செய்யலாம் எனும் கருத்தாக்கம் (No Harm Principle) இவர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் ஓர் ஆணும் பெண்ணும் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் உடலுறவு வைத்துக்கொள்வது தவறல்ல எனும் நிலைப்பாட்டுக்கு வருகிறார்கள். அதைத் தவறென்று சொல்வது குற்றப்படுத்தப்படுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாம் Vs. நவீனத்துவம் (2)

Loading

இஸ்லாமிய அறிதல்முறையில் மரபுக்கு மையமான இடமுண்டு. அதேவேளை, பகுத்தறிவையும் அனுபவவாதத்தையும் புறக்கணிப்பது இஸ்லாமிய நிலைப்பாடல்ல. நம் அறிதல்முறையின் பகுதிகள்தாம் அவை. இறைவனும் திருமறையில் தொடர்ச்சியாக நம்மை சிந்திக்கத் தூண்டுகிறான் அல்லவா?

இஸ்லாம் மற்றும் நவீனத்துவ சிந்தனைச் சட்டகங்களுக்கு மத்தியிலான வேறுபாடு எந்தப் புள்ளியில் தோன்றுகிறது என்றால், ஃபித்றா, உள்ளுணர்வு, மரபு என்பன உங்கள் சிந்தனைக்கு இடையூறாக இருப்பதாய் நவீனத்துவம் வாதிடுகிறது. அத்தோடு, உங்கள் அறிவையும் அனுபவத்தையும் மட்டுமே அறிவின் மூலங்களாக முன்வைக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இஸ்லாம் Vs. நவீனத்துவம் (1)

Loading

இஸ்லாம், நவீனத்துவம் ஆகியவற்றின் சில பகுதிகள் பரஸ்பரம் ஒத்துப்போகக்கூடும். ஆனால், இரண்டையும் நாம் குழப்பிக்கொண்டால் சிக்கல் உருப்பெறும். ஒரு சிந்தனைச் சட்டகம் உங்கள் சிந்தனையை, உணர்வை, அறிவுக்கும் நெறிமுறைக்குமான உங்களது உரைகல்லை, உலகம் குறித்த உங்களது புரிதலை, சுயம்சார் புரிதலை எல்லாம் தீர்மானிப்பதாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நம்மில் பலருக்கு இஸ்லாம் குறித்து குழப்பங்களும் சந்தேகங்களும் எழக் காரணமும் சிந்தனைச் சட்டகம் சார்ந்ததே. இதை சரியாக இனங்காணாததன் விளைவாகவே நவீனத்துவ முஸ்லிம்கள் தடம் புரள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இஸ்லாத்தின் விளிம்பில் நிற்பவர்கள். அதனால் சிலபோது நவீனத்துவ கருத்துநிலையின் பக்கம் முழுமையாகச் சாய்ந்துவிடுவார்கள்.

மேலும் படிக்க