கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கல்வி வளாகங்களில் நிகழும் இனப்படுகொலை!

Loading

கல்வி என்பது விடுதலைக்கான வழி என்று அண்ணல் அம்பேத்கர் கற்பித்தார். ஆனால், இன்றைய இந்திய வளாகங்கள் தலித் மாணவர்களை அவர்களின் சாதி அடையாளத்திற்குள்ளேயே முடக்கி வைக்க முயற்சிக்கின்றன. சட்டங்களை விடவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மனங்களிலுள்ள சாதி உணர்வு மாறாதவரை, கல்வி வளாக மரணங்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். சாதி மற்றும் மத பாகுபாட்டை எதிர்கொள்ள தலித், முஸ்லிம் மாணவர்கள் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அவர்கள் ‘தேச துரோகிகள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். கல்வி வளாகங்கள் அனைவருக்கும் பொதுவான வளாகங்களாக எப்போது மாறும்?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிறைவாசிகளின் வாக்குரிமை?

Loading

சிறைவாசிகளுக்கு வாக்குரிமையை சட்டரீதியாக மறுத்து விட்டுத்தான் ‘100% வாக்குப்பதிவை உறுதி செய்வோம்’ என்று தேர்தல் ஆணையம் வீதி வீதியாக பிரச்சாரம் செய்கிறது. வாக்குரிமை மறுக்கப்படும் சிறைவாசி தேர்தலில் போட்டியிடலாம் என்ற நடைமுறையும் நமது நாட்டில் உள்ளது. சிறைவாசிகளின் வாக்குரிமை மறுப்பு மற்றும் அதனை மீட்பதற்கான முயற்சிகள் குறித்த சுருக்கமான பார்வையை இந்த கட்டுரை வழங்குகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

களநிலை vs காலநிலை: அனல் பறக்கும் தேர்தல் – சூழலியல் பார்வை

Loading

கடும் வெயிலுக்கு மத்தியில் அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும், நட்சத்திர பேச்சாளர்களும், வாக்காளர்களும் இந்த தேர்தலை எதிர்கொண்டனர். கடந்த சில நாட்களாக Heat Stress -ஆல் ஏற்படும் பாதிப்புக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே இலக்காகி வருகின்றனர்.

வெப்ப அலை மற்றும் வெப்ப அழுத்தத்திலிருந்து நம்மையும் நமது குடும்பத்தையும் தற்காத்துக் கொள்வது ஒவ்வொரு தனி மனிதனின் பொறுப்பாகும். இதில் தேர்தல் ஆணையத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது.
தேர்தல் காலத்தில் வெப்பத்தின் பாதிப்பையும் இனி வரும் நாட்களில் தேர்தல்களை எவ்வாறு அணுகலாம் என்பது குறித்த ஆலோசனைகளையும் இக்கட்டுரை வழங்குகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தோற்றப் பொலிவும் தொழில்நுட்பத் தேடலும்

Loading

தொழில்நுட்பங்கள் சக்தி வாய்ந்தது என்பதைத் தாண்டி, யார் அதனை கட்டுப்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என நவீன மக்கள் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வெள்ளை இனவெறி கருத்தாக்கங்களை பரப்பும்போது, கறுப்பர்களும் அதே தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்கள் கதைகளைச் சொல்ல வேண்டுமென மால்கம் விரும்பினார்.
தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் உந்துதல் வெறும் ஆர்வக்கோளாறால்ல. மால்கமைப் பொறுத்தவரை அது உயிர் வாழ்வதற்கான உத்தி.
தோற்றத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் முக்கியத்துவம் வழங்கிய மால்கம் X அதனை அதிகாரமாக்கலுக்கான கருவிகளாக கருதினார். மால்கமின் இந்த வித்தியாசமான பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மகாஸிதியச் சிந்தனை: ஓர் ஆய்வு முறைமை
பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவின் மகாஸித் ஆய்வுமுயற்சிகளினூடான புரிதல்

Loading

சமகால உலகில் இஸ்லாமிய புலமைத்துவ வட்டாரத்தில் அதிக கவனயீர்ப்பை பெற்று வரும் ‘மகாஸித்’ பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டு வருகிறது. வரலாறு நெடுகிலும் உஸூலுல் ஃபிக்ஹ் மற்றும் ஃபிக்ஹ் கலையோடு மட்டுப்படுத்தி நோக்கப்பட்ட மகாஸிதை, ஷரீஆவின் எல்லாத் துறைகளோடும் தொடர்புபடுத்தி நோக்கும் நிலையை சமகால ஆய்வுகளில் காண முடிகின்றது. இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் தோன்றிய ஒரு கலையாக நோக்குவதற்கு அப்பால், மகாஸிதை ஓர் ஆய்வு முறைமையாக விளக்கும் சமகால மகாஸிதிய்ய ஆய்வாளர் பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவின் மகாஸித் சிந்தனைகளை இக்கட்டுரை ஆராய்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஈரானிய ஏவுகணைத் துறையின் தந்தை
முஸ்லிம் பலவீனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்

Loading

“லெபனானில் வடக்கிலிருந்து தெற்குவரை, தெற்கிலிருந்து வடக்குவரை பயணிக்கும் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் பாதுகாப்புக்காக ஹஸன் தெஹ்ரானி மொகதாமுக்கு கடமைப்பட்டுள்ளனர்” என்று ஹிஸ்புல்லாஹ் பொதுச் செயலாளர் ஸய்யித் ஹஸன் நஸ்ரல்லாஹ் வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.
ஹிஸ்புல்லாஹ் தலைவரின் பாராட்டைப் பெற்ற, ‘ஈரான் ஏவுகணை திட்டத்தின் தந்தை’ என்ற சிறப்பு பெயரையும் பெற்ற ஹஸன் தெஹ்ரானி முகத்தம் குறித்த பார்வை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்நாடு முஸ்லிம் அரசியல்: சவால்களும் வாய்ப்புகளும்
2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து கவனப்படுத்தும் ஆய்வறிக்கை

Loading

ஏறத்தாழ ஆறு சதவிகித மக்கள் தொகை கொண்ட தமிழக முஸ்லிம்கள் தேர்தல் அரசியலில் தங்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை எப்போதும் பெற்றதில்லை என்பதை தரவுகள் தெரிவிக்கின்றன. சமூக நீதி, மதச்சார்பின்மை, எல்லோருக்கும் எல்லாம் என்ற உயரிய கொள்கைகள் முன்வைக்கப்பட்டாலும் அரசியலில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இங்கும் வழங்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை. இந்தியாவின் ஏனைய மாநிலங்களை விட சமூக களத்தில் முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் இருந்தாலும் அரசியல் களத்தில் ஏனைய மாநிலங்களின் நிலைதான் தமிழ்நாட்டிலும் நீடிக்கிறது.
முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான குரல்கள் ஒலித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் முஸ்லிம் கட்சிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர்களுக்கான வாய்ப்புகளையும் இந்த கட்டுரை பேசுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

கோட்டை அரண்களை உடைத்து.. மரண நதியைக் கடந்து…
றமளானில் ஈட்டப்பெற்ற 10 இஸ்லாமிய வெற்றிகள்

Loading

இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் றமளான் மாதத்தில் மாபெரும் வெற்றிகள் ஈட்டப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து 10 எடுத்துக்காட்டுகளைச் சுருக்கமாக முன்வைக்கும் அறபிக் கட்டுரையின் தமிழாக்கம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மால்கம் X-ம் கவிதையும்: ஓர் இரகசிய உறவின் கதை

Loading

சிறையிலிருந்து விடுதலையான பின், அடிமை வம்ச பெயரை தூக்கி எறிந்து, மால்கம் X ஆனார், அந்தக் கவிஞர். அமெரிக்க கறுப்பர்களின் விடுதலையை நோக்கி ஓடத் தொடங்கிய அந்த இளைஞனால், அடுத்து கவிதை இயற்ற முடியவில்லை.
ஆனால், சொல்லே தன் செயலாக வாழ்ந்த அவருக்கு, கவிதையின் இலக்கணமே மேடைப் பேச்சில் கவிந்தது. ஆற்றல் மிக்க பேச்சாளராக உருமாறிய மால்கமின் வார்த்தைகளில் தெறித்தது வெறும் அரசியல் முழக்கங்களோ, ஆவேச உணர்வுகளோ அல்ல. அவை கவிதைகள்.
போராட்ட நாயகனாக அறியப்படும் மால்கம் X கவிதையுடன் கொண்டிருந்த ஆச்சர்யமான உறவை விவரிக்கும் கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சமுக மாற்றத்தின் அடிப்படை

Loading

மாற்றம் என்பது சமூகம் தொடர்பான ஒன்றாக இருப்பினும் கூட சமூகத்தின் அஸ்திவாரமாக  இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதரிலும் இருந்து அது ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தம்மைத்தாமே மாற்றிக் கொள்ள வேண்டும். அனைவரிடமும் தத்தமது உடல்சார், உளம்சார், சிந்தனைசார், மன எழுச்சிசார் மாற்றங்கள் நிகழ வேண்டும். மாற்றங்கள் தனித்தனியாக ஒவ்வொரு தனிமனிதரிலும் நிகழத்தக்க மாற்றங்களே. இதுதான் சமூகத்தின் ஒட்டுமொத்த மாற்றமாகி மேம்பாட்டை நோக்கி நகரும்.

மேலும் படிக்க