கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தமிழ்த் திரை சொல்ல மறந்த கதை- ஹபீபி

Loading

தமிழ்த் திரை சொல்ல மறந்த கதை- ஹபீபி

ச. அகமது

திரையுலகில் முஸ்லிம்களை பெரும்பாலும் எதிர்மறையாக சித்தரிக்கும் நிலையில், அசல் தன்மையுள்ள கதைகளையும் கதை மாந்தர்களையும் பொது சமூகத்திற்கு அப்பட்டமாக ஒரு இருட்டு அறையில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.

ஹபீபி தமிழ் சினிமாவில் ஒரு நல்ல தொடக்கமாகட்டும். ஹபீபியின் கரங்களை பற்றிக் கொண்டு நட்பு பாராட்ட ஓராயிரம் விரல்கள் வரட்டும். உலக அரங்கில் அவ்விரல்கள், அக்கரங்கள் நமது வாழ்வியலின் காத்திரமான கதைகளுக்காக கரவொலி எழுப்பட்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

Gen Z அரசியலின் தொடக்கமா CJP?

Loading

டைனோர்சர்களை அழித்த விண்கற்களின் தாக்குதல் உட்பட பல பேரழிவுகளில் இருந்து தப்பித்த உயிரினங்களில் ஒன்று கரப்பான்பூச்சி. ஒவ்வொரு நிலப்பரப்பின் சூழலுக்கும் ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் இந்த உயிரினத்தின் திறன் அபாரமானது.
இந்திய இளைஞர்களை குறிப்பிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு எதிரொலியாக கரப்பான்பூச்சியின் பெயரால் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இணையத்தை பயன்படுத்தி பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் செல்வாக்கை பெற்று வரும் இந்த அணி, யாரை குறிவைத்து, எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தோற்றப் பின்னணியையும் அதன் செயல்பாட்டு முறையையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

கண்ணியம், சுயாதீனம், சுய நிர்ணய உரிமையுடன் ஆதிக்கத்தை நிறுவிய ஈரான்!

Loading

‘வெனிசுலா மாதிரி’யை அப்படியே மீட்டுருவாக்கம் செய்து அதன் மூலம் ஈரான் தலைமைத்துவத்தின் அரசியல், ராணுவ நடத்தைகளை மாற்ற வேண்டும் அல்லது ஒட்டுமொத்தமாக வீழ்த்த வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டம் முற்றிலும் சிதைந்துள்ளது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் காத்திரத் தன்மையும் அதன் கருத்தியல் பலமுமே அமெரிக்காவின் இத்தோல்விக்கான காரணமாகும்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலின் சமீபத்திய கூட்டு இராணுவ நடவடிக்கைகள் முழுமையான தோல்வி என்பதோடு, அவை ஈரானை அச்சுறுத்துவதிலும் பின்னடையச் செய்வதிலும் வெற்றி பெறவில்லை; அதிகாரச் சமநிலையை மாற்றியமைக்கவும் இல்லை. மாறாக, இஸ்ரேலை மிகப் பலவீனமான ஒரு வியூகம்சார் நிலைப்பாட்டுக்கே அவை தள்ளியுள்ளன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலத்தின் விடியலும் வரலாற்றின் பாடமும்: முஹர்ரம் தரும் புரட்சிகர சிந்தனைகள்

Loading

ஹிஜ்ரத் என்பது வெறும் இடம்பெயர்வோ அல்லது ஒரு இடத்தில் இருந்து தப்பித்துச் செல்லும் நிகழ்வோ அல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் உலகை மாற்றி அமைக்கும் பெரும் சக்தியாக மாறுவதற்கான மாபெரும் பாய்ச்சலாக அது அமைந்தது.
அதிகாரத்தின் நிழலில் நின்று அக்கிரமத்தையும் அநீதியையும் மேற்கொண்டவன் இறைநம்பிக்கையின் வலிமையோடு அழிக்கப்பட்டது முஹர்ரம் மாதத்தில்தான்.
சர்வாதிகாரத்தை தீர்க்கமாக எதிர்கொண்ட கர்பலா நிகழ்ந்ததும் இதே மாதத்தில்தான்.
கண்ணீர் சிந்துவதற்காக அல்ல, மாறாக, வரலாற்றை நெறிமுறை சார்ந்த வீரத்தோடு எதிர்கொள்ளும் பாடங்களையே ஹிஜ்ரத்யும் முஹர்ரமும் நமக்கு கற்றுத் தருகின்றன என்பதை விவரிக்கும் கட்டுரை.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

விசாரணை சிறைவாசிகளும் மறுக்கப்படும் மருத்துவ உரிமைகளும்

Loading

சிறையில் உள்ளவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். சமூகத்தில் உள்ளவர்கள் பெறும் அதே தரத்திலான சிகிச்சையை சிறைவாசிளும் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று சர்வதேச விதிகளும் நீதிமன்ற தீர்ப்புகளும் கூறுகின்றன.
ஆனால் நடைமுறையில் சிறைவாசிகளும் மருத்துவ சிகிச்சை தொடர்ந்து மறுக்கப்படுவதை செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. தண்டனையும் இன்றி விசாரணையும் இன்றி அல்லல்படும் விசாரணை சிறைவாசிகளும் இந்த உரிமை மீறல்களை எதிர்கொள்கின்றனர்.
விசாரணை சிறைவாசிகளுக்கு மறுக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை இந்த கட்டுரை அலசுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் வெறுப்புக் குற்றங்கள்
ஜூன்– ஆகஸ்ட் 2025க்கான அறிக்கை

Loading

இந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. சிவில் அமைப்புகள் இதனைக் குறித்து தொடர்ந்து அறிக்கை வெளியிடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. சிவில் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு (APCR) ஜூன் முதல் ஆகஸ்ட் 2025 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த வெறுப்புக் குற்றங்கள் குறித்த விபரங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. மத சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் வெறுப்புக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை என்ற அவலத்தையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்து முகங்கள், முஸ்லிம் முகமூடி

Loading

டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நாசிக் வழக்கின் பின்னணியில், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்ட குற்றமயமாக்கலின் சமூக, பொருளாதார, அரசியல் பாதிப்புகளை இக்கட்டுரை ஆராய்கிறது. குறிப்பாக, முஸ்லிம் அல்லாதவர்கள் செய்யும் குற்றங்களை முஸ்லிம் அடையாளங்களின் கீழ் மறைத்து, ஊடகங்களும் அதிகார அமைப்புகளும் எவ்வாறு ‘முஸ்லிம் குற்றவாளி’ என்ற பிம்பத்தைக் கட்டமைக்கின்றன என்பதை இது விவரிக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நான் செய்த குற்றம் என்ன? ஷர்ஜீல் இமாம்

Loading

சிஏஏ எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை சிறைவாசியாக ஆறு ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாம் தனது வழக்கு, கைதுக்கு காரணமான உரை, தனது பேச்சிற்காக அவர் வருத்தப்படுகிறாரா உள்ளிட்ட விசயங்களை இந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். வேறு சில வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் தான் இருந்த போதே டெல்லி கலவர வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, தனது குற்றம் என்ன?’ என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.
“எனது நண்பர்கள் என்னிடம் கொஞ்சம் நிதானமாக இருக்குமாறு சொன்னபோது, நான் நேரடியாகவே பதில் கூறினேன். சமூக அறிவியல் மற்றும் இந்தியக் குடியரசில் முஸ்லிம்களின் வரலாறு குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் என்ற முறையில், மக்களுக்காகப் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதன் மூலம் முன்னணியில் நிற்பது நமது பொறுப்பு. நாம் நமது பாதுகாப்பான சூழலிலிருந்து (Comfort zone) வெளியே வர வேண்டும்” என்றார் இமாம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தேர்தல் கணக்குகளுக்கு அப்பால் பாஜக-எதிர்ப்பு அரசியலின் எல்லைகள்

Loading

மேற்கு வங்கம், அஸ்ஸாம் முதலான மாநிலங்களின் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் விவாதங்களில் கவனிக்கத்தக்க விசயம், பாஜக பெற்ற வெற்றியின் அளவு மட்டுமல்ல; அந்த வெற்றியை விளக்குவதற்காக முன்வைக்கப்பட்ட அரசியல் பகுப்பாய்வுகளின் பலவீனமும்தான். மதச்சார்பற்ற மற்றும் மாநில கட்சிகளின் பெரும்பாலான எதிர்வினைகள், வாக்குரிமை பறிப்பு குறித்த குற்றச்சாட்டுகளையே மையமாகக் கொண்டிருந்தன.
ஆனால், தற்போதைய அரசியல் நெருக்கடி என்பது வெறும் வாக்குரிமை பறிப்பு சார்ந்தது மட்டுமல்ல. ‘இந்தச் சூழல், எதிர்க்கட்சி அரசியலின் தற்போதைய நிலையைப் பற்றி எதை வெளிப்படுத்துகிறது?’ என்பது அதைவிட முக்கியமான கேள்வியாகும். 
‘ஜனநாயகம் எவ்வாறு பலவீனப்படுத்தப்பட்டது?’ என்பதை விட,‘இந்துத்துவ அரசியலின் வீச்சை எதிர்கொள்ளக்கூடிய வலிமையான மக்கள் ஒற்றுமையையும், புதிய அரசியல் நம்பிக்கையையும் உருவாக்குவதில் மதச்சார்பற்ற மற்றும் மாநில அரசியல் ஏன் தோல்வியடைந்துள்ளது?’ என்பதே இந்தத் தேர்தல்களுக்குப் பின் எழவேண்டிய உண்மையான கேள்வியாகும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

திமுகவின் கொடுங்கனவான பிம்பச் சிறை

Loading

தமிழ்நாடு அரசியலுக்கும் கலைத் துறைக்குமான தொடர்பு காற்றுக்கும் மரத்துக்கும் உள்ள தொடர்பை ஒத்தது. அமெரிக்க நடிகர் ரொனால்ட் ரீகனுக்குப் பிறகு திரைத் துறையை அரசியலுக்கு கச்சிதமாகப் பயன்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம். அண்ணா, கருணாநிதியின் அர்த்தம் பொதிந்த ஆழமான அரசியல் வசனங்கள், அதனை திரையில் பிரதிபலித்த எம்ஜிஆர் உள்ளிட்ட நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு என திராவிட அரசியலின் வளர்ச்சியில் திரைத் துறையின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.
வெண் திரை என்ற மாயச் சுவரில் தோன்றி மறையும் கதாபாத்திரங்களை அச்சு அசல் மனிதர்களாக நம்பும் குணம் இப்போதும் தமிழக மக்களின் நனவிலியில் ஆழப்பதிந்துள்ளது. அதை அறியாமை என்று விலக்கிவிட்டு நகர்ந்து செல்ல முடியாது. அந்த அறியாமை ஆட்சி மாற்றத்துக்கு இட்டுச் செல்லும் – இட்டுச் சென்ற வரலாறுதான் தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு.

மேலும் படிக்க