கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

பிறை பார்த்தல்: நபிமொழியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

நபிமொழியின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு முடியுமான — இதனை விடப் பலமான — மற்றொரு சாதனம் காணப்படுமாயின், அச்சாதனம் எவ்விதத் தவறோ அனுமானமோ பொய்யோ இன்றி உரிய மாதம் தொடங்கிவிட்டதைக் காட்டக் கூடியதாகவும், கஷ்டமின்றிப் பெறக்கூடியதாகவும், முஸ்லிம் சமூகத்தின் சக்திக்குட்பட்டதாவும் காணப்படுமாயின், பழைய வழிமுறையைப் பிடிவாதமாக பற்றிப் பிடித்துக்கொண்டு நபிமொழியின் நோக்கத்தை ஏன் நாம் அசட்டை செய்ய வேண்டும்?

மேலும் படிக்க
இமாம் அல் கஸ்ஸாலி கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இமாம் கஸ்ஸாலியும் குவாண்டம் கொள்கையும் (1)

தோற்றங்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா? பொருட்கள் இறைவனின் விருப்பத்திற்கிணங்க செயலாற்றுகின்றனவா? மேலும், பொருட்கள் நிரந்தரமில்லாதவையா? அவற்றை இறைவன் தொடர்ச்சியாகப் படைப்பதால் மட்டுமே பொருட்கள் இருக்கின்றனவா? கஸ்ஸாலியின் கூற்றுப்படி, இவ்வனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில், ஆம். தோற்றமளிக்கும் பொருட்கள் நிரந்தரத்தன்மை கொண்டவையல்ல. அப்பொருட்களின் சார்புநிலைகள் காரணங்களோடு தொடர்புடையவை. ஒவ்வொரு நிகழ்வும் மற்றொரு நிகழ்வுக்குக் கொண்டு செல்பவையானாலும் அக்காரணங்கள் இறைவனுடைய பண்புகளின் விளைவாகும்! இறைவன் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் தொடர்ச்சியாகப் படைத்துக் கொண்டிருக்கிறான். அவன் படைப்பதை நிறுத்திவிட்டால் பொருட்கள் எதுவும் இருக்காது. எந்தப் பொருளும் இல்லாமலாகும்.

மேலும் படிக்க
இஸ்லாமிய கல்வி கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலனியமும் இஸ்லாமியக் கல்விமுறையின் வீழ்ச்சியும் – ஃபைசல் மாலிக்

முன்னுரை அளவிலாக் கருணையாளனும், இணையிலாக் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் CNNல் 2009ம் ஆண்டு வெளியான Generation Islam எனும் ஆவணப்படத்தில் ‘பாகிஸ்தானில் இஸ்லாமியக் கல்வி’ என்ற பகுதியில், “பழங்காலத்தில் அடைபட்டிருக்கும் ஒருவித இஸ்லாத்தையே பல மதரசாக்கள் பயிற்றுவிக்கின்றன. கணிதம், அறிவியல் போன்றவை பயிற்றுவிக்கப்படுவதில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு ஒரு என்ஜிஓ பணியாளரை “பாகிஸ்தானின் மதரசாக்களை நவீனமாக்கும் போரில் முன்னணியிலிருப்பவர்” [1] எனப் பாராட்டியது. மதரசாக்களை [2] நவீன யுகத்துக்கு முந்தைய முஸ்லிம் கலாச்சாரத்தின் எச்சமாகவும், சமகாலத்துக்குத் தொடர்பற்றவையாகவும், நவீன உலகிற்கு முரணானவையாகவும் சித்தரித்தது இந்த ஆவணப்படம். முஸ்லிம் உலகம் கல்வியில் எதிர்கொள்ளும் சவால்களுக்குக் காரணம் அது கல்வியை “நவீனமாக்காததே” என நாம் பரவலாக ஊடகங்களிலும் அறிவுஜீவி வட்டாரங்களிலும் அரசுசார் நிறுவனங்களிலும் [3] காணும் கருத்தைப் பிரதிபலிப்பதாக இப்படம் அமைந்தது. இப்படிச் சொல்வதன் வழியாக முஸ்லிம் உலகின் பல…

மேலும் படிக்க
ex muslim tamil கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

‘முன்னாள் முஸ்லிம்கள்’ உருவாகக் காரணமென்ன?

முன்னாள் முஸ்லிம்கள் (Ex-Muslims) என்ற பெயரில் உலவும் ஒருசிலர், இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தொடர்ச்சியாக எதிர்மறையான கருத்துகளையும் அவதூறுகளையும் பரப்பி வருவதை உங்களில் சிலர் கவனித்திருக்கக்கூடும். கருத்தாழம் ஏதுமின்றி, மிகவும் மேம்போக்கான குற்றச்சாட்டுகளையும், மீம் மாதிரியான கேலி கிண்டல்களையும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து, சாமானிய முஸ்லிம்களைச் சீண்டி மகிழ்வது என்ற அளவில் இவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன.

கல்வியாளர் சைமன் கோட்டீ எழுதிய The Apostates என்ற சமூகவியல் ஆய்வு நூல் இவர்களைப் பற்றிய முழுமையான பார்வையை வழங்குகிறது. 2015ல் வெளியான இந்நூல், பிரிட்டனிலும் கனடாவிலும் வசிக்கும் ‘முர்தது’கள் (முன்னாள் முஸ்லிம்கள்) தொடர்பானது. முர்ததுகள் தங்களைப் பற்றியும், இஸ்லாத்தை விட்டு வெளியேறும்போது அவர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகரமான அனுபவங்கள் பற்றியும் அளிக்கும் வாக்குமூலத்தை இந்நூல் பிரதானமாகப் பதிவுசெய்கிறது. அந்தப் புத்தகம் முன்வைக்கும் கருத்துகளின் அடிப்படையில் எமது பார்வைகளையும் சேர்த்து வழங்க முனைகிறது இந்த ஆக்கம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அறிவியல்வாதத்தின் மொழியியல் சிக்கலும் அதன் விளைவுகளும்!

1920களின் தொடக்கத்தில் பகுப்பாய்வுப் புலனறிவாதம் (Logical Positivism) என்ற ஒரு கருத்தியல் உருவானது. நேரடியாகவோ மறைமுகமாகவோ நம் ஐம்புலன்களால் அறிந்து நிரூபணம் செய்யப்படுபவை தவிர மற்ற அனைத்தும் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்றும், அதைப் பற்றி பேசுவதே பகுத்தறிவற்ற செயல்பாடு என்றும் அது கூறியது. வேகமான அறிவியல் வளர்ச்சி இக்கருத்தியலின் உருவாக்கத்துக்கும் பரவலுக்கும் காரணமாக அமைந்தது. பிறகு, அந்தக் கருத்தியலையே புலனறிவு கொண்டு அறிய முடியாத நிலையில், எப்படி அதை நாம் ஏற்பது என்ற வாதம் எழுந்தது. இந்தப் பின்னணியில், சுமார் 50 ஆண்டுகளில் அது கல்விப்புலங்களில் தன் செல்வாக்கை வெகுவாக இழந்தது. எனினும், அதன் எச்சம் இன்றும் அறிவியல்வாதம் (Scientism) எனும் வேடத்தில் பலரிடையே, குறிப்பாக நாத்திகவாதிகள் மத்தியில் வலம்வருகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

நாத்திகமும் மனித வாழ்வும் – ஒரு தத்துவார்த்த பார்வை

நாத்திகம் என்றால் என்ன? கடவுள் இல்லை என்ற ‘நம்பிக்கை’யைத்தான் நாம் நாத்திகம் என்கிறோம். கடவுள் இல்லை என்பது ஒரு நம்பிக்கையா? ஆதாரமின்றி அல்லது தர்க்க ரீதியான சரியான காரணமின்றி முன்வைக்கப்படும் கூற்றுகள் அனைத்துமே நம்பிக்கைகள்தானே!

கடவுள் இல்லை என்பதற்கு ஆதாரம் உண்டா என்று நாத்திகர்களிடம் கேட்டால், இருப்பதற்குத்தான் ஆதாரம் கொடுக்க முடியும்; இல்லாததற்கு ஆதாரம் கொடுக்கத் தேவையில்லை என்று அவர்கள் சொல்லக்கூடும். இவ்வாதம் ஏற்புடையதன்று. கடவுள் இல்லை என்று அவர்களுக்கு எப்படி தெரியும், அதைத் தக்க ஆதாரத்துடன் அவர்கள் முன்வைத்தால் நாமும் தெரிந்துகொள்ளலாம் அல்லவா!

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இறைவனின் இருப்பை அறிவியலால் நிரூபிக்க முடியுமா?

அறிவியல் சொல்வது மட்டுமே உண்மை என்று நம்புவது அறிவியல்வாதம் எனப்படுகிறது. இன்று நாத்திகர்கள் பலர் அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ குருட்டுத்தனமாக இந்தக் கொள்கையைப் பின்பற்றுகின்றனர். இதன் விளைவாக அவர்கள் எழுப்பும் அபத்தமான கேள்விகளுள் ஒன்று, இறைவன் இருக்கின்றான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா என்பது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்

காலம் என்று ஒன்று இருக்கிறதா? நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப்படி நிரூபிப்போம்? இன்னும் சொல்வதென்றால், காலம் என்றால் என்ன என்பதை எப்படி வரையறுப்போம்?

மேலும் படிக்க
கட்டுரைகள் 

அறிவியலும் குர்ஆனும் எப்போதாவது முரண்படுகிறதா? ஆம் முரண்படுகிறது.

பலரும் பிழையாக நம்பிவருவதற்கு முரணாக, அறிவியல் என்பது உண்மையின் பரிபூரணப் பிரதிநிதியொன்றும் கிடையாது. குறைந்தபட்சம் இன்றளவில் கிடையாது. என்றைக்கும் அவ்வாறு ஆகிவிடவும் முடியாது. அல்லாஹ்வுடைய வாக்கின் பரிபூரணத்தன்மையை கணக்கில் கொண்டு பார்த்தால், அறிவியல் போன்று இயல்பிலேயே பூரணத் தன்மையற்ற, பலவீனமான, மாறிக்கொண்டே இருக்கின்ற மனித உருவாக்கம் எதனுடனும் குர்ஆனுக்குள்ள பொருத்தப்பாடு குறித்து பொத்தாம் பொதுவான கூற்றுகளை மொழிவது முறையற்றதொரு செயலாகும்.

மேலும் படிக்க