காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

நாத்திகம் அறிவியலுக்கு எதிரானது!

கடவுள் இல்லை எனில் இந்தப் பிரபஞ்சம் தோன்றியதற்கான, பிரபஞ்சத்தின் இருப்பிற்கான காரணம் என்னவாக இருக்கும்? எந்தக் காரணமுமின்றி அது தானாகவே தோன்றியது, தானாகவே செயல்படுகிறது என்பார்கள் நாத்திகர்கள். படைப்பாளன், திட்டம், நோக்கம், அறிவு என எதுவுமின்றி இந்த மாபெரும் பிரபஞ்சம் தோன்றியது எனக் கொண்டால், இதில் சீர்மையும் (Perfection) தக்க வடிவமும் (Pattern) காணப்படுவது எப்படி? மட்டுமின்றி, இவையெல்லாம் என்றென்றும் இவ்வாறே இருக்கும் (Repetition for Inductive Reasoning) என்று நம்பி அதைக் கொண்டு அறிவியல் கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றவே! நாத்திகக் கண்ணோட்டத்தில் இது நம்பிக்கையா, மூடநம்பிக்கையா?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அறிவியலின் தத்துவம் – ஓர் அறிமுகம்

அறிவியல் என்றால் என்ன என்று கேட்டால் இயற்பியல், வேதியியல், உயிரியல் முதலானவை அறிவியல் என்றே பலரும் பதிலளிப்பார்கள். ஆம், இவையெல்லாம் அறிவியல் ‘பாடங்களே’ என்றாலும், ஏன் நாம் இவற்றை மட்டும் அறிவியல் என்கிறோம்? மற்ற பாடங்களையும் துறைகளையும் ஏன் அறிவியல் என்று அழைப்பதில்லை? இந்தத் துறைகளிடம் உள்ள எந்தத் தன்மை இவற்றை அறிவியல் என்று அடையாளப்படுத்துகிறது? யார் இந்தத் துறை அறிவியல் என்றும், இந்தத் துறை அறிவியல் இல்லை என்றும் முடிவு செய்வது? எதன் அடிப்படையில், எதை அளவுகோலாக வைத்து இந்த முடிவை எடுப்பது?

மேலும் படிக்க
sundar sarukkai seermai நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (3)

What is God? என்ற நூலில் ஜேக்கப் நீடில்மென் ஜென் ஞானியைச் சந்தித்த நிகழ்ச்சியைப் பகிர்ந்திருப்பார். ஜென் தத்துவ ஞானியான டி.டி. சுசுக்கியிடம் நீடில்மென் சுயம் என்றால் என்ன என்று கேட்பார். அதற்கு அவர் அதைக் கேட்பது யார் என்பார். உறுதியாக “நான்தான் கேட்கிறேன்” என்று நீடில்மென் பதில் சொல்வார். அப்படியானால், எங்கே என்னிடம் காட்டு பார்க்கிறேன் என்பார் சுசுக்கி.

சுயத்தைக் காட்ட முடியாது! இதை தர்க்கமுறைக்குள் கொண்டு வரமுடியாது. மெய்மை குறித்த ஐயமும் இப்படியான புதிர்களுக்குள் நம்மைக் கொண்டு செல்லும். வெளி, காலம் என்பது உண்மையான ஒன்றா? அதாவது, அனுபவபூர்வமாக உணர்வது வெளியின் நிதர்சனத்தைதானா? பிளேட்டோ, அரிஸ்டாட்டில் தொடங்கி வெளி, காலம் குறித்த புரிதல்கள் என்னவாக இருந்துள்ளன? அவற்றிலிருந்து நவீன அறிவியல் எந்த அளவிற்கு வேறுபடுகிறது என்பது பற்றி விரிவான விளக்கங்கள் நான்காம் அத்தியாயத்தில் உள்ளன. நீங்களும் வாசியுங்கள்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (2)

விஞ்ஞானிகள் பற்றிய கற்பிதங்களே அறிவியலாய் நமக்கு போதிக்கப்படுகின்றன. சுய முன்னேற்றத்திற்கான உந்துதலாகவே விஞ்ஞானிகள் பொதுச் சமூகத்திற்கு அறிமுகமாகியுள்ளார்கள். போற்றப்படும் விஞ்ஞானிகள் ஒருபுறமிருக்க, அவர்கள் முன்வைத்த கருத்தாக்கங்களைக் கொண்டு மேன்மேலும் அறிவியலை வளர்த்தெடுப்பதற்கு அறிவியலாளர்கள் மிக முக்கியமானவர்கள். அந்த வகையில், அறிவியலாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எப்படி அறிவியல் செய்கிறார்கள் என இரண்டாம் அத்தியாயம் முழுமையாக அலசுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

‘காலம்’ என்பதை முன்வைத்து நாத்திகர்களிடம் சில கேள்விகள்

காலம் என்று ஒன்று இருக்கிறதா? நாம் காலவோட்டத்தை உணர்கிறோம், கடந்த காலம் பற்றிய நினைவுகளைச் சுமக்கிறோம், எதிர்காலத்தை எதிர்நோக்குகிறோம், இன்னும் இது போன்று பலவற்றைச் சொல்லலாம். உலக இலக்கியம், கவிதை, கலை ஆகியவற்றை சுருக்கமாக ஒரு பார்வை பார்த்தாலே கூட காலம், காலவரம்புக்கு உட்பட்ட தன்மை, காலத்தால் அழிந்துபடும் தன்மை முதலிய கருத்துகள் மனிதர்களை எந்தளவு தூரம் ஆட்டிப்படைத்து வந்துள்ளது என்பதை அறிய முடியும். எனினும், காலம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை அறிவியல் ரீதியில் எப்படி நிரூபிப்போம்? இன்னும் சொல்வதென்றால், காலம் என்றால் என்ன என்பதை எப்படி வரையறுப்போம்?

மேலும் படிக்க