sundar sarukkai seermai நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (3)

Loading

What is God? என்ற நூலில் ஜேக்கப் நீடில்மென் ஜென் ஞானியைச் சந்தித்த நிகழ்ச்சியைப் பகிர்ந்திருப்பார். ஜென் தத்துவ ஞானியான டி.டி. சுசுக்கியிடம் நீடில்மென் சுயம் என்றால் என்ன என்று கேட்பார். அதற்கு அவர் அதைக் கேட்பது யார் என்பார். உறுதியாக “நான்தான் கேட்கிறேன்” என்று நீடில்மென் பதில் சொல்வார். அப்படியானால், எங்கே என்னிடம் காட்டு பார்க்கிறேன் என்பார் சுசுக்கி.

சுயத்தைக் காட்ட முடியாது! இதை தர்க்கமுறைக்குள் கொண்டு வரமுடியாது. மெய்மை குறித்த ஐயமும் இப்படியான புதிர்களுக்குள் நம்மைக் கொண்டு செல்லும். வெளி, காலம் என்பது உண்மையான ஒன்றா? அதாவது, அனுபவபூர்வமாக உணர்வது வெளியின் நிதர்சனத்தைதானா? பிளேட்டோ, அரிஸ்டாட்டில் தொடங்கி வெளி, காலம் குறித்த புரிதல்கள் என்னவாக இருந்துள்ளன? அவற்றிலிருந்து நவீன அறிவியல் எந்த அளவிற்கு வேறுபடுகிறது என்பது பற்றி விரிவான விளக்கங்கள் நான்காம் அத்தியாயத்தில் உள்ளன. நீங்களும் வாசியுங்கள்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (2)

Loading

விஞ்ஞானிகள் பற்றிய கற்பிதங்களே அறிவியலாய் நமக்கு போதிக்கப்படுகின்றன. சுய முன்னேற்றத்திற்கான உந்துதலாகவே விஞ்ஞானிகள் பொதுச் சமூகத்திற்கு அறிமுகமாகியுள்ளார்கள். போற்றப்படும் விஞ்ஞானிகள் ஒருபுறமிருக்க, அவர்கள் முன்வைத்த கருத்தாக்கங்களைக் கொண்டு மேன்மேலும் அறிவியலை வளர்த்தெடுப்பதற்கு அறிவியலாளர்கள் மிக முக்கியமானவர்கள். அந்த வகையில், அறிவியலாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், எப்படி அறிவியல் செய்கிறார்கள் என இரண்டாம் அத்தியாயம் முழுமையாக அலசுகிறது.

மேலும் படிக்க
அறிவியல் என்றால் என்ன? நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (1)

Loading

சீர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள அறிவியல் என்றால் என்ன? என்ற நூலை நண்பர் கொள்ளு நதீம் மூலமாகப் பெற்றேன். பொறுமையாக ஒவ்வொரு அத்தியாயமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை அறிவியல் குறித்துப் பல்வேறு புரிதல்கள் நமக்கு இருக்கலாம். பொதுவாக தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் அறிவியலை நாம் புரிந்து வைத்திருப்போம். ஆனால், உண்மையில் அறிவியல் என்றால் என்ன, எவையெல்லாம் அறிவியல், எவையெல்லாம் அறிவியல் இல்லை, அறிவியல் எப்படி இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்துகிறது, மனிதர்களுக்கு இவ்வுலகம் குறித்த புரிதலை எப்படி மாற்றியமைக்கிறது என்பன பற்றி மிக விரிவாக இந்நூல் விளக்குகிறது.

இந்தக் கட்டுரையை புத்தக விமர்சனமாக அன்றி, எனக்குப் புரிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் எழுதுகிறேன். இந்தப் பகுதி முதல் அத்தியாயம் பற்றியது. மீதமுள்ள அத்தியாயங்கள் குறித்து அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

மேலும் படிக்க
இமாம் அல் கஸ்ஸாலி கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இமாம் கஸ்ஸாலியும் குவாண்டம் கொள்கையும் (1)

Loading

தோற்றங்கள் நம்மை ஏமாற்றுகின்றனவா? பொருட்கள் இறைவனின் விருப்பத்திற்கிணங்க செயலாற்றுகின்றனவா? மேலும், பொருட்கள் நிரந்தரமில்லாதவையா? அவற்றை இறைவன் தொடர்ச்சியாகப் படைப்பதால் மட்டுமே பொருட்கள் இருக்கின்றனவா? கஸ்ஸாலியின் கூற்றுப்படி, இவ்வனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில், ஆம். தோற்றமளிக்கும் பொருட்கள் நிரந்தரத்தன்மை கொண்டவையல்ல. அப்பொருட்களின் சார்புநிலைகள் காரணங்களோடு தொடர்புடையவை. ஒவ்வொரு நிகழ்வும் மற்றொரு நிகழ்வுக்குக் கொண்டு செல்பவையானாலும் அக்காரணங்கள் இறைவனுடைய பண்புகளின் விளைவாகும்! இறைவன் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் தொடர்ச்சியாகப் படைத்துக் கொண்டிருக்கிறான். அவன் படைப்பதை நிறுத்திவிட்டால் பொருட்கள் எதுவும் இருக்காது. எந்தப் பொருளும் இல்லாமலாகும்.

மேலும் படிக்க