எழுபத்தைந்து வருட ஓட்டமென்பது இரு தலைமுறைக் காலங்களையும் தாண்டிய ஒன்று. அத்தகைய நெடிய காலத்தை வெறும் எண்களுக்குள் குறுக்கிவிட இயலாத அளவிற்கு நிகழ்வுகளும் படிப்பினைகளும் ஈகங்களும் நிறைந்த வாழ்க்கை கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ்வுடையது.
பல நாடுகளையும் நாட்டுத் தலைவர்களையும் அச்சுறுத்திவரும் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், ஸியோனிச இஸ்ரேலுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தவர் இமாம் அலீ ஃகாமினயீ. அவர் இமாம் ஃகுமைனீயை அடுத்து, ஈரான் இஸ்லாமியக் குடியரசை 35 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்தியவர் ஆவார்.
அலீ ஃகாமினயீயின் ஷஹாதத் உறுதிசெய்யப்பட்டதும், டிரம்பும் நெதன்யாஹுவும் ‘ஈரான் மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்கக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு’ என வெற்று கோஷம் முழக்கினர். அதேபோல், மக்களும் நாட்டை மீட்டெடுக்கத் தெருக்களில் கூடினர்; ஆனால் தற்போதைய அரசிடமிருந்தல்ல. மாறாக, ஈரான் இஸ்லாமியக் குடியரசை அழிக்கத் துடிக்கும் அமெரிக்க-இஸ்ரேல் ஸியோனிஸ்டுகளிடமிருந்து. ஃகாமினயீயின் ஷஹாதத்திற்குத் துக்கம் அனுசரித்துத் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியவாறே ‘அமெரிக்கா செத்தொழியட்டும்’ (Death to America) என்று மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.
ரஹ்பர் ஃகாமினயீ ஈரானை ஷா மன்னரின் கோரப் பிடியிலிருந்து மீட்டு, ஒரு பிராந்திய சக்தியாக மாற்றி, ஃபலஸ்தீன் விவகாரத்தை அதன் மூலோபாயக் கொள்கையின் மையமாக வைத்தவர். நவீன ஈரானை நீண்டகாலம் திறம்பட நிர்வகித்த தீரமிக்க தலைவர். அவரின் இந்த அரும்பணி பல தசாப்தங்களுக்கு மக்களின் நினைவுகளில் ஆழப் பதிந்திருக்கும். இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக!
இங்கே காணலாம் எல்லோரும்
என்ன ஆயிற்று எனக்கு என்று
ஹுசைனை இந்த மிருக நகங்கள் கிழிப்பதை
மனித குலத்தின் சிகர நபி சகிப்பார்களா?
அல்லாஹ்வின் மீது சத்தியமாக!
இறைவனின் திருத்தூதரின் மீதும்
அபூ தாலிபின் மகனான அலீயின் மீதும்
பரிசுத்த ஃபாத்துமத்துஸ் ஸஹ்றா மீதும்
நற்குண நாயகராம் என் அண்ணன்
ஹசன் அல்முஜ்தபா மீதும்…
என் சகோதரனே!
குதிரைகள் என் நெஞ்சின் மீது
ஏறி மிதிப்பதைப் பார்த்தீரே, எப்படி இருந்தது?
தென்கிழக்காசியச் சூழலில் இஸ்லாமியச் சிந்தனையின் போக்குகளை ஆய்வுசெய்ய வேண்டுமென்ற கருத்துகள் பலமடையும் சூழலிலேயே பேராசிரியர் ஃகைருத்தீன் ஜுனைது தனது Shapers of Islam in Southeast Asia என்று நூலை வெளியிட்டுள்ளார். இவர் தென்கிழக்காசிய இஸ்லாமியச் சிந்தனை மரபு தொடர்பான ஆய்வுப்புல உரையாடல்களில் பிரதான விற்பன்னராகக் கருதப்படுபவர். அறிவுசார் வரலாற்றாசியர் (Intellectual Historian). சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகம், அமெரிக்க ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் பேராசிரியாகப் பணியாற்றியவர். தென்கிழக்காசியச் சூழலில் இஸ்லாம் பற்றிய விரிவான பல நூல்களை எழுதியுள்ளார்.
தொழில்நுட்பங்கள் சக்தி வாய்ந்தது என்பதைத் தாண்டி, யார் அதனை கட்டுப்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் என நவீன மக்கள் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி வெள்ளை இனவெறி கருத்தாக்கங்களை பரப்பும்போது, கறுப்பர்களும் அதே தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தங்கள் கதைகளைச் சொல்ல வேண்டுமென மால்கம் விரும்பினார்.
தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் உந்துதல் வெறும் ஆர்வக்கோளாறால்ல. மால்கமைப் பொறுத்தவரை அது உயிர் வாழ்வதற்கான உத்தி.
தோற்றத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் முக்கியத்துவம் வழங்கிய மால்கம் X அதனை அதிகாரமாக்கலுக்கான கருவிகளாக கருதினார். மால்கமின் இந்த வித்தியாசமான பார்வையை இக்கட்டுரை முன்வைக்கிறது.
சிறையிலிருந்து விடுதலையான பின், அடிமை வம்ச பெயரை தூக்கி எறிந்து, மால்கம் X ஆனார், அந்தக் கவிஞர். அமெரிக்க கறுப்பர்களின் விடுதலையை நோக்கி ஓடத் தொடங்கிய அந்த இளைஞனால், அடுத்து கவிதை இயற்ற முடியவில்லை.
ஆனால், சொல்லே தன் செயலாக வாழ்ந்த அவருக்கு, கவிதையின் இலக்கணமே மேடைப் பேச்சில் கவிந்தது. ஆற்றல் மிக்க பேச்சாளராக உருமாறிய மால்கமின் வார்த்தைகளில் தெறித்தது வெறும் அரசியல் முழக்கங்களோ, ஆவேச உணர்வுகளோ அல்ல. அவை கவிதைகள்.
போராட்ட நாயகனாக அறியப்படும் மால்கம் X கவிதையுடன் கொண்டிருந்த ஆச்சர்யமான உறவை விவரிக்கும் கட்டுரை.
கரீம் ஜப்பாரி — உலகப் புகழ்பெற்ற எழுத்தணி மற்றும் ஒளிக் கலைஞர். ஒளியின் மீதும் எழுத்துகளின் மீதும் அவருக்குள்ள ஆர்வம், பண்டைய கூறுகளை நவீன வடிவமைப்பில் இணைக்கும் அவரது ஆர்வத்தால் உத்வேகம் கொள்கிறது.
எழுத்தணி வழியாகக் கலாச்சாரங்களையும் நாகரிகங்களையும் இணைக்கும் பாலங்களை அமைப்பதே அவரது கலையின் முக்கிய நோக்கம். அவர் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், பாரம்பரிய வடிவங்களையும் பாணிகளையும் தக்கவைத்துக்கொள்கிறார்.
தனித்துவமான கலை, எழுத்தணியின் எதிர்காலம் ஆகியவை குறித்து கரீம் ஜப்பாரியுடன் பைதுல் ஃபன் மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் வடிவம்.
ஆலி முஸ்லியார் வெளிப்படுத்திய வார்த்தைகள், மரணத்தைக் கண்டு அஞ்சாத அவரது தீரத்தைக் காட்டுகின்றன: “நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். விரைவில் நாங்கள் எதிர்கொள்ளப் போகும் மரண தண்டனையைப் பற்றிய எண்ணம் எங்களைச் சிதைக்கவில்லை. எங்களைப் போன்ற நிரபராதிகள் அனுபவிக்கும் இந்த வலியும் துயரமும் ஒருபோதும் வீண் போகாது என்ற சிந்தனையே எங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றன.”
இருபதாம் நூற்றாண்டின் மத்தியில், அமெரிக்காவின் இனவெறி நிறைந்த தெருக்களில் ஒரு குரல் எழுந்தது. அது வெறும் எதிர்ப்பின் குரல் மட்டுமல்ல, விடுதலையின் தத்துவத்தை மறுவரையறை செய்த ஓர் அறிவுசார் புரட்சிக் குரல். அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரின் பெயர், வரலாற்று இயங்கியலில் (Historical Dialectics) ஒரு முக்கியமான ஆளுமையாக இடம் பிடித்திருக்கிறது. ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை மட்டும் அவர் வழங்கவில்லை; மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையையும், அடையாளத்தையும், உரிமைகளையும் புதிய பரிமாணங்களுக்கு உயர்த்திய சிந்தனையாளராக அவர் திகழ்ந்தார்.
எழுத்துப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பிரத்யேக நேர்காணலில், திகார் மத்திய சிறையில் இருக்கும் 37 வயதான ஷர்ஜீல் இமாம் தனது சிறைவாசம், வாசிக்கும் புத்தகங்கள், சக கைதிகள், தனது பூனை நண்பர்கள் ஆகியோர் பற்றித் தம்முடைய எண்ணங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். வெளியுலக நிகழ்வுகளுடன் இணைய விரும்பும் அவர் தனது தாயின் உடல்நிலை குறித்துக் கவலையை வெளிப்படுத்துகிறார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து வியப்பும் உற்சாகமும் அடைந்துள்ளார். தனது முனைவர் பட்டத்தை நிறைவுசெய்ய முடியுமென்ற நம்பிக்கையில் இருக்கிறார்.