கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சிறையிலிருந்து… ஷர்ஜீல் இமாம்

மாணவச் செயற்பாட்டாளரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவருமான ஷர்ஜீல் இமாம், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராகப் போராடியதற்காக ஜனவரி 2020ல் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார். இன்றுடன் மூன்று வருடங்களை நிறைவுசெய்கிறார். திகார் சிறையிலிருக்கும் ஷர்ஜீல் இமாம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

புரட்சியாளர் ஃபைஸ் அஹ்மது ஃபைஸை இஸ்லாம் நீக்கம் செய்தல்

இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல முற்போக்கு வட்டாரங்களில் ஃபைஸை ஒரு கம்யூனிசக் கவிஞராகவே பார்க்கின்றனர். இந்தியாவிலுள்ள கம்யூனிசக் கட்சிகள் ஃபைஸின் கவிதைகளைக் கொண்டாடுவதுடன், தம் கொள்கைப் பிரச்சாரங்களுக்குத் தேவையான கவர்ச்சியான பல முழக்கங்களைக்கூட அவரின் கவிதைகளிலிருந்து வடித்தெடுத்துக்கொள்கின்றன. முதன்மையான இடதுசாரிக் கட்சிகள் தம் அரசியல் தேவைக்காக அவரின் கவிதைகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருகின்றன.

ஃபைஸின் புரட்சிகரக் கவிதைகளுக்கும், அவரின் சமயமான இஸ்லாத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று சிலர் கருது​கின்றனர்; வேறு சிலரோ கவிதைகளிலிருக்கும் இஸ்லாத்தின் செல்வாக்கைத் தற்செயலான ஒரு விபத்தாகக் காண்கின்றனர்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

1980 மொராதாபாத் பெருநாள் படுகொலை: நினைவேந்தல்

இந்தப் படுகொலையையும், ஊடகங்களில் இடதுசாரிகளால் அப்பட்டமாக இதற்கு வகுப்புவாதச் சாயம் பூசப்பட்டதையும் நாம் மறந்துவிட்டோம் எனும் உண்மை ஒருபுறமிருக்க, இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். பொதுவாக சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் புரிந்துகொள்ளவேண்டியது, காங்கிரஸும் அதன் இடதுசாரிக் கூட்டாளிகளும் மதச்சார்பற்றோராக இல்லை (அவர்கள் அவ்வாறு வாதிட்டபோதிலும்) என்பதைத்தான். ஒருபோதும் அவர்கள் அப்படி இருந்ததும் இல்லை. பாஜகவின் பக்கம் மட்டும் கவனம் செலுத்துவது மதச்சார்பற்ற கட்சிகள் எனச் சொல்லப்படுவனவற்றின் குற்றங்களை நமக்கு மறக்கடிப்பதோடு, அது காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்குமே அனுகூலமளிக்கும் என்பதை மறந்துவிடவேண்டாம்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

எழுபதாண்டுகளாக இந்திய முஸ்லிம்களை வஞ்சிக்கும் ‘இந்துக் குடியரசு’

கடந்த ஏழு தசாப்தங்களாக பல வழிகளில் இந்த அரசமைப்புச் சட்டம் சிறுபான்மையினரை, அதிலும் குறிப்பாக 20 கோடி முஸ்லிம்களை, இரண்டாந்தரக் குடிமக்ககளாக குறுக்குவதற்குப் பெரும் பங்காற்றியுள்ளது. முஸ்லிம்களின் வறுமை, கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை குறித்த பரிதாபகரமான புள்ளிவிவரங்கள் யாவும் அரசமைப்புச் சட்ட உருவாக்கத்தின்போது சிறுபான்மை விவகாரம் தொலைநோக்குடன் அணுகப்படவில்லை என்பதை மிகத்தெளிவாகப் புலப்படுத்துகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிறைச்சாலைகளில் மட்டும் இந்திய முஸ்லிம்களுக்குக் கூடுதல் ‘பிரதிநிதித்துவமா’?!

முஸ்லிம் மக்கள் தொகையைவிடவும் சிறைச்சாலைகளில் அவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. மஹாராஷ்டிரா, குஜராத், மேற்குவங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்கள் தம் மக்கள் தொகை வீதத்தைவிடவும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.

அஸ்ஸாம், கேரளா, பிஹார் (ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும்) ஆகிய மாநிலங்களில் மட்டுமே முஸ்லிம் சிறைவாசிகளின் வீதமும் மொத்த முஸ்லிம் மக்கள் தொகை வீதமும் பொருந்திப்போகின்றன.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

CAA எதிர்ப்புப் போராட்டம்: அலிகர் பல்கலைக்கழகத்தில் ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன?

இவ்வாண்டின் தொடக்கத்தில் அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற CAA, NRC எதிர்ப்புக் கூட்டத்தில் பேசியதற்காக JNU ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம் தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு பத்து மாதங்கள் கடந்து இன்றும் சிறையிலிருக்கிறார். அப்படி அவர் என்னதான் பேசினார் அன்று? அவருடைய முழுப் பேச்சின் தமிழாக்கம் இது.

மேலும் படிக்க