கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சிலருக்கான  சிறப்புச் சலுகையே மனிதநேயம்
விசாரணையின்றி ஆறாண்டுகளாக இந்தியச் சிறையில் வாடும் உமர் காலித்

Loading

இன்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் இரவு நேரச் செய்தி விவாதங்களில் காலித்தின் பெயரைத் தூற்றி, அவரை ஒரு முஸ்லிம் பயங்கரவாதி என்றும், தேச விரோதி என்றும் முத்திரை குத்துகின்றனர். மறுபுறம், இடதுசாரி ஆர்வலர்கள் தங்களின் போராட்டங்களில் அவரது பெயரை முழங்குவதோடு, அவரது முகம் பொறித்த டி-சர்ட்டுகளையும் அணிந்து கொள்கின்றனர்.
ஆறு ஆண்டுகளாக டெல்லி திஹார் சிறையில் விசாரணையும் இன்றி பிணையும் இன்றி அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், தனது சிறை அனுபவங்களை ‘தி கார்டியன்’ இதழுக்கு வழங்கிய பேட்டியின் மூலம் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

Gen Z அரசியலின் தொடக்கமா CJP?

Loading

டைனோர்சர்களை அழித்த விண்கற்களின் தாக்குதல் உட்பட பல பேரழிவுகளில் இருந்து தப்பித்த உயிரினங்களில் ஒன்று கரப்பான்பூச்சி. ஒவ்வொரு நிலப்பரப்பின் சூழலுக்கும் ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் இந்த உயிரினத்தின் திறன் அபாரமானது.
இந்திய இளைஞர்களை குறிப்பிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய சர்ச்சை கருத்துகளுக்கு எதிரொலியாக கரப்பான்பூச்சியின் பெயரால் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இணையத்தை பயன்படுத்தி பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் செல்வாக்கை பெற்று வரும் இந்த அணி, யாரை குறிவைத்து, எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தோற்றப் பின்னணியையும் அதன் செயல்பாட்டு முறையையும் அறிந்து கொள்வது அவசியமாகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் வெறுப்புக் குற்றங்கள்
ஜூன்– ஆகஸ்ட் 2025க்கான அறிக்கை

Loading

இந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. சிவில் அமைப்புகள் இதனைக் குறித்து தொடர்ந்து அறிக்கை வெளியிடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. சிவில் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு (APCR) ஜூன் முதல் ஆகஸ்ட் 2025 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த வெறுப்புக் குற்றங்கள் குறித்த விபரங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. மத சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் வெறுப்புக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை என்ற அவலத்தையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

தேர்தல் கணக்குகளுக்கு அப்பால் பாஜக-எதிர்ப்பு அரசியலின் எல்லைகள்

Loading

மேற்கு வங்கம், அஸ்ஸாம் முதலான மாநிலங்களின் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் விவாதங்களில் கவனிக்கத்தக்க விசயம், பாஜக பெற்ற வெற்றியின் அளவு மட்டுமல்ல; அந்த வெற்றியை விளக்குவதற்காக முன்வைக்கப்பட்ட அரசியல் பகுப்பாய்வுகளின் பலவீனமும்தான். மதச்சார்பற்ற மற்றும் மாநில கட்சிகளின் பெரும்பாலான எதிர்வினைகள், வாக்குரிமை பறிப்பு குறித்த குற்றச்சாட்டுகளையே மையமாகக் கொண்டிருந்தன.
ஆனால், தற்போதைய அரசியல் நெருக்கடி என்பது வெறும் வாக்குரிமை பறிப்பு சார்ந்தது மட்டுமல்ல. ‘இந்தச் சூழல், எதிர்க்கட்சி அரசியலின் தற்போதைய நிலையைப் பற்றி எதை வெளிப்படுத்துகிறது?’ என்பது அதைவிட முக்கியமான கேள்வியாகும். 
‘ஜனநாயகம் எவ்வாறு பலவீனப்படுத்தப்பட்டது?’ என்பதை விட,‘இந்துத்துவ அரசியலின் வீச்சை எதிர்கொள்ளக்கூடிய வலிமையான மக்கள் ஒற்றுமையையும், புதிய அரசியல் நம்பிக்கையையும் உருவாக்குவதில் மதச்சார்பற்ற மற்றும் மாநில அரசியல் ஏன் தோல்வியடைந்துள்ளது?’ என்பதே இந்தத் தேர்தல்களுக்குப் பின் எழவேண்டிய உண்மையான கேள்வியாகும்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்திய முஸ்லிம்கள் ஜனநாயகத்தில் பங்காளிகள்; ராஜதந்திரத்தில் பகடைகள் அல்ல!

Loading

இந்திய அரசியலுக்கு மட்டுமே உரித்தான விசித்திரமான முரண்பாடாக, உள்நாட்டில் முஸ்லிம்களைப் புறக்கணிக்கும் ஓர் அரசாங்கம், அண்மையில் பஹல்காமில் நிகழ்ந்த கொடிய தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கினை ‘வெளிக்கொணர்வதற்காக’ முஸ்லிம் முகங்கள் முதன்மையாக இடம்பெற்றுள்ள 48 உறுப்பினர்கள் கொண்ட ஒரு பரந்த, பலகட்சிப் பிரதிநிதிகள் குழுவை தற்போது ஒருங்கிணைத்துவருகிறது.
முஸ்லிம்கள் அந்தக் குழுவில் அங்கம் வகிப்பது பிரச்சினையல்ல. மாறாக, இதன் பின்னணியில் உள்ள பாசாங்குத்தனமான அடையாள அரசியலே சிக்கலானது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

இந்திய ஜனநாயகத்தின் உண்மைக் கதை

Loading

‘உலகின் மிகப்பெரும் ஜனநாயகம்’, ‘ஜனநாயகத்தின் தாய்’ போன்ற உயர்வு நவிற்சியுடன் கூடிய ஒப்பீடுகள் இந்தியா குறித்த உண்மையைக் கூறுகின்றனவா? உண்மையில் இல்லை. அரசியல் கட்சிகள், ஊடகங்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், சாதாரணக் குடிமக்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் அதிகப்படியான அச்சம் நிலவுகிறது என்பதே கள யதார்த்தமாகும். நடப்புநிலையைக் கேள்விகேட்கும் எவரும் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம்.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

மக்களவைத் தேர்தலும் தமிழ்நாட்டு முஸ்லிம்களும்

Loading

சமூக நீதியையும் சுயமரியாதை சிந்தனைகளையும் உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு இப்படியொரு நிலையா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அத்துடன் இப்போதுதான் இந்த நிலையா அல்லது இதற்கு முன்னரும் இதே நிலைதானா என்ற கேள்வியும் எழுகிறது.

மேலும் படிக்க
kashmir 370 tamil காணொளிகள் குறும்பதிவுகள் 

சட்டப்பிரிவு 370 நீக்கம்: வரலாறும் அரசியலும்

Loading

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மத்திய அரசு ரத்து செய்தது. இந்த முடிவு மக்களையோ, மாநிலங்களவையையோ கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் முறையான விவாதம்கூட இல்லாமல் ஒருதலைபட்சமாக மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் உச்ச நீதிமன்றம் பாஜக அரசின் இந்தச் செயலை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடங்கள்

Loading

தேர்தல் முடிவுகள்குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்தால் அதனை அதன் இறுதி அரசியல் அத்தியாயமாகக் கொண்டாடுவதும், பா.ஜ.க. வெற்றிபெற்றால் அதனை அதன் நிரந்தர வெற்றியாக அங்கலாய்ப்பதும் எதிர் தரப்பில் இப்போதும் தொடர்கிறது. பா.ஜ.க.வின் வெற்றியை ஒட்டுமொத்த வட இந்தியாவும் இந்துத்துவத்தின் பக்கம் சாய்ந்து விட்டதைபோல் சித்தரிப்பதும் ஏற்புடையதல்ல. அப்படியென்றால் ஐந்து வருடங்களுக்கு முன் இதே மாநிலங்களில் காங்கிரஸ் எப்படி வெற்றி பெற்றது?

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இ.ந்.தி.யா Vs. பா.ஜ.க.

Loading

தேர்தல் நெருங்கநெருங்க பா.ஜ.க. கொடுக்கும் நெருக்கடிகள் இன்னும் அதிகமாகும் என்பதை எதிர்க்கட்சிகளும் ஃபாசிசத்திற்கு எதிரான சித்தாந்தம் கொண்டவர்களும் உணர வேண்டும். மூன்று மாதங்களாக மணிப்பூர் பற்றியெரிந்தாலும் நாளை யார் வீட்டிற்கு அமலாக்கத்துறையை அனுப்பலாம் என்றுதான் ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் யோசித்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. இனி வரும் நாள்களில் அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ.வின் கொடுங்கரங்கள் இன்னும் அதிகமானோரை நோக்கி நீளலாம். அரசியல் கட்சிகளுக்கு அமலாக்கத்துறை, செயல்பாட்டாளர்களுக்கு என்.ஐ.ஏ., சிலருக்கு இரண்டும் என்ற மிரட்டல்-அரசியலை பா.ஜ.க. மேலும் உக்கிரப்படுத்தவே செய்யும்.

மேலும் படிக்க