சிலருக்கான சிறப்புச் சலுகையே மனிதநேயம்: விசாரணையின்றி ஆறாண்டுகளாக இந்தியச் சிறையில் வாடும் உமர் காலித்
![]()
இன்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் இரவு நேரச் செய்தி விவாதங்களில் காலித்தின் பெயரைத் தூற்றி, அவரை ஒரு முஸ்லிம் பயங்கரவாதி என்றும், தேச விரோதி என்றும் முத்திரை குத்துகின்றனர். மறுபுறம், இடதுசாரி ஆர்வலர்கள் தங்களின் போராட்டங்களில் அவரது பெயரை முழங்குவதோடு, அவரது முகம் பொறித்த டி-சர்ட்டுகளையும் அணிந்து கொள்கின்றனர்.
ஆறு ஆண்டுகளாக டெல்லி திஹார் சிறையில் விசாரணையும் இன்றி பிணையும் இன்றி அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், தனது சிறை அனுபவங்களை ‘தி கார்டியன்’ இதழுக்கு வழங்கிய பேட்டியின் மூலம் பகிர்ந்துள்ளார்.
