கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

அஹ்லுஸ் சுன்னாஹ்வின் பார்வையில் கர்பலா

முஹர்றம் 10ம் தேதி ஹிஜ்ரி 61ம் ஆண்டு (வெள்ளிக்கிழமை) இஸ்லாமிய வரலாற்றில் உச்சகட்ட கொடூரங்கள், சோகங்கள் நடந்தேறியதை வரலாற்றுப் பக்கங்கள் படம்பிடித்திருக்கின்றன. அந்தப் பக்கங்களைக் கடந்து செல்லுகையில் எப்படிப்பட்ட இரும்பு மனிதராக இருந்தாலும் அவரின் கண்கள் குளமாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் ஹிஜ்ரி 61ம் ஆண்டு கர்பலாவில் நடந்த படுகொலைகள் காஃபிர்களால் நடத்தப்பட்டதன்று; மாறாக, கலிமா மொழிந்த முஸ்லிம்களால் என்பது குறிப்பிடத்தக்கது. அதைவிட முக்கியமானது, அல்லாஹ்வின் தூதருடைய (ﷺ) ஈரக்குலையான அன்னை ஃபாத்திமாவின் ஈரக்குலை இமாம் ஹுசைன் (றலி) மீதும், நபியின் குடும்பத்தார் (அஹ்லுல் பைத்) மீதும் நடந்தேறிய மாபெரும் அநீதம் அது.

மேலும் படிக்க